மாவட்டம்
ஆடையின்றி வம்பு செய்ததால் துடைப்பத்தால் அடித்த பெண்.. உயிரை மாய்த்துக் கொண்ட விவசாயி.!
Nov 20, 2025 10:49 AM
134
உயிரை மாய்த்துக் கொண்ட விவசாயி
விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகே பெண் துடைப்பத்தால் தாக்கியதில் ஆடையில்லாமல் நின்று வம்பு செய்தவர் அவமானம் தாங்காமல் விவசாயி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவத்தன்று வன்னிப்பேர் கிராமத்தை சேர்ந்த விவசாயி மணிகண்ட னுக்கும் , பக்கத்து வீட்டில் வசிக்கும் ரமேஷ் மனைவி சத்யாவுக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. அப்போது மணிகண்டன் தனது உடைகளை களைந்து நின்றதால் ஆத்திரம் அடைந்த சத்தியா, அவரை தெருவுக்கு இழுத்து வந்து துடைப் பத்தால் தாக்கியதாக கூறப்படுகின்றது.
இதனால் ஏற்பட்ட அவமானம் தாங்காமல் மணிகண்டன் மின்விசிறி கொக்கியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறி அவரது உறவினர்கள் திண்டிவனம் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu