RECENT NEWS

ஆடி மாத 5 அம்மன் கோவில்களுக்கான மூத்த குடிமக்கள் ஆன்மிகப் பயணம்..!

ஆடி மாத 5 அம்மன் கோவில்களுக்கான மூத்த குடிமக்கள் ஆன்மிகப் பயணம்..!

Jul 18, 2025

ஆடி மாத 5 அம்மன் கோவில்களுக்கான மூத்த குடிமக்கள் ஆன்மிகப் பயணம்..!

ஆடி மாத 5 அம்மன் கோவில்களுக்கான மூத்த குடிமக்கள் ஆன்மிகப் பயணம்..!

Jul 18, 2025

முகப்பு

போலீஸ் ஸ்டிக்கருடன் நடுரோட்டில் அட்ராசிட்டி... கெஞ்சிய ட்ராஃபிக் எஸ்.ஐ. திமிராக, கெத்து காட்டிய கார்!

Jun 27, 2025 05:28 AM

296

போலீஸ் ஸ்டிக்கருடன் நடுரோட்டில் அட்ராசிட்டி... கெஞ்சிய ட்ராஃபிக் எஸ்.ஐ.
திமிராக, கெத்து காட்டிய கார்!

சாலையில் தள்ளப்பட்ட காவலர்

சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் மலர்கொடியின் மகனான அழகுராஜா , திருவள்ளூர் அருகே காரில் தப்பிச்சென்ற நிலையில் அவரை பிடிக்க முயன்ற காவலரை காருடன் இழுத்துச்சென்று சாலையில் தள்ளிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் அருகே ஓடும் காருடன் இழுத்துச்செல்லப்பட்ட காவலரை சாலையில் தள்ளிவிட்டு பிரபல ரவுடி ஒருவன் தப்பி சென்ற பரபரப்பான காட்சிகள் தான் இவை..!

சென்னையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவைச் சேர்ந்த தோட்டம் சேகர் என்பவரை கொலை செய்ததால் பெரிய ரவுடியாக வளர்ந்தவர் டைகர் சிவா என்கின்ற மயிலை சிவக்குமார். இவரை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தோட்டம் சேகரின் மகன் அழகுராஜா கூட்டாளிகளுடன் சேர்ந்து பழிக்குபழியாக கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார்.

சிறையில் இருந்து வெளியே வந்த அழகுராஜா வழக்கறிஞரான தனது தாய் மலர்கொடியுடன் தங்கி இருந்து வழக்கு விசாரணையை எதிர் கொண்டார். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு வெடிகுண்டு சப்ளை செய்த புகாரில் மலர்க்கொடி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பழைய வழக்குகளின் விசாரணைக்கு ஆஜராகாமல் அழகுராஜா தலைமறைவானதாக கூறப்படுகின்றது. மயிலை சிவக்குமாரின் கொலைக்கு பழிக்கு பழிவாங்க அவரது ஆதாரவாளர்களும் அழகுராஜாவை நோட்டமிட்டு வருவதால் அழகுராஜா தலைமறைவாகவே இருப்பதாக கூறப்படுகின்றது.

அழகுராஜாவை சென்னை ரவுடி ஒழிப்பு படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் திருவள்ளூரில் காரில் அவர் இருப்பதை கண்டுபிடித்து மடக்கிப்பிடிக்க காவலர் ஒருவர் முயன்றார். அழகுராஜாவின் சட்டையை எட்டிப்பிடித்தபோது காருடன் ரவுடி கும்பல் தப்பி உள்ளது. சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கார் வேகமெடுத்தது, காருக்குள் இருந்த அழகுராஜாவை பிடித்துக் கொண்டு காவலர் விட மறுத்ததால் காருடன் காவலர் இழுத்துச்செல்லப்பட்டார்.

சினிமாக்களில் வருவது போன்று அரங்கேறிய இந்த காட்சிகளை பின்னால் வாகனத்தில் சென்றவர்கள் படம் பிடித்தனர். 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேலாக அந்த காருடன் தொற்றிக் கொண்டே சென்ற காவலரை சாலையில் தள்ளிவிட்டு அழகுராஜா தப்பிச்சென்றதாக கூறப்படுகின்றது.

சம்பந்தப்பட்ட காவலர் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்ததால் பெரிய அளவிலான காயங்கள் இன்றி தப்பியதாக கூறப்படுகின்றது. காவலரை இழுத்துசென்று தள்ளிவிட்ட சம்பவம் குறித்து தகவல் வெளியான நிலையில் தப்பிச்சென்ற ரவுடியை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஆசை ஆசையாய் காத்திருந்து வீட்டில் அடம்பிடித்த இளைஞர்..! ஒன்றரை மாதத்தில் சோகம்..! உயிர் கொடுத்தவருக்கு உயிர் இல்லை..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies