BIG STORIES
குளு குளு மின்சார ரெயில் பயணித்தவர்கள் கூறும் குறைகளும்.. நிறைகளும்..!
Jun 26, 2025 01:49 AM
131
குளு குளு மின்சார ரெயில் பயணித்தவர்கள் கூறும் குறைகளும்.. நிறைகளும்..!
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரத்திற்கு முதல் ஏசி மின்சார ரெயில் இயக்கப்பட்ட நிலையில் ரெயில் கட்டணத்தை குறைக்கவும் வசதிகளை மேம்படுத்தவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் மெட்ரோ ரெயில் மக்களுக்கு குளு வசதியுடன் கூடிய விரைவான பயணத்தை வழங்கி வருகின்றது. அதே போல சென்னையில் இருந்து செங்கல்பட்டிற்கு குளு குளு வசதியுடைய மின்சார ரெயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்தது.
அதன் படி குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரெயில் இன்று காலை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்பட்டது. வழக்கமாக ரெயில்களில் குறைந்த பட்ச கட்டணமாக 35 ரூபாயும் அதிகபட்ச கட்டணமாக 105 ரூபாயும் வசூலிக்கப்பட்டது. கூட்டமின்றி காணப்பட்ட ரெயிலில் ஒரு சிலர் மட்டுமே பயணித்தனர். அந்த ரெயிலில் பயணித்த பயணிகளின் ஒவ்வொருவரும் ஒரு குறைகளை தெரிவித்தனர்.
“டிக்கெட் வாங்கும் போது தாம்பரம் வரை தான் செல்லும் என கூறியிருக்கலாம்., ஆனால் செங்கல்பட்டு வரைக்கான முழு கட்டணத்தை வாங்கி கொண்டு., தாம்பரம் வரை தான் செல்லும் எனக்கூறுவதும், தாம்பரத்தில் இருந்து சாதாரண மின்சார ரயிலில் முதல் வகுப்பில் செல்லலாம் என சொல்வது எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இருக்கையில் அமர்வதற்கு குசன் இல்லை என்றும் சாதாரண இரும்பு இருக்கை மட்டுமே உள்ளது” என்று அங்கலாய்த்தார் ஒரு பயணி
இந்த ரெயில் மெட்ரோ ரெயில் மாதிரி இல்லை அது அடுத்தடுத்த ஸ்டேசனுக்கு உடனே வந்திரும், அதோட ஸ்பீடு என்ன இது அதுகிட்ட வராது, பயணச்சீட்டு கட்டணம் அதிகம் என்றார் பெண் பயணி ஒருவர்
சாதாரண மின்சார ரெயிலில் டிக்கெட் எடுத்த பயணி ஒருவர், ஏசி மின்சார ரெயிலை பார்த்ததும் செங்கல்பட்டு வரை செல்ல ஏசி ரெயிலுக்கும் 105 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்த நிலையில் , ஏசி ரெயில் தாம்பரம் வரைதான் செல்லும் என்றதால் டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
இந்த ஏ.சி. மின்சார ரயிலின் நேரம் மாற்றி அமைக்கப்பட்ட விவரத்தை பயணிகளுக்கு சரியாக கொண்டு சேர்ப்பதோடு , டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக விளக்கம் அளித்த சென்னை கோட்ட அதிகாரி ஒருவர், பயணிகள் தெரிவிக்கும் குறைகளை அந்தந்த பயணச்சீட்டு பரிசோதகர்கள் மூலமாக வர்த்தக பிரிவு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, அதற்கு உண்டான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu