முகப்பு
லோன் வேண்டுமா..? எச்சரிக்கையாக இருங்கள்; வாடகைக்கு வீடு எடுத்து, ‘மகளிர் குழு’ சீட்டிங்..!
Jun 21, 2025 04:03 PM
158
லோன் வேண்டுமா? எச்சரிக்கையாக இருங்கள்; வாடகைக்கு வீடு எடுத்து, ‘மகளிர் குழு’ சீட்டிங்!
சென்னையை அடுத்த ஆவடி சங்கர் நகரில் வசித்து வருபவர் தேவி. இவரது வீட்டு பக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்த தீபா, அவரது தம்பி மனைவி திவ்யபாரதி ஆகியோர், பச்சையம்மன் என்ற பெயரில் மகளிர் குழுவை ஆரம்பித்துள்ளனர்.
அதில் தீபா, அவரது தம்பி மனைவியான திவ்யபாரதி ஆகியோர் தங்களை தலைவியாக நியமித்துக் கொண்டு, சொற்ப பணத்தை கடனாக கொடுத்து வசூல் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
நாட்களும், மாதங்களும் கடக்கவே, நாளடைவில் வீட்டின் அருகே வசித்து வந்தவர்களின் நம்பிக்கையை தீபா, திவ்யபாரதி இருவரும் பெற ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து, தனியார் நிதி நிறுவனத்தில் பழக்கம் உண்டு, உங்களுடைய தனிநபர் ஆதார், அடையாள முகவரி போன்ற ஆவணங்களை தந்தால், உங்கள் பெயரில் கடனை பெற்று, அதற்கு உண்டான மாதாந்திர தொகையை தான் செலுத்தி விடுவதாக கூறி, அசைக்க முடியா நம்பிக்கையை விதைத்துள்ளனர்.
இதையடுத்து, தேவி தனக்கு பழக்கமானவர்களிடம் இருந்து ஆவணங்களை பெற்று முத்தூட், Equitas, Shriram Finance Ltd உள்ளிட்ட பல்வேறு தனியார் நுண் கடன் நிறுவனங்களிடமிருந்து சுமார் 17 லட்சம் வரை கடனாக வாங்கி தீபாவிடம் கொடுத்தாக கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வஞ்சகத்தை நெஞ்சில் வைத்து சுருட்டிய லட்சங்களோடு, திடீரென கடந்த 8 மாதத்திற்கு முன்னதாக, தீபா அவரது கணவர் கண்ணன், தீபாவின் தம்பி ராம்குமார், அவரது மனைவி திவ்யபாரதி ஆகியோர் தலைமறைவானதை அறிந்த தேவி மற்றும் அவரை நம்பி இருந்தவர்கள் அதிர்ந்து போயினர். ஏற்கனவே, வறுமையில் உள்ளவர்கள், தங்கள் கைக்கு வராத கடனுக்காக, பணத்தைக் கட்டவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்கள்.
செய்வதறியா தவித்தவர்கள், ஆவடி காவல் ஆணையர் குறை தீர்ப்பு முகாமில் புகார் அளித்தனர். அன்றாடம் வேலை பார்த்து சம்பாதிக்கும் மக்களிடம் இருந்து ரூ.17 லட்சத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவான குடும்பத்தினரை, ஆவடி குற்றப்பிரிவு போலீசார்
தேடி வந்தனர்.
இதற்கிடையில், செல்போனில் பேசிய டவர் லொக்கேஷனை வைத்து ட்ரேஸ் செய்த போலீசார், சொந்த ஊரான திருவண்ணாமலையில்
பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அங்கு சென்ற தனிப்படை போலீசார் தீபா, திவ்யபாரதி, ராம்குமார் ஆகியோரை கொத்தாக தூக்கி கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, ஆவடி குற்றப்பிரிவு காவல் துறையினர், மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரையும் நீதிமன்ற உத்தரவு படி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபோன்ற, கும்பல்களிடம் ஆதார் உள்ளிட்ட உங்கள் தனிப்பட்ட விவரங்களை அளிக்க வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu