BIG STORIES
தினமும் ஒரு பவுன் நகை..அலட்சிய வீட்டு ஓனர்... திருட்டு வேலைக்காரி..! 14 சவரனை தூக்கியது எப்படி ?
Jun 26, 2025 01:19 AM
334
தினமும் ஒரு பவுன் நகை..அலட்சிய வீட்டு ஓனர்... திருட்டு வேலைக்காரி..! 14 சவரனை தூக்கியது எப்படி ?
சென்னை நொளம்பூரில் ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி வீட்டில் பணிக்கு சேர்ந்து 14 நாட்களாக தினமும் ஒரு நகையை திருடிச்சென்றதாக வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, நொளம்பூர், அண்ணாமலை அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் 65 வயதான ரங்கராஜ். மத்திய அரசு நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்பொரேஷன் லிட் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவரது வீட்டில் ரிங்குமுகர்ஜி என்ற பெண் கடந்த 8-ம் தேதி அன்று வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளார்.
அவர் வேலைக்குச் சேர்ந்த நாளில் இருந்து நகைகளும், பணமும் வீட்டில் பீரோவில் குறையத் தொடங்கியுள்ளது. இது தாமதமாகவே வீட்டின் உரிமையாளர்களுக்கு தெரியவந்துள்ளது. வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட பீரோக்கள் இருந்ததால் நகைகள் வேறு பீரோவில் இருக்கலாம் என அலட்சியமாக இருந்துள்ளனர்.
கடந்த 23-ம் தேதி அனைத்து பீரோக்களில் உள்ள தங்க நகைகளையும் சரிபார்த்தபோது, அதில் 14 சவரன் தங்க நகைகள் மற்றும் 50,000 ரூபாய் பணம் திருடு போனது தெரியவந்தது. புதிதாக சேர்ந்த பணிப்பெண் ரிங்கு முகர்ஜியும் ஓரிரு நாட்கள் வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
நொளம்பூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான போலீசார், வீட்டில் வேலைக்கார பெண் ரிங்குமுகர்ஜியிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள அந்தப் பெண்ணின் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அவரது வீட்டிலிருந்து 14 சவரன் தங்க நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம் மீட்கப்பட்டது.
கடந்த 8-ம் தேதி அன்று வேலைக்கு சேர்ந்த முதல் நாளில் வீட்டை சுத்தம் செய்யும் போது பீரோவின் மாற்றுச் சாவி அதற்கு அருகிலேயே இருந்துள்ளதை கவனித்துள்ளார். ஒரு சாவியை மட்டும் உரிமையாளர்கள் பாதுகாப்பாக வைத்துவிட்டு மற்றொரு சாவியை பீரோவின் அருகிலேயே வைத்து சென்றது அவருக்கு வசதியாக போய்விட்டது.
அந்த சாவியை எடுத்து துணிச்சலாக பீரோவை திறந்துள்ளார். அதில் நிறைய நகைகளும் பணமும் இருப்பதை கவனித்த ரிங்கு முகர்ஜி முதல் நாளே மொத்தமாக எடுத்துக் கொண்டால் சிக்கி விடுவோம் என நினைத்து ஒரு சவரன் நகையை மட்டும் முதல் நாள் எடுத்துச் சென்றுள்ளார். மறுநாள் வழக்கம்போல் வேலைக்கு வந்தபோது வீட்டின் உரிமையாளர்களுக்கு அது குறித்து தெரியவில்லை. அன்றைய தினமும் பீரோவின் சாவி அருகிலேயே இருந்துள்ளது. மீண்டும் திறந்து இரண்டாம் நாளும் மற்றொரு சவரன் நகையை எடுத்துச் சென்றுள்ளார். இப்படி 14 நாட்கள் தொடர்ந்து 14 சவரன் நகையை திருடியதாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் ரிங்கு முகர்ஜி.
வீட்டில் உரிமையாளர்கள் அலட்சியமாக பீரோ சாவியை பணியாளர் கண்ணில் படும் இடத்தில் வைத்திருந்ததையும், ஆரம்பத்தில் வீட்டின் உரிமையாளர்கள் திருடுப் போன நகைகள் குறித்து பொருட்படுத்தாமல் இருந்ததாலும் தான் தொடர்ச்சியாக திருடியதாக ரிங்கு முகர்ஜி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட ரிங்குமுகர்ஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu