அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை
Jul 18, 2025
முகப்பு
தன்னைவிட 15 வயசு சின்ன பொண்ணு... ரீல்ஸ் மனைவி மர்டரில் வெளியான ரியல் திருப்பம்..!
Jun 25, 2025 01:02 PM
458
ஆணாதிக்க கொலையா..? ரீல்ஸ் மனைவி மர்டரில் வெளியான ரியல் திருப்பம்..!
கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம் ஹிலியானா கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் புஜாரி. இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவரின் மனைவி ரேகா, சங்கரநாராயணாவில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றியுள்ளார்.
இந்தநிலையில், தனது மனைவி ரேகாவின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ததாக கணேஷ் புஜாரி, சங்கரநாராயணா காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர் சொன்ன காரணம்தான், பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. அதாவது, அவர் கொடுத்த வாக்குமூலத்தில் உள்ளது இதுதான்.
“எப்போ பார்த்தாலும் செல்ஃபோன் நோண்டிக்கிட்டே இருப்பா. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துக்கிட்டே இருப்பா. சொன்னா கேட்கமாட்டேங்கிறா. இதனால, பிரச்சனை ஆகி போலீஸ் ஸ்டேஷன் வரை பஞ்சாயத்து வந்துடுச்சி. இனிமே இன்ஸ்ட்டா ரீல்ஸ் பார்க்கமாட்டேன்னு போலீஸ்க்கிட்ட உறுதிமொழி கொடுத்தா” என சொல்ல, “இதெல்லாம் ஏற்கனவே தெரிஞ்சதுதான். இப்போ என்ன நடந்தது?” என கேட்டிருக்கிறார்கள், விசாரணை காக்கிகள்.
கடந்த 20 ஆம் தேதி வியாயக்கிழமை இரவு கணேஷ் புஜாரி தாமதமாக வீட்டு வந்துள்ளார். அப்போது, ரேகா செல்ஃபோனில் ரீல்ஸ்களை பார்ப்பதைக் கண்டு கோபமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், கணேஷ் புஜாரி கத்தியை எடுத்து ரேகாவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால், துடிக்க துடிக்க ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்துள்ளார் ரேகா.
இதுதான், கணேஷ் புஜாரி கொடுத்த வாக்குமூலம். இதன் அடிப்படையில், கணேஷ் புஜாரியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது, காவல்துறை. இதனைத் தொடர்ந்துதான் ரீல்ஸ் மோகத்தில் மனைவி, வெறிச்செயலில் ஈடுபட்ட கணவன் என்கிற ரீதியில் செய்திகள் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தன. ஆனால், இதையெல்லாம் தாண்டி ரேகாவின் பாயிண்ட் ஆஃப் வியூவிலுள்ள தகவல்களும் வெளிவர ஆரம்பித்துள்ளன.
கணேஷ் புஜாரி வெளியில் பெயிண்டிங் வேலை செய்துவருகிறார். ஆனால், ரேகாவோ வீட்டில் சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, பாத்திரங்கள் துலக்குவது என வீட்டுப்பணிகளையும் செய்துகொண்டு, பெட்ரோல் பங்கிலும் பணிபுரிந்துள்ளார். பெட்ரோல் பங்க் பணி என்பது, 8 லிருந்து 10 மணிநேரம் கால்கடுக்க நின்றுகொண்டே இருக்கும் பணி. அதுவும் பெட்ரோல் போடும் பணிகளில் ஈடும்படும்போது ஒரு நிமிடம்கூட செல்ஃபோனை பார்க்க முடியாது. அவசர அழைப்புகளைக்கூட அட்டெண்ட் செய்யமுடியாத சூழல்கள் ஏற்படலாம்.
எனவே, பெட்ரோல் பங்கில் நாள் முழுக்க கால் கடுக்க நின்று கஷ்டப்பட்டு உழைத்துவிட்டு, வீட்டிற்கு வந்து வீட்டு வேலைகளை செய்துகொண்டு, நடு நடுவே தனது ரிலாக்ஸேஷனுக்காக இன்ஸ்டா ரீல்ஸ்களைப் பார்த்திருக்கலாம். அதுவும், கணவன் வீட்டிற்கு தாமதமாக வந்ததாக அவரது வாக்குமூலத்திலேயே பதிவாகியுள்ளது. அப்படியிருக்க, அவர் வரும்வரை ரீல்ஸ் பார்த்துக்கொண்டிருந்துள்ளார். ஆனால், பிரச்சனையோ வேறு.
அதாவது, பெயிண்டரான கணேஷ் புஜாரிக்கு 42 வயது. ஆனால், ரேகாவுக்கோ 27 வயதுதான். அப்படிப்பார்த்தால், இருவருக்கும் 15 வயது வித்தியாசம். குடும்பச்சூழல் காரணமாக ரேகா திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால், கணவன் - மனைவி இருவருக்குள்ளும் கருத்து ரீதியிலான மோதல்கள் தொடர்ந்துகொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், அவரவர் வயதுக்கேற்ப அவரவர்கள் எதிர்ப்பார்க்கும் விஷயங்களை பூர்த்தி செய்யமுடியாததால், தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது, கணவன் மனைவிக்குள் வெறுப்பாக உருவெடுத்திருக்கிறது. இந்தநிலையில், வேலை நேரம் போக இன்ஸ்டாவில் நேரத்தை செலவிட்ட மனைவி ரேகா மீது, கணவன் கணேஷ் புஜாரிக்கு ஆத்திரம் தலைக்கேறியுள்ளது. இதனைத் தொடர்ந்தே இந்த படுகொலை நிகழ்ந்திருக்கிறது, என இன்னொரு கோணத்திலும் விசாரணை காக்கிகள் கூறியதாக சொல்லப்படுகிறது.
ஆக, இது ஒரு அப்பட்டமான அதிகார மனப்பான்மையோடு செய்யப்பட்ட ஆணாதிக்கக் கொலைதானே தவிர, வெறும் இன்ஸ்டா மோகத்தால் நடந்த படுகொலை அல்ல என்கிறார்கள், இன்னொரு கோணத்தில் சமூக ஆர்வலர்கள்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu