RECENT NEWS

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட முதல் ஆழ்கடல் ஆய்வுக் கப்பல் நிஸ்டார்..! அதிகாரப்பூர்வமாக கடற்படையில் இணைப்பு..

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட முதல் ஆழ்கடல் ஆய்வுக் கப்பல் நிஸ்டார்..! அதிகாரப்பூர்வமாக கடற்படையில் இணைப்பு..

Jul 18, 2025

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட முதல் ஆழ்கடல் ஆய்வுக் கப்பல் நிஸ்டார்..! அதிகாரப்பூர்வமாக கடற்படையில் இணைப்பு..

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட முதல் ஆழ்கடல் ஆய்வுக் கப்பல் நிஸ்டார்..! அதிகாரப்பூர்வமாக கடற்படையில் இணைப்பு..

Jul 18, 2025

முகப்பு

காதலனை சிக்க வைக்க விரித்த வலையில் சிக்கிய இளம்பெண் 21 முறை வெடிகுண்டு மிரட்டல்!

Jun 25, 2025 03:57 PM

239

காதலனை சிக்க வைக்க விரித்த வலையில் சிக்கிய இளம்பெண்
21 முறை வெடிகுண்டு மிரட்டல்!

காதலனை சிக்க வைக்க பெண் போட்ட பிளான் 21 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அம்பலம்

காதலனை சிக்க வைக்க போலி இமெயில் ஐடிகளை உருவாக்கி, பெண் ஒருவர், நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கடந்த சில தினங்களுக்கு முன் அகமதாபாத் ஷிலாஜில் உள்ள திவ்யஜோத் பள்ளிக்கு வார இறுதியில் பல வெடிகுண்டு மிரட்டல் இமெயில்கள் மூலம் வந்தன. அந்த இமெயிலில் வளாகத்தில், வெடிபொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும், பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை கண்டு அச்சமடைந்த பள்ளி நிர்வாகம், உடனடியாக காவல்துறைக்கும், கல்வித் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து விரைவாகச் செயல்பட்ட காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்களை வைத்து, வளாகத்தில் பல மணி நேரம் முழுமையான சோதனை நடத்தினர். ஆனால் அப்பகுதில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இதற்கு முன்பாக ஜெனீவா லிபரல் பள்ளிக்கு அனுப்பப்பட்ட மிரட்டல் இமெயிலும், இதுவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானது என தெரியவந்தது. இதனால் போலீஸ் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக குஜராத் மாநிலத்தில் சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள ரேனி ஜோஷில்டா( René joshlida) என்ற பெண்ணின் இமெயில் ஐடியிலிருந்து, இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து குஜராத்திலிருந்து பெண் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் சென்னையில் உள்ள கேகே நகர் போலீசார் உதவியுடன், அந்தப் பெண்ணின் வீடு மற்றும் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது தந்தை வீடு ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டனர். மேலும் இதுதொடர்பான விசாரணைக்காக, ரேனி ஜோஷில்டா மற்றும் அவரது தந்தை ஆல்ட்வின் ஜோசப் ஆகிய இருவரையும் விமானம் மூலம் குஜராத்திற்கு தனிப்படை போலீசார் அழைத்துச் சென்றனர்.

அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது. பெண் ஐடி ஊழியரான ரேனி ஜோஷில்டா, பெங்களூரில் ஒரு சந்திப்பின்போது, சக ஊழியரான திவிஜ் பிரபாகர் என்பவருடன் ஒரு தலைப்பட்சமாக காதல் ஏற்பட்டுள்ளது. இதனை ரேனி ஜோஷில்டா, திவிஜ் பிரபாகரிடம் கூறியிருக்கிறார். ஆனால் பிரபாகர், ஜோஷில்டாவின் காதலை ஏற்க மறுத்ததுடன், வேறு ஒரு திருமணத்தை செய்து கொண்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த ஜோஷில்டா, பிரபாகரை எப்படியாவது பழிவாங்க வேண்டுமென திட்டம் தீட்டியிருக்கிறார். அதைத்தொடர்ந்து பிரபாகரை, பெரிய சிக்கலில் சிக்க வைப்பதற்காக, தான் படித்த ரோபாட்டிக் பொறியியல் படிப்பை பயன்படுத்திருக்கிறார். தொழில் நுட்ப அறிவின் மூலம் போலியாக இமெயில் ஐடிகளை உருவாக்கி, இந்தியா முழுவதும் 12 மாநிலங்களில் 21 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்திருக்கிறார்.

கடந்த ஜூன் மாதம் தொடங்கி, 20ஆம் தேதி வரையில், முக்கியமான நிகழ்வுகள் அவ்விடங்களில் நடைபெறுவதையொட்டி, வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால், 12 மாநிலங்களிலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக மத நிகழ்வுகள் தொடர்பாகவும் முக்கிய தலைவர்கள் வருகை அடிப்படையில் வெடிகுண்டு மிரட்டல்கள் இமெயில்களாக அனுப்பப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, குஜராத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாகவும், ஏர் இந்தியா விமான விபத்தில் 270 பேர் உயிரிழப்பதற்கு தான் காரணம் என பொறுப்பேற்கும் வகையிலும், வெடிகுண்டு இமெயில் மிரட்டல்களை ரேனி ஜோஷில்டா அனுப்பியது தெரியவந்துள்ளது. இதில் அவரது காதலன் திவிஜ் பிரபாகரை சிக்க வைக்கும் வகையில், பிரபாகர் பெயரில் இமெயில் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது

இதற்காக விபிஎன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, டார்க் வெப் மூலமாக தன்னை கண்டுபிடிக்க முடியாத வகையில், இதுப்போன்று போலியாக வெடிகுண்டு இமெயில் மிரட்டலை 12 மாநிலங்களில் அனுப்பியது தெரியவந்துள்ளது. இதையடுத்து அகமதாபாத் சைபர் கிரைம் போலீசார், வழக்கு பதிவு செய்து தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது மண்டையில் இருக்கும் கொண்டையை மறந்துவிட்டேனே என்ற காமெடி போல, போலி இமெயில் வந்த கணினியில், தனது உண்மையான இமெயில் ஐடி-யை பயன்படுத்தியதால், ரேனி ஜோஷில்டா சைபர் கிரைம் போலீசாரிடம் வசமாக சிக்கினார். இதையடுத்து அவரை அகமதாபாத் சைபர் கிரைம் போலீசார் கைதுசெய்து, மேலும் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஒரு தலை காதலில் காதலனை பழிவாங்குவதற்காக, போலி இமெயில் ஐடி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, நாட்டையே மிரள வைத்த பெண் பொறியியல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஆசை ஆசையாய் காத்திருந்து வீட்டில் அடம்பிடித்த இளைஞர்..! ஒன்றரை மாதத்தில் சோகம்..! உயிர் கொடுத்தவருக்கு உயிர் இல்லை..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies