RECENT NEWS

"அறையில் ரகசிய கேமரா வைத்து உடை மாற்றுவதைப் படம் பிடித்தார்" - ஓட்டுநரைக் கொன்றதாகக் கைதான ஜனசேனா பெண் நிர்வாகி

"அறையில் ரகசிய கேமரா வைத்து உடை மாற்றுவதைப் படம் பிடித்தார்" - ஓட்டுநரைக் கொன்றதாகக் கைதான ஜனசேனா பெண் நிர்வாகி

Jul 14, 2025

"அறையில் ரகசிய கேமரா வைத்து உடை மாற்றுவதைப் படம் பிடித்தார்" - ஓட்டுநரைக் கொன்றதாகக் கைதான ஜனசேனா பெண் நிர்வாகி

"அறையில் ரகசிய கேமரா வைத்து உடை மாற்றுவதைப் படம் பிடித்தார்" - ஓட்டுநரைக் கொன்றதாகக் கைதான ஜனசேனா பெண் நிர்வாகி

Jul 14, 2025

BIG STORIES

போலீஸ் ஏட்டு மனைவியை விரட்டிச்சென்று நகை பறிப்பு.. வெளியான பதைபதைக்கும் காட்சி

Jun 27, 2025 03:39 PM

141

போலீஸ் ஏட்டு மனைவியை விரட்டிச்சென்று நகை பறிப்பு.. வெளியான பதைபதைக்கும் காட்சி

போலீஸ் ஏட்டு மனைவியை விரட்டிச்சென்று நகை பறிப்பு.. வெளியான பதைபதைக்கும் காட்சி

வீட்டிற்கு ஸ்கூட்டி ஓட்டிச்சென்ற தலைமை காவலரின் மனைவியை பின் தொடர்ந்த கொள்ளையர்கள் அவரை விரட்டிகீழே தள்ளி தங்கச்சங்கிலியை பறித்த, பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது

ஸ்கூட்டியில் தனியாக செல்லும் ஒரு பெண்ணை பின் தொடர்ந்து சென்ற கொள்ளையர்கள், அவரது வீட்டு வசலில் வைத்தே கீழே தள்ளி தங்க சங்கிலியை பறித்துச்சென்ற இந்த சம்பவம் நிகழ்ந்த இடம் , கர்நாடக மாநிலம் கோலார் மற்றும் சித்தூர் மாவட்ட எல்லை பகுதியான முலாபாகல்..!

இங்குள்ள சஞ்சீவி அப்பா லே-அவுட் பகுதியை சேர்ந்த தலைமை காவலரின் மனைவி இருசக்கர வாகனத்தில்
கடைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை நோட்டமிட்ட இரண்டு இளைஞர்கள் பைக்கில் அவரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்றதாக கூறபடுகின்றது.

சுதாரித்துக் கொண்ட தலைமை காவலரின் மனைவி இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி அவரது வீட்டருகே வந்து இருசக்கர வாகனத்தை நிறுத்திய போது , அவரைப் பின்தொடர்ந்த இளைஞர்களின் ஒருவன் இறங்கி வந்து அந்தப் பெண்ணை விரட்டிச்சென்று , தாக்கி கீழே தள்ளி கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியை பறித்து சென்றதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து முலாபாகளில் தலைமை காவலராக பணியாற்றி காவலர் மற்றும் அவரது மனைவியும் காவல் நிலையத்தில் இதுவரை புகார் அளிக்காத நிலையில் தற்பொழுது தலைமை காவலரின் மனைவி கழுத்தில் இருந்த தாலிச் சங்கலியை பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியானதால், முலாபாகல் போலீசாடிடம் புகார் அளிக்கப்பட்டது. தங்க சங்கிலி பறிப்பு கொள்ளையர்களை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேட தொடங்கி உள்ளனர். நகை விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில் நகையுடன் வெளியே செல்லும் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் உஷாராக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறி இருக்கின்றது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"லவ் மேரேஜ் பண்ண பொண்ண அடிச்சு மாட்டிட்டாங்க".. புள்ளத்தாச்சினு கூட பாக்கல" - ரிதன்யாவை அடுத்து குமுதா?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies