முகப்பு
பில்லா இயக்குனர் தம்பி போதை வழக்கில் சிக்க இவர் தான் காரணம்..! வெளியான பரபரப்பான தகவல்
Jun 27, 2025 02:01 AM
227
போதை வழக்கில் சிக்க இவர் தான் காரணம்
போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கழுகு பட நாயகன் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , மருத்துவ பரிசோதனையில் தப்பிய கிருஷ்ணா, கோட் வேர்டு மூலம் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...
கொக்கைன், மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை பெங்களூருவில் வாங்கி சென்னையில் சப்ளை செய்த பிரதீப்குமார், கானா நாட்டைச் சேர்ந்த ஜான் ஆகிய இருவரும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். இதில் பிரதீப் கொடுத்த வாக்குமூலத்தில் தீங்கிரை படத்தயாரிப்பாளரும், முன்னாள் அதிமுக பிரமுகருமான பிரசாத் மூலம் ரோஜாக்கூட்டம் பட நடிகர் ஸ்ரீகாந்திற்கு சப்ளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு இரு தினங்களுக்கு முன்பு நடிகர் ஸ்ரீகாந்தும் கைது செய்யப்பட்டார்.
அவரை தொடர்ந்து பில்லா பட இயக்குனர் விஷ்ணுவர்தனின் சகோதரரும், கழுகு பட நாயகனுமான கிருஷ்ணாவும் போதைப் பொருளை வாங்கி பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டவர் என விசாரணையில் தெரியவந்தது. போலீசாரால் தேடப்பட்ட நடிகர் கிருஷ்ணா புதன்கிழமை தனது வழக்கறிஞருடன் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜரானார்.
முதலில் கிருஷ்ணாவை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர் அதில், அவர் போதைப் பொருள் பயன்படுத்தியதற்கான மருத்துவ ரீதியான ஆதாரங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. திருவான்மியூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையிலும் போதைப் பொருள் எதுவும் சிக்கவில்லை.
ஆனால் நடிகர் கிருஷ்ணா தொடர்ந்து போதை பொருள் பயன்படுத்தியிருக்கிறார் என்று போலீசாருக்கு உறுதியான தகவல் கிடைத்தது . நடிகர் கிருஷ்ணாவின் செல்போன் தொடர்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை ஆய்வு செய்ததில் அவர் போதைப் பொருளை வாங்கி இருக்கிறார் என்பதும் வாங்கிய போதைப் பொருளுக்கு பணம் பரிவர்த்தனை செய்திருக்கிறார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக நடிகர் கிருஷ்ணா போதைப் பொருளை Pill💊 என்ற Code word மூலம் கேட்டு சில மருந்துகளை வாங்கியது தெரியவந்தது. இது குறித்து கிருஷ்ணாவிடம் விசாரித்த போது அது போதைப் பொருளுக்கான ரகசிய வார்த்தைகள் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். போலீஸாரால் ஏற்கனவே தேடப்பட்டு வரும் போதைப் பொருள் சப்ளையர் கெவின் மூலமாகத்தான் கிருஷ்ணா போதை பொருளை வாங்கியுள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் கிருஷ்ணா, போதைப் பொருள் சப்ளையர் கெவினிடம் போதைப்பொருளை வாங்கி தனது நண்பர்களுடன் இணைந்து, பகிர்ந்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்திருக்கிறார் என போலீசார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் உட்கொள்பவருடன் WhatsApp குழுக்களில் இணைந்து அது சம்மந்தமாக கருத்து பரிமாற்றங்களில், போதைப்பொருள் உட்கொள்ளும் இடம் மற்றும் நேரம் ஆகியவற்றை பகிர்ந்துள்ளார் போலீசார் தெரிவித்ததன் மூலம் திரைத்துறையைச் சேர்ந்த பலரும், அவரது கல்லூரி நண்பர்களும் நடிகர் கிருஷ்ணா மூலம் போதைப் பொருளை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கிருஷ்ணாவுக்கு போதைப் பொருளை சப்ளை செய்த கெவின் என்பவரை ஆயிரம் விளக்கு போலீசார் கைது செய்தனர். கெவின் வீட்டில் இருந்து 1/2 Grams Cocaine, 10.30 Grams Methamphetamine, 02.75 grams MDMA , 2.40 grams OG Ganja , 30 grams Ganja , 40 grams OC Paper ,40 Grams Ziplock Cover , 2 Weight Machine Small , 1 laptop ,1 Cellphone, 45,200 ரூபாய் பணம் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளது.
கெவின் அளித்த தகவலின் பேரிலும், போதைப்பொருட்களை வாங்கி, பயன்படுத்தி, நண்பர்களுக்கும் அளித்ததால் நடிகர் ஸ்ரீகிருஷ்ணா உரிய ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்
தொடர் புலன் விசாரணையின் போது, அறிவியல் பூர்வமாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும், சாட்சிகள், ஆதாரங்கள் அடிப்படையிலும் கெவின் மற்றும் கிருஷ்ணாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நடிகர் கிருஷ்ணாவின் whatsapp தொடர்புகள் மூலம் அவரது கல்லூரி கால நண்பர்கள் இருவரை போலீசார் விசாரணை வளையத்தில் வைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவையும் போதை பொருள் சப்ளையர் கெவினையும் போலீசார் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்திய நிலையில், ஜூலை 14 ந்தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க உத்தவிடப்பட்டது. போதை பொருளை பயன்படுத்தியதால் அடுத்து சிக்க போகும் பிரபலம் யார் ? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu