முகப்பு
பிலாஸ்பூர் அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு
Nov 04, 2025 04:07 PM
47
6 பேர் உயிரிழப்பு
சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.
20-க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை மாலை 4 மணியளவில் பிலாஸ்பூர் - கத்வி வழித்தடத்தில் சென்ற புறநகர் ரயில், அவ்வழித்தடத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியுள்ளது. வேகமாக வந்து சரக்கு ரயிலின் பின்புறத்தில் மோதியதை அடுத்து புறநகர் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன.
விபத்துக்கு பின் ரயில்வே அதிகாரிகள், உள்ளூர் நிர்வாகம், தேசிய பேரிடர் மீட்புப் படை அடங்கிய மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் தொடர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையில், புறநகர் ரயில் சிக்னலை மீறி அந்த வழித்தடத்தில் சென்றதால் சரக்கு ரயிலின் பின்புறத்தில் மோதியதாகவும், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்து காரணமாக மின்சார வயரிங் மற்றும் சிக்னல் அமைப்பு பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும் , இதனால் அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பல விரைவு ரயில்களும் திருப்பி விடப்பட்டன.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu