முகப்பு
பீர் ஊற்றி 50 அடி ஆழ பள்ளத்தில் தூக்கி போட்டு சிறுவன் கொ* வெளியான பகீர் தகவல்..
Jul 04, 2025 02:31 AM
2281
காதல் சேட்டையை சிறுவன் பார்த்ததால் ஆத்திரம் வாயில் பீர் ஊற்றி 50 அடி பள்ளத்தில் வீசிக்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே, மாவனட்டி மலை கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ். கூலித்தொழிலாளியான இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரின் 13 வயது மகனான ரோகித், அஞ்செட்டியிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், சிறுவன் கடந்த, 2ஆம் தேதி உடல்நிலை சரியில்லை எனக்கூறி பள்ளிக்கு போகவில்லை. அதையடுத்து மாலை, 4 மணிக்கு விளையாட செல்வதாக கூறிய சென்ற சிறுவன், இரவாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிறுவனின் தாய், வெளியே வேலைக்கு சென்றிருந்த சிவராஜூவுக்கும் தெரிவித்துள்ளார்.
பின்னர் இதை கேட்டு பதறியடித்து ஓடிவந்த சிவராஜ், இதுகுறித்து அஞ்செட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதற்கு அப்போது பணியில் இருந்த போலீசார், ”ஆமா.., கோடீஸ்வரன் பிள்ளையை கடத்திடாங்க... பல கோடி கேட்டு மிரட்ட போறாங்க... போடா எங்காவது சுத்திட்டு வருவான்” என்று கூறி புகாரை எடுத்துக்கொள்ளாமல் அலட்சியம் செய்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து, சிறுவனின் பெற்றோர், சிறுவன் விளையாடும் இடங்களுக்கு சென்று, தேடியிருகின்றனர். அதையடுத்து ரோகித் விளையாடிய மைதானத்தின் அருகிலிருந்த, வீட்டின் சிசிடிவி காட்சியில் அவன் விளையாடியதும், அவன் தனியாக செல்வதும் தெரிந்தது. அதன்பிறகு சிறுவன் எங்கே சென்றான் என தெரியாமல் குழம்பிய பெற்றோர், விடிய விடிய உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடி அலைந்துள்ளனர்.
ஆனால் மறுநாள் விடிந்தும் சிறுவன் ரோகித் வராததால் பெற்றோருக்கு பயம் மேலும் அதிகரித்தது. இதையடுத்து ரோகித்துடன் விளையாடிய சிறுவன், ரோகித் மாதேவன் என்கின்ற இளைஞருடன் காரில் சென்றதாக கூறியிருக்கிறான். அதைத்தொடர்ந்து அந்த சிறுவன் கூறிய தகவல் படி, ரோகித் சென்ற அந்த கார், கர்நாடக பதிவெண் கொண்ட சான்ட்ரோ கார் என்பதை பெற்றோர் மற்றும் ஊர்மக்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து தேவனட்டி அருகிலுள்ள சிவன் பெட்ரோல் பங்கில் அந்த கார் நிற்பது தெரியவந்தது.
இருப்பினும் பெற்றோர் அளித்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, அஞ்செட்டி பேருந்து நிலையத்தின் அருகே சிறுவனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்ட நிலையில் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர்.
உயிரிழந்த சிறுவனனின் உறவினர்கள் இரண்டு இளைஞர்கள் மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்த நிலையில், மாதேவன் மற்றும் கர்நாடகா மாநிலம் உனிசனள்ளியை சேர்ந்த மாதேவன் ஆகிய இருவரை கைதுசெய்து காவல் துறையினர் விசாரித்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில் சிறுவன் நேற்று இரவு 8 மணியளவில் அடித்து கொலை செய்யப்பட்டு வனப்பகுதியில் வீசப்பட்டது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மகன் வாயில் நுரை தள்ளி புதருக்குள் சடலமாக கிடப்பதை பார்த்து கண்ணீர் விட்ட பெற்றோர், ”புகாரளித்த போதே நடவடிக்கை எடுத்திருக்கலாம், எங்கள் மகன் உயிருடன் இருந்திருப்பான்” எனக்கூறி கதறி அழுதனர்
இந்த நிலையில் சிறுவனின் கொலைக்கான காரணம் குறித்து இளைஞர்கள் அளித்த வாக்கு மூலம் அதிர்ச்சியடை செய்துள்ளது. புட்டண்ணனின் மகன் மாதேவன், கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அந்த பெண்ணுடன் கடந்த 1ம் தேதி தனிமையில் இருந்துள்ளார். இதை சிறுவன் ரோஹித் பார்த்துள்ளார். எங்கே இதை ரோஹித் மற்றவர்களிடம் சொல்லி விடுவானோ? என நினைத்த மாதேவன், தனது நண்பனான மற்றொரு மாதேவனிடம் தகவல் கூறினார்.
இதையடுத்து 2ம் தேதி இரண்டு பேரும் சேர்ந்து சிறுவன் ரோஹித்தை நைசாக பேசி அழைத்து சென்றுள்ளனர். பின்னர் காரில் அவனை ஏற்றிக் கொண்டு சென்றனர். அந்த நேரம் அவர்கள் வாங்கி வைத்திருந்த 2 பீரை சிறுவனின் வாயில் ஊற்றி அவனை மயக்கம் அடைய வைத்துள்ளனர். இதன் பிறகு சிறுவனை பிரிவில் உள்ள குந்துகோட்டை கொண்டை ஊசி வளைவில் பகுதியில் 50 அடி ஆழ பள்ளத்தில் மேலே இருந்து கீழே தூக்கி போட்டு கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
காதலியுடன் தனிமையில் இருந்ததை பார்த்த சிறுவன், ஊரில் சொல்லிவிடுவானோ என பயந்து, சிறுவனை காரில் அழைத்து சென்று கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காதலுக்காக செய்தாலும்.. காதல் போதையில் செய்தாலும் குற்றம் கேடு தரும்.!
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu