முகப்பு
தண்டவாளத்தில் கார் ஓட்டி ஐ.டி பெண் ஊழியர் அட்ராசிட்டி..! கல்வீசி தாக்கி காரை மடக்கினர்..! கையை கட்டி தூக்கிய காட்சிகள்
Jun 26, 2025 02:08 PM
233
தண்டவாளத்தில் கார் ஓட்டி ஐ.டி பெண் ஊழியர் அட்ராசிட்டி..! கல்வீசி தாக்கி காரை மடக்கினர்..!
பெண் ஒருவர் ரெயில் தண்டவாளத்தில் காரை ஓட்டி வந்ததால், பெங்களூரு - ஐதராபாத் இடையே 1 மணி நேரம் 10 க்கும் மேற்பட்ட ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
காருக்குள் இருந்த பெண்ணுடன் சண்டையிட்டு கார் கண்ணாடியை உடைத்து அந்த பெண்ணை மீட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது
தெலுங்கானா மாநிலம் ரங்காரா ரெட்டி மாவட்டம் சங்கர்பள்ளி ரயில் நிலையம் வழியாக ரயில்வே தண்டவாளத்தில் கியா சோனட் கார் ஒன்று செல்வதாக பக்கத்து தண்டவாளத்தில் , ரெயிலை இயக்கிச்சென்ற லோகோ பைலட் ஒருவர் ரெயில்வே காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அந்த தண்டவாளம் வழியாக செல்லக்கூடிய ரெயில்கள் அடுத்தடுத்து நடுவழியில் நிறுத்தப்பட்டன.
அந்தப்பகுதிக்கு சென்ற ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் தண்டவாளத்தில் ஓட்டி வரப்பட்ட காரை தடுத்து நிறுத்த முயன்றனர்.
கருப்பு வண்ண உடை அணிந்து முகமூடி மற்றும் தொப்பி அணிந்திருந்த மர்ம நபர் , காரை நிறுத்தாமல் ரயில்வே டிராக் வழியாகவே ஓட்டிச் சென்றார்
இந்த நிலையில் சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவு வரை அவர் ரயில்வே டிராக்கில் கார் ஓட்டி செல்லப்பட்ட நிலையில் நாகுல பள்ளி அருகே விரட்டிச்சென்ற உள்ளூர் வாசிகள் கார் மீது கல்வீ சி தாக்கியதால், கார் நடுவழியில் நிறுத்தப்பட்டது
காருக்குள் இருந்து உடைந்த ஜன்னல் வழியாக ஆபாசமாக பேசிய பெண் பதிலுக்கு திருப்பி தாக்கினார்.
அதன் பின்னர் தான் காரை ஓட்டிச்சென்றது பெண் என்பது தெரியவந்தது.
அவரை காருக்குள் இருந்து வெளியே இழுத்த போது , அவர் வர மறுத்து அடம்பிடித்தார், பொதுமக்கள் உதவியுடன் ரயில்வே டிராக்கில் அவரை மடக்கி படித்த போலீசார் அவரது இரு கைகளையும் கயிற்றால் கட்டினர்
விசாரணையில் அவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஐ.டி ஊழியர் தீப்தி என்பதும் ஐதராபத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவரும் அவர், போதையில் ரெயில் தண்டவாளர்த்தில் காரை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.
அவரது எதிர் தாக்குதல் மற்றும் ரகளையை வைத்து உண்மையிலேயே அவர் போதையில் தான் தண்டவாளத்தில் காரை ஓட்டி வந்தாரா ? அல்லது ஏதாவது நாச வேலைக்கு சதி திட்டத்துடன் ஓட்டி வந்தாரா ? என்ற கோணத்திலும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
முதலிலேயே லோகோ பைலட் ஒருவர் பார்த்து விட்டதால், விபத்து போன்ற அசம்பாவிதங்கள் முன் கூட்டியே தடுக்கப்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தண்டவாளத்தில் இருந்து அந்த பெண் ஓட்டி வந்த கார் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் ஹைதராபாத் பெங்களூர் வழித்தடத்தில் 1 மணி நேரத்திற்கு பின்னர் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரெயில்கள் ஒன்றன் பின ஒன்றாக புறப்பட்டுச்சென்றதாக தெரிவித்த ரெயில்வே காவல்துறையினர் ஐடி ஊழியர் தீப்தியை கைது செய்து, அவர் ஓட்டி வந்த காரை பறிமுதல் செய்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu