முகப்பு
“நீதான் வேணும்னு சொல்றா” காதலனை வரவழைத்து... மண்டையை உடைத்த கணவனின் ஃப்ரெண்ட்ஸ்!
Jun 25, 2025 12:35 PM
200
நெஞ்சை பூ போல் கொய்தவளே... அடுத்தவர் மனைவிக்கு ஆசைப்பட்டு பஞ்சர் ஆன கதை!
“அவ கண்ணை மூடி பார்த்துட்டு... நீதான் வேணும்னு சொல்றா. அவளுக்கு உன்னைதாண்டா புடிச்சிருக்கு. அதனாலதான், அவளை உங்கிட்டேயே அழைச்சுட்டு வந்து விட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டேன். கொஞ்ச நாள்லேயே என்னை தோற்கடிச்சுட்ட. அவ உனக்குத்தான். கிளம்பி வா” என ‘மின்னலே’ அப்பாஸ் ரேஞ்சுக்கு, அந்த பெண்ணின் கணவனும் அவரது நண்பர்களும் அழைக்க,
“என் பேரு சதீஷ்... அமெரிக்கால்லாம் இல்ல. அமிஞ்சிக்கரை லோக்கல். நான் உன்னை காதலிக்கிறேன். நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?” என மாதவன் ரேஞ்சுக்கு, அப்பெண்ணிடம் ஜொள்ளப்போகும் டயலாக்குகளையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு ரிகர்சல் செய்ய, ‘பூப்போல் பூப்போல் என் நெஞ்சை கொய்தவள்...மின்னலாய் மின்னலாய் என் பார்வை பறித்தவள்...’ BGM உள்ளுக்குள் ஊடுறுவி, சதீஷை அந்தரத்தில் பறக்கவைத்துக்கொண்டிருந்தது.
ஆனால், அப்படி அழைக்கப்பட்ட காதலனுக்கு நடந்த மண்டை உடைப்பு, ரத்தக்காயம், காவல்நிலைய ரணகள பஞ்சாயத்து குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
குமரி மாவட்டம் அருமனையை அடுத்த கடையாலூமூடு பகுதியைச் சேர்ந்தவர் மது. கூலித்தொழிலாளியான இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணுடன் திருமணம் நடந்து, ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில் காரோடு பகுதியைச் சேர்ந்த கிணறு வெட்டும் தொழிலாளி, சதீஷ் என்பவருடன் வேலை செய்ய செல்லும் இடத்தில் வைத்து மதுவுக்கு ஃப்ரெண்ட்ஷிப் ஏற்பட்டுள்ளது.
சதீஷ், ஏற்கனவே திருமணமாகி மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து வாழ்ந்து வருவதால், அதிக குடி பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். சதீஷுடன் சேர்ந்து மதுவும் போதைக்கு அடிமையாகி, நாளடைவில் சதீஷை தனது வீட்டிற்கு அழைத்து சென்று, சரக்கு அடிப்பதை வாடிக்கையாக்கி உள்ளார். அதாவது, வீட்டை ஒரு மினி Bar ஆக பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள்.
இதில், சதீஷுக்கும் மதுவின் மனைவி ஸ்வர்ணாவுக்கு இடையே அதீத நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சதீஷ் அடிக்கடி மதுவின் வீட்டிற்கு சரக்கு வாங்கி வந்து, மதுவை குடிக்க வைத்து சுயநினைவை இழக்க வைத்துவிட்டு, ஸ்வர்ணாவுடன் மனம் விட்டு பேச ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் Glassmate நண்பன் சதீஷ் குறித்து, மதுவிற்கு தெரிய வர, சதீஷிடம் வீட்டிற்கு வருவதை நிறுத்துமாறு கூறி கண்டித்து உள்ளார். மேலும் ஸ்வர்ணாவிடமும் தகராறு செய்துள்ளார். ஆனால், "முகநக நட்பது நட்பன்று, நெஞ்சத்து அகநக நட்பது நட்பு" என்னும் அளவுக்கு சதீஷ் - ஸ்வர்ணாவின் நட்பு ஸ்ட்ராங் ஆனதால், இருவரும் அடிக்கடி வெளியே சந்தித்து தங்களது நட்பை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் செய்வதறியாது திகைத்த கணவன் மது, இதனை தனது பிற நண்பர்களிடம் கூறி உள்ளார். “அவனையே கூட்டிக்கிட்டு போயி வீட்டுல நல்லா குடிச்சுட்டு இப்போதான் எங்க ஞாபகம் வருதாடா” என மதுவை குத்திக்காட்டிவிட்டு, சதீஷிற்கு சரியான பாடம் புகட்ட திட்டம்போட்டுள்ளார்கள்.
மதுவின் நண்பர்களான வீரமணி, ஷாஜி, பிரசாத், விவேக் ஆகியோர் சேர்ந்து சதீஷின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு, “ஸ்வர்ணா உன்னுடன் தான் வாழ விரும்புவதாக கூறி அடம் பிடித்து வருகிறாள். அவளிடம், எவ்வளவு எடுத்துக் கூறியும் பிடிவாதமாக இருக்கிறாள். ஆகையால், அவளை உன்னுடன் அனுப்பி வைக்கிறோம். வந்து அழைத்துச் செல்” எனக் கூறி, படப்பச்சை பகுதிக்கு அழைத்து உள்ளனர்.
இதை இட்லின்னு சொன்னா சட்னியே நம்பாது. அப்படியிருக்க, மதுவும் அவரது நண்பர்களும் சொன்னதை சதீஷ் நம்பித்தான், அந்த மின்னலே பட ‘பூ போல்...’ பாடலின் பி.ஜி.எம்மோடு, ஆட்டோவை எடுத்துக்கொண்டு, தனது நண்பர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு படப்பச்சை பகுதிக்கு வந்துள்ளார்.
அங்கு, சதீஷ் வந்ததும் மதுவின் நண்பர்கள் நான்கு பேரும் அங்கு மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை பயன்படுத்தி, மின்னல் வேகத்தில் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத சதீஷின் நண்பர்கள் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். அவர்களின் ஒருவர் நேராக அருமனை காவல்நிலையத்திற்கு ஓடிச்சென்று நிலைமையை கூறி போலீசாரை உதவிக்கு அழைத்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதற்குள், சதீஷின் மண்டையை உடைத்துவிட்டு, மதுவின் நண்பர்கள் நான்கு பேரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து, படுகாயங்களுடன் உயிருக்கு போராடியபடி கிடந்த சதீஷை, போலீசார் மீட்டு, குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவர் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, தாக்குதல் நடத்திய நான்கு பேரில் ஷாஜி, பிரசாத், வீரமணி ஆகிய மூன்றுபேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய விவேக்கை தேடி வருகின்றனர்.
‘நெஞ்சை பூ போல் கொய்தவளே...’ என அடுத்தவர் மனைவிக்கு ஆசைப்பட்டு அதுவும் அவரது நண்பர்களே அழைத்து சேர்த்துவைப்பதாக சொன்னதை நம்பிச் சென்றவர், நெஞ்சு பஞ்சர் ஆகாத குறையாய் உயிர் தப்பி ஓடிவந்த
இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu