முகப்பு
சித்திக் கொடுமை பிளஸ் டூ மாணவி விபரீத செயல் என்ன ? தந்தை சித்தி கைது
Jul 04, 2025 01:17 PM
368
சித்திக் கொடுமை பிளஸ் டூ மாணவி விபரீத செயல் என்ன ? தந்தை சித்தி கைது
சென்னையில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மாணவியை கொடுமைப்படுத்தியதாக சித்தியையும், தந்தையையும் போலீசார் கைது செய்துள்ளனர்
சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் எலிகன் தெருவை சேர்ந்தவர் அமர்நாத். இவர் தனியார் கம்பெனியில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார்..
இவரது முதல் மனைவி சங்கீதாவுக்கு 21 வயதில் பிரிதிஷா, 17 வயதில் நந்தினி ஆகிய இரு மகள்கள் இருந்தனர்.
இளைய மகள் நந்தினி மாநகராட்சி பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனைவி சங்கீதா கருத்து வேறுபாடால் பிரிந்து சென்ற நிலையில் அமர்நாத் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மாற்றுத்திறனாளி பெண்ணான உஷா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
அமர்நாத் அவரது மகள்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு மாணவி நந்தினி வீட்டில் தூக்கிட்டு மூர்ச்சையாகி கிடப்பதாக கூறப்பட்டது.
உடனே உறவினர்கள் மாணவியை மீட்டு பெரியார் நகர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்..
பின்னர் நந்தினியின் உறவினர் நிர்மல் குமார் , மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மாணவியை அவரது சித்தி உஷா மற்றும் தந்தை கொடுமைப்படுத்தியதாக குற்றஞ்சாட்டினர்.
போலீஸ் விசாரணையில் சித்தி உஷாவின் கொடுமையால் மாணவி மேற்கொண்ட விபரீத முடிவு தெரியவந்தது.
மூத்த தாரத்து மகளான நந்தினியை திருமணம் ஆன நாளில் இருந்து சித்தி உஷா அடித்து உதைத்து, வீட்டு வேலை செய்ய வைத்து கொடுமை படுத்தி வந்தாக கூறப்படுகிறது.
இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட நந்தினி இது குறித்து தனது தந்தை அமர்நாத்திடம் முறையிட்டும் எந்த பயனும் ஏற்படவில்லை.
நாளுக்கு நாள் சித்தி கொடுமை அதிகரித்து வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி நந்தினி வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக சித்தி உஷா, தந்தை அமர் நாத் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu