RECENT NEWS

சாக்கு மூட்டையில் கணவன்.. கூவம் ஆற்றில் குழந்தை சடலம்.. மனைவி பாலியல் பயங்கரம்.. தலைநகரத்தை உலுக்கிய டிரிபிள் மர்டர்..

சாக்கு மூட்டையில் கணவன்.. கூவம் ஆற்றில் குழந்தை சடலம்.. மனைவி பாலியல் பயங்கரம்.. தலைநகரத்தை உலுக்கிய டிரிபிள் மர்டர்..

Jan 29, 2026

சாக்கு மூட்டையில் கணவன்.. கூவம் ஆற்றில் குழந்தை சடலம்.. மனைவி பாலியல் பயங்கரம்.. தலைநகரத்தை உலுக்கிய டிரிபிள் மர்டர்..

சாக்கு மூட்டையில் கணவன்.. கூவம் ஆற்றில் குழந்தை சடலம்.. மனைவி பாலியல் பயங்கரம்.. தலைநகரத்தை உலுக்கிய டிரிபிள் மர்டர்..

Jan 29, 2026

முகப்பு

சாக்கு மூட்டையில் கணவன்.. கூவம் ஆற்றில் குழந்தை சடலம்.. மனைவி பாலியல் பயங்கரம்.. தலைநகரத்தை உலுக்கிய டிரிபிள் மர்டர்..

Jan 29, 2026 02:10 AM

65

சாக்கு மூட்டையில் கணவன்.. கூவம் ஆற்றில் குழந்தை சடலம்.. மனைவி பாலியல் பயங்கரம்.. தலைநகரத்தை உலுக்கிய டிரிபிள் மர்டர்..

சாக்கு மூட்டையில் கணவன்.. கூவம் ஆற்றில் குழந்தை சடலம்.. மனைவி பாலியல் பயங்கரம்..

சென்னையில் பீகாரைச் சேர்ந்த இளைஞர், அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடையார், இந்திரா நகரில், 1 வது அவென்யூ சாலையில் உள்ள, பிரபல இருசக்கர வாகன ஷோரூம் அருகே, கடந்த 26 ஆம் தேதி சாக்கு மூட்டையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், அடையார் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

குற்றச்சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாக்குமூட்டையை பிரித்து பார்த்தபோது சுமார் 30 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞர் ஒருவர் தலை மற்றும் முகத்தில் ரத்தக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, கொலையான இளைஞரின் உடலை கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கொலை செய்யப்பட்ட இளைஞர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும், 5 தனிப்படைகள் அமைத்து இளைஞரை கொலை செய்து சாக்குமூட்டைக்குள் வைத்து வீசி சென்ற நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தனிப்படை போலீசார் சம்பவ இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் இரண்டு இளைஞர்கள் பைக்கில் சாக்கு மூட்டையை கொண்டு வந்து வீசி விட்டு செல்வது பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, போலீசார் அந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

மேலும், கொலை செய்யப்பட்ட இளைஞர் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பேப்பரில் குறித்து வைத்திருந்த சில செல்போன் எண்களை தொடர்பு கொண்டபோது, அதில் ஒரு எண் அடையாறில் உள்ள தனியார் செக்யூரிட்டி அலுவலகம் என்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்யப்பட்ட இளைஞர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதான கவுரவ் குமார் என்பது தெரியவந்தது.

மேலும், அந்நிறுவனத்தில் காவலாளி வேலை கேட்டதும் அதற்கு செக்கியூரிட்டி நிறுவனம் தற்போது வேலை காலியில்லை, தேவைப்பட்டால் அழைப்பதாகக் கூறி அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இந்தநிலையில்தான், கொலை செய்யப்பட்டவரின் நண்பர்கள், தரமணி பாலிடெக்னிக் காவலாளி சிக்கந்தர் உட்பட 9 நபர்களிடம் விசாரணை நடைபெற்றது.

காவலாளி சிக்கந்தர் உள்ளிட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பீகார் இளைஞர், அவரது மனைவி, குழந்தையையும் கொலை செய்து விட்டதாகவும் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தகராறில் இளம்பெண், அவரது கணவர் மற்றும் இரண்டு வயது ஆண் குழந்தை கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

அதாவது, ஜனவரி 21 ஆம் தேதி, சென்னைக்கு வேலைத்தேடி கவுரவ் குமார் தனது மனைவி மற்றும் 2 வயது மகனோடு வந்துள்ளனர். 22 ஆம் தேதி கிருஷ்ண பிரசாத் என்பவர் மூலமாக தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை கேட்டு சென்றுள்ளனர்.

ஆதார் உள்ளீட்டவற்றை வாங்கி வைத்துக் கொண்டு அழைப்பதாக தெரிவித்துள்ளனர். தெரிந்தவர் வீட்டில் தங்கிய நிலையில் 23 ஆம் தேதி, ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூரில் ஒன்றாக வேலை பார்த்த சிக்கந்தரிடம் வேலைக்கேட்டபோது, வேலை வாங்கித் தருவதாக தரமணி பாலிடெக்னிக் வரவழைத்து, தனது அறையில் தங்க வைத்துள்ளார்.

24 ஆம் தேதி, தரமணி தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தின் சிக்கந்தரின் அறையில் தங்கி இருந்த நிலையில், நண்பர்களான நரேந்திரகுமார், ரவிந்திரநாத், பிகாஷ் ஆகியோரை வரவழைத்து மது அருந்தி உள்ளார்.

நள்ளிரவு கடந்த நிலையில் பெண்ணிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. அப்போது கவுரவ குமார், சிக்கந்தரை தாக்கியதாகவும், நண்பர்களோடு சேர்ந்து கவுரவ் குமாரை தாக்கும்போது அவரது மனைவி தாக்க முற்பட்டு அடித்ததாகவும், ஆத்திரமுற்றவர்கள் கவுரவ் குமாரை இரும்பு பைப்பால் அடித்தும், அதேபோல அந்த பெண்ணை அடித்து கீழே விழுந்து மயக்கமுற்றவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சத்தம் கேட்டு அழுது கொண்டிருந்த 2 வயது சிறுவன் கண்முன்னே இவை அனைத்தும் நடந்துள்ளது. மேலும், சிறுவன் அழுது சத்தம் போடவே, குழந்தையையும் ஈவு, இரக்கமில்லாமல் மிகக்கொடூரமாக அடித்து படுகொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

போதையில் தூங்கிய கும்பல் 25 ஆம் தேதி ஞாயிற்று கிழமை எழுந்து பார்த்தபோது, ரத்தம் வெளியேறிய நிலையில் கவுரவ் குமார், அவரது மனைவி, குழந்தை என மூவரும் சடலமாக கிடந்துள்ளனர்.

மேலும், இருவரை வரவழைத்து சாக்கு மூட்டையில் சடலங்களை கட்டி 25 ஆம் தேதி நள்ளிரவு வெவ்வெறு இடங்களில் வீச திட்டமிட்டு எடுத்து சென்றுள்ளனர்.

முதலில் பெண்ணின் சடலத்தை தரமணியிலுள்ள பிரபல பிரட் கம்பெனி அருகே உள்ள குப்பை தொட்டியில் வீசியுள்ளனர்.

பின்னர் குழந்தையின் சடலத்தை மத்திய கைலாஷ் கெனால் பகுதியில் வீசியுள்ளனர். அதன்பிறகு, அதிகாலை கவுரவ் குமார் சடலத்தை அடையாறு முகத்துவாரம் எடுத்து செல்லும்போது, இந்திரா நகர் முதல் தெருவில் விழுந்துள்ளது.

ஆள் நடமாட்டம் இருந்ததால் மீண்டும் மூட்டையை தூக்காமல் சென்றுள்ளனர். அதன் மூலமாக அனைவரும் சிக்கி கொண்டனர்.

கவுரவ் குமார், மற்றும் அவரது குழந்தை என இரண்டு சடலங்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், தரமணியில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட கவுரவ் குமாரின் மனைவி சடலம், குப்பை லாரி மூலமாக பெருங்குடி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டதால் அங்கு தொடர்ந்து சடலத்தை தேடும் பணி நடைப்பெற்று வருகிறது.

தரமணி பாலிடெக்னிக் ஒன்றின் மாடியில் தான் இந்த 3 கொலைகளும் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கொலைகள் தொடர்பாக பீகாரைச் சேர்ந்த சிக்கந்தர்(33), நரேந்திர குமார்(45), ரவீந்திர நாத் (45), பிகாஷ்(24) உள்ளிட்ட 5 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொலை தொடர்பான தடயங்களை போலீசார் தீவிரமாக சேகரித்து வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளராக தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வந்த பீகாரைச் சேர்ந்த குடும்பத்தினரை, சென்னையில் வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கும்பல், அவரது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரோடு சேர்த்து, அவரது கணவரையும் இரண்டு வயது ஆண் குழந்தையையும் கொடூரமாக கொலை செய்து, சென்னையில் பல்வேறு பகுதிகளில் வீசிச்சென்ற கொடூரச்சம்பவம் தலைநகரத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சாக்கு மூட்டையில் கணவன்.. கூவம் ஆற்றில் குழந்தை சடலம்.. மனைவி பாலியல் பயங்கரம்.. தலைநகரத்தை உலுக்கிய டிரிபிள் மர்டர்..
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies