முகப்பு
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிப்பதாக ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
Jun 26, 2025 05:25 AM
29
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிப்பதாக ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக பாகிஸ்தானை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடுமையாக விமர்சித்தார்.
சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், பாகிஸ்தானை நேரடியாகக் குறிப்பிடாமல், சில நாடுகள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை கொள்கையாகக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
பயங்கரவாதமும் அமைதியும் ஒருபோதும் இணைந்து பயணிக்க முடியாது என்றும், பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாடுகளுக்கு இடையே ஒன்றுபட்ட கடுமையான நடவடிக்கை தேவை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
எந்த ஒரு பயங்கரவாதச் செயலும் மிகப்பெரிய குற்றமாகும் என்றும், அதை நியாயப்படுத்த முடியாது என்றும், அமைதி, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை பற்றாக்குறை ஆகியவை இந்தப் பிராந்தியம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu