முகப்பு
“விடியும் வரை காத்திரு..” பெண் கொடூர கொலை கணவருக்கு பேரதிர்ச்சி..! உதகையை பதற வைத்த சம்பவம்
May 17, 2025 04:18 PM
635
“விடியும் வரை காத்திரு..” பெண் கொடூர கொலை கணவருக்கு பேரதிர்ச்சி..! உதகையை பதற வைத்த சம்பவம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை இரும்பு ராடால் கொடூரமாக தாக்கி கொலை செய்து அவர் அணிந்திருந்த நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள நெலாக்கோட்டை ஒன்பதாவது மயில் பகுதியை சேர்ந்தவர் 60 வயதான முகமது. தேவர் சோலையில் உள்ள அரபி கல்லூரியில் பாதுகாவலராக பணிபுரிந்து வரும் முகமது, தனது மனைவி மைமூனாவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இவர்களது பிள்ளைகள் எல்லாம் வெளியூரில் வசிக்கும் நிலையில், கணவர் வேலைக்கு கல்லுரிக்கு சென்ற பின்னர் வீட்டில் மைமுனா மட்டும் தனியாக இருப்பார் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு பணி முடித்து காலையில் வீடு திரும்பிய போது வீட்டின் உள்புறம் கதவு பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. நீண்ட நேரமாக கதவு தட்டியும் திறக்கப்படாததால் வீட்டின் பின்பக்கம் உள்ள கதவினை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அங்கு மைமுனா பலத்த காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் முகமது உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டதில் மைமுனாவை இரும்புராடால் கொடூரமாக தாக்கி கொலை செய்திருப்பதாகவும், காது மற்றும் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் மைமுனாவின் செல்போன் ஆகிவற்றை கொலையாளி திருடி சென்றிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவ இடதில் தடயங்களை சேகரித்த போலீசார் , அந்தப்பகுதிக்கு கடந்த ஒரு வாரமாக வந்து சென்ற வெளி நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். கேரளத்தையொட்டி உள்ள மலைப்பகுதி என்பதால் போலீசார் இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை அருகில் உள்ள கேரள காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தோட்டத்துக்குள் தானியாக இருந்த வீட்டுக்குள் பெண் தனியாக இருப்பதை நோட்டமிட்ட யாரோ தான், இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் வீட்டின் இரு பக்க கதவுகளும் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாக போலீசாரிடம் தெரிவித்த மைமுனாவின் கணவர் முகமதுவிடமும் போலீசார், நடந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். மைமுனாவின் அனுமதி இல்லாமல் கொலையாளி வீட்டுக்குள் எப்படி நுழைந்திருக்க முடியும் ? என்று கேள்வி எழுப்பி உள்ள போலீசார் ஒரு வேளை சம்பவத்தில் ஈடுபட்டவர் மைமுனாவுக்கு ஏற்கனவே அறிமுகமானவரா இருக்கலாமோ ? என்ற கோணத்திலும் விசாரணையை முன்னேடுத்துள்ளனர்.
வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கதவுகளை பூட்டி பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிமுகம் இல்லா நபர்கள் வந்தால் கதவை திறக்காமல் ஜன்னல் வழியாகவே பேசி அனுப்பி விட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ள போலீசார் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu