RECENT NEWS

உலகின் மிகச் சிறந்த பி-2 விமான வடிவமைப்புக்கு உதவிய இந்தியர்! 32 ஆண்டுகள் சிறையில் இருக்கும் பின்னணி

BIG STORIES

ஆண்ட்ரியாவை காண்பித்து மொத்த நகையையும் பறிப்பு.. தொக்கா சிக்கிய தொழில் அதிபர்..! ஆசையா..? மெசேஜ் உங்களுக்கு தான்..!

Jun 11, 2025 01:21 AM

172

ஆண்ட்ரியாவை காண்பித்து மொத்த நகையையும் பறிப்பு.. தொக்கா சிக்கிய தொழில் அதிபர்..!

சென்னை, ஓட்டேரியை சேர்ந்த தொழில் அதிபரை ஆசைவார்த்தை கூறி சர்வீஸ் அப்பார்ட் மெண்டுக்கு அழைத்த ஆங்கிலோ இந்திய பெண், கூட்டாளிகளுடன் சேர்ந்து 20 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை ஓட்டேரியைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் சார்லஸ், இள நீர் மொத்த வியாபாரம், மரம் அறுவை ஆலைகளுக்கு மரம் சப்ளை உள்ளிட்ட பல தொழில்களை செய்து வரும் இவர் எப்போது உடலில் ஏராளமான நகைகளை அணிந்திருப்பார் என்று கூறப்படுகின்றது. 50 வயதான இவர் மசாஜ் செய்வதற்காக ஸ்பாக்களுக்கு செல்வது வழக்கம். அங்கு தனக்கு பழக்கமான இளம்பெண் மூலம் வேறொரு பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.
"சூளைமேடு இளங்கோவடிகள் தெருவில் உள்ள சர்வீஸ் அப்பார்ட் மெண்டுக்கு வாங்க.. " என அந்த இளம்பெண் அழைத்துள்ளார்.

இதனை நம்பி கடந்த 29ஆம்தேதி மாலை 3 மணி அளவில் அங்கு சென்றார் சார்லஸ். அறையில் இருந்த வெள்ளைக்கார பெண்ணை நெருங்கி இருக்கிறார். அடுத்த நொடி அவர்கள் அமர்ந்திருந்த கட்டிலுக்கு அடியில் இருந்து வெளியே வந்த இரண்டு நபர்கள் , தொழிலதிபர் சார்லஸை கடுமையாக தாக்கி, அவர் அணிந்திருந்த 10 சவரன் தங்கச்சங்கிலி, 10 சவரன் தங்க பிரேஸ்லெட் , 10 ஆயிரம் ரூபாய் பணம் ஆகிவற்றை பறித்துள்ளனர்.

மேலும் கூகுள்பே மூலமாக சார்லஸ்ஸிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை தங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளனர் . அவமானத்துக்கு பயந்து தொழில் அதிபர் இதனை வெளியே சொல்லமாட்டார் என்று நினைத்து அவரை மிரட்டி விரட்டி உள்ளனர். வீட்டிற்கு சென்ற உடன் சார்லஸிடம் அவரது மனைவி அணிந்திருந்த நகைகள் எங்கே ? என கேட்ட உடன் சார்லஸ் முதலில் சமாளித்துள்ளார். பின்னர் நடந்தவற்றை மனைவியிடம் தெரிவித்துள்ளார். உடனே சார்லஸ் தனது மனைவியுடன் வந்து சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகின்றது.

சார்லஸின் கூகுள் பே அக்கவுண்டில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்த நவீன் என்பவரை செல்போன் எண் மூலம் போலீசார் கண்டு பிடித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் அழகான பெண்ணின் படத்தை காண்பித்து சார்லஸை வீட்டுக்கு அழைத்த கோடம்பாக்கத்தை சேர்ந்த ரேகா என்ற 60 வயது பெண்மணியை பிடித்தனர் .

தோழி மூலம் அறிமுகமான சார்லஸ் நல்ல வசதியான நபர் என்பதால் அவரை அழைத்து பணம் பறிக்க திட்டமிட்ட ரேகா, சம்பவத்தன்று கூட்டளிகளான கோகுலகிருஷ்ணன் , ஆண்ட்ரியா தம்பதியுடன் இணைந்து தொழில் அதிபரை வரவழைத்து மிரட்டி நகை பணத்தை பறித்தது தெரியவந்தது. அவசர உதவிக்கு 500 ரூபாய் கேட்ட பாவத்துக்கு 1000 ரூபாய் தருவதாக வீட்டிற்கு அழைத்து நவீனையும் இந்த கொள்ளை சம்பவத்தில் சிக்க வைத்திருக்கிறார் ரேகா என்ற போலீசார் , ரேகா, நவீன் ஆகிய இருவரை கைது செய்து 2லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய கோகுலகிருஷ்ணன் , ஆங்கிலோ இண்டியனான அவரது மனைவி ஆண்ட்ரியா ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். சபலபுத்திகொண்டவர்களை குறிவைத்து ஆண்ட்ரியாவின் கவர்ச்சியான புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பி ஆசை காட்டி வரவழைத்து பணம்பறிப்பதை வாடிக்கையாக செய்து வருபவர்கள் என்றும் போல கோகுலகிருஷ்ணன் மீது பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஏங்க.. அந்த பய பேச்சக்கேட்டு கூமாபட்டி ஐலாண்டு போன இன்ஸ்டா ஊர் சுற்றிகள் ஏமாற்றம்..!  “ஏங்க..வராதீங்க..” பொதுப்பணித்துறை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies