முகப்பு
21 ஆண்டுகளுக்கு பிறகு.. நடிகர் விஜயகுமார் வீட்டில் திருடியவர் கைதானது எப்படி..?
May 21, 2025 04:39 AM
5599
21 ஆண்டுகளுக்கு பிறகு.. நடிகர் விஜயகுமார் வீட்டில் திருடியவர் கைதானது எப்படி..?
பிரபல நடிகர் விஜயகுமார் வீடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதியில் கை வரிசை.. சென்னையை அதிர வைத்த பிரபல கொள்ளையன்.. 21 ஆண்டுகளாக போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்து வந்த கொள்ளையன் போலீசாரிடம் சிக்கியது எப்படி? கொள்ளையனின் அதிர வைக்கும் பின்னணி குறித்து பார்க்கலாம்...
மதுராந்தகம் திருமலை வையாவூர், பட்டுவாரி நகரைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர் பட்டப்பகலில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பதில் பலே கில்லாடியாக இருந்துவந்துள்ளார். இவர் மீது திருமுல்லைவாயில், ஜெஜெ நகர், தலைமைச் செயலக காலனி, ஆவடி, மதுரவாயல் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதற்கிடையே கொள்ளையன் முனுசாமி, திருமுல்லைவாயில் ஒரு திருட்டில் ஈடுப்பட்டபோது போலீசார் அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அதன்பிறகு ஜாமீனில் வெளிவந்த முனுசாமி மீண்டும் பல்வேறு இடங்களில் தனது கைவரிசையை காட்டியுள்ளார்.
குறிப்பாக, 2015-ஆம் ஆண்டு பிரபல திரைப்பட நடிகர் விஜயக்குமார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த முனுசாமி, அங்கிருந்த தங்கம், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்ததோடு, விஜயகுமார் தனது மனைவி மஞ்சுளாவின் நினைவாக வைத்து இருந்த செல்போனையும் திருடி சென்றார்.. இந்த திருட்டு சம்பவம் அப்போது பெரும் பேசுப்பொருளாக மாறியிருந்தது.
ஜாமினில் வெளிவந்த முனுசாமி, நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக ஆஜராகாமல் இருந்ததால், அவருக்கு பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து தலைமறைவான முனிசாமியை பிடிக்க, போலீசார் பல்வேறு இடங்களில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில் மதுராந்தகத்தில் பதுங்கி இருப்பதாக, திருமுல்லைவாயில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார், செங்கல்பட்டு மாவட்டத்தில் வையாவூர் பகுதியில் பதுங்கி இருந்த முனுசாமியை சுற்றி வளைத்து அதிரடியாக கைதுசெய்தனர்.
முனுசாமி, பல்வேறு திருட்டு வழக்கில் ஈடுபட்டு தலைமறைவாகிய பின்னர் ஆட்டோ ஓட்டி வந்தது தெரிவந்தது. அதைத்தொடர்ந்து அவரிடம் மேலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
21 ஆண்டுகளாக போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்து தலைமறைவாக இருந்த பிரபல கொள்ளையன் முனுசாமியை போலிசார், அதிரடியாக கைதுசெய்து சிறையில் அடைத்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu