BIG STORIES
PACL பைனான்சுக்கு ரூ 4 கோடி வசூலித்த பெண் தீக்குளித்த பின்னணி..! மிரட்டியதாக 7 பேர் கைது
Jun 26, 2025 01:12 AM
153
PACL பைனான்சுக்கு ரூ 4 கோடி வசூலித்த பெண் தீக்குளித்த பின்னணி..! மிரட்டியதாக 7 பேர் கைது
மதுரையை சேர்ந்த PACL என்ற மோசடி நிதி நிறுவனத்தில் முகவராக இருந்து 4 கோடி ரூபாய் வரை வசூலித்து பணம் கட்டி ஏமாந்த பெண் ஒருவர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த நிலையில், அவரை மிரட்டியதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்கிழமை மாலை கார்கள் நிறுத்தும் இடத்தில் இருந்து உடலில் தீப்பற்றிய நிலையில் பெண் ஒருவர் ஓடி வந்தார். இதை பார்த்ததும் அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.
இதனையடுத்து தீயில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து பின்னர் திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 70 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவர் பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றவர் நத்தம் அருகே சிரங்காட்டுப்பட்டி ஊராட்சி மங்களப்பட்டியை சேர்ந்த மலைச்சாமி என்பவரின் மனைவி பச்சையம்மாள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இவர் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த PACL என்ற தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் முகவராக பணிபுரிந்து வந்ததாகவும், இவருக்கு கீழே 70 பேர் சப்-ஏஜெண்ட்டாக பணிபுரிந்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த 2017-ஆண்டு வரை வாடிக்கையாளர்களிடம் 4 கோடி ரூபாய் வரை வசூலித்த பச்சையம்மாள் அதனை PACL நிறுவனத்தில் கட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அந்த நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டு அதன் பங்குதாரர்கள் தலைமறைவாகினர்.
இந்நிலையில் பச்சையம்மாளிடம் பணம் கொடுத்த சிலர் கடந்த சில மாதங்களாக தாங்கள் கொடுத்த பணத்தை கேட்டு சிலர் கடுமையான வார்த்தைகளால் திட்டியும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த பச்சையம்மாள் தனது வீட்டில் இருந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு அளித்து வருவதாக கூறி சென்றுள்ளார். செவ்வாய்க்கிழமை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற பச்சையம்மாள் விரக்தி அடைந்து தன் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே தனது மனைவிக்கு தொடர் கொலை மிரட்டல் விடுத்ததாலேயே அவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்று தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், தற்கொலைக்குதூண்டிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது கணவர் மலைச்சாமி நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் 7 பேரை நத்தம் காவல் துறையினர் கைது செய்தனர்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu