RECENT NEWS

அதிமுக கூட்டத்துக்கு சென்று ஊர்திரும்பிய 25 பேர் விபத்தில் காயம்

முகப்பு

'மிஸ் டார்க் குயின்' ரேச்சல் மரணத்தில் அதிர்ச்சி தகவல்.. சிக்கியது முக்கிய ஆதாரம்..! திருமணமான 1 வருடத்தில் சோகம்

Jul 15, 2025 05:49 AM

325

ரேச்சல் மரணத்தில் அதிர்ச்சி தகவல்

"நீ கருப்பாக இருக்குற" என சிறுவயதிலேயே இருந்தே எழுந்த விமர்சனங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் மாடலிங் துறையில் தனது சாதனைகள் மூலம் பதிலடி கொடுத்தவர் தான் இந்த 23 வயது 'டார்க் குயின்' சங்கரபிரியா என்கிற சான் ரேச்சல்.

மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019, மிஸ் புதுச்சேரி 2020, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019, குயின் ஆப் மெட்ராஸ் 2022 போன்ற பல பட்டங்களை வென்ற இவர் , இந்தியா மட்டுமில்லாமல் 2023 ஆம் ஆண்டு ஆப்ரிக்காவில் நடைபெற்ற மிஸ் ஆப்ரிக்கா கோல்டன் இந்தியா அழகுப் போட்டியிலும் கலந்துகொண்டு இரண்டாவது இடம் பிடித்து அசத்தினார்.

புதுச்சேரி காராமணிகுப்பம் பகுதியில் வசித்து வந்த ரேச்சல், புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு மாடலிங் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வந்துள்ளார். இவர் 100 அடி சாலையில் வசித்து வந்த சத்யா என்பவரை காதலித்து வந்த நிலையில், ஒரு வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு ரேச்சலுக்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கணவர் வீட்டில் இருந்த ரேச்சல், 500 மீட்டர் தொலைவிலேயே வசித்து வரும் தனது தந்தை காந்திக்கு போன் செய்து தூக்க மாத்திரை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ள போவதாக கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ரேச்சலின் தந்தை, உடனே ரேச்சலின் கணவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது ரேச்சல் அதிக அளவில் தூக்கம் மற்றும் இரத்த கொதிப்பு மாத்திரைகளை உட்கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. உடனே தந்தை, ரேச்சலை மீட்டு புதுச்சேரி அரசுஅரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதனிடையே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற பிடிக்காமல் ரேச்சல் யாரிடமும் சொல்லாமல் தனது தந்தை வீட்டிற்கு சென்று தனது உடமைகளை எடுத்து கொண்டு தனது கணவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர் இரண்டு நாட்களில் ரேச்சலின் கை கால்கள் வீக்கம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மூலக்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ரேச்சல் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு உள்ள மருத்துவர்கள் ரேச்சலின் இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக குடும்பத்தினர் ரேச்சலை ஜிப்மர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரேச்சல் கடந்த 12 ஆம் தேதி இரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து ரேச்சலின் தந்தை காந்தி உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரேச்சல் ஒரு கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்த கடிதத்தில் தனது சாவிற்கு கணவரோ, மாமியாரோ காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு அழகி போட்டிக்காக செல்லும் ரேச்சல், அளவுக்கு அதிகமாக கடன் சுமையால் பாதிக்கப்பட்டதாக அந்த கடிதத்தில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

ரேச்சல் உயிரை மாய்த்துக் கொண்டதற்கு கடன் பிரச்னை மட்டும் தான் காரணமா? இல்லை கணவருக்கும் அவருக்கும் ஏதேனும் பிரச்சினையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஒரு பள்ளி..ஒரு மாணவர்.. ஒரு டீச்சர்... ஒரு H.M.. ரூ.1 லட்சம்  சம்பளம்..! நம் ஊரில் தான் அதிசய பள்ளி
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies