முகப்பு
மூதாட்டியைக் கொலை செய்துவிட்டு மலையில் பதுங்கி இருந்த சுட்டுப் பிடித்த போலீசார்
May 24, 2025 10:34 AM
491
ஒரு சவரன் நகைக்காக கொலை செய்த நபரை தட்டி தூக்கிய காவல்துறை...
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கடந்த வாரம் ஒரு சவரன் தங்க நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த நரேஷ் குமார் என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கைது செய்தனர்.
சின்னேரிகாடு பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்ற மூதாட்டி, காட்டுப் பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், கட்டிக்காரனூரைச் சேர்ந்த நரேஷ் குமாருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும், சங்ககிரி அருகே மலைப்பகுதியில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்ற காவல் உதவி ஆய்வாளர் விஜயராகவன், காவலர் செல்வகுமார் இருவரையும் நரேஷ் குமார் கொடுவாளால் சரமாரியாகத் தாக்கியதாகவும், இதையடுத்து உதவி ஆய்வாளர் விஜயராகவன் தனது கைத்துப்பாக்கியால் நரேஷ் குமாரின் காலில் சுட்டதில் அவர் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
துப்பாக்கிக் குண்டு காயத்துடன் கைது செய்யப்பட்ட நரேஷ் குமார், சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில், சம்பவ இடத்தை சேலம் சரக டிஐஜி உமா உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu