முகப்பு
என்ன சிம்ரன் இதெல்லாம்..! பாய் பிரண்டுக்கு 60 சவரன் கிப்ட் கொடுத்த +2 மாணவி.. நாடகத்தில் மெகா ட்விஸ்ட்..!
Jul 15, 2025 06:12 AM
1710
பாய் பிரண்டுக்கு 60 சவரன் கிப்ட் கொடுத்த +2 மாணவி
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 7-ஆம் தேதியன்று ரமேஷ் மனைவியுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டில் உள்ள பீரோவில் நகையை தேடியுள்ளார். அப்போது பீரோவில் இருந்த 60 சவரன் தங்க நகைகள் மாயமாகியிருப்பதை கண்டு ரமேஷ் அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே வீட்டில் இருந்த தனது 17 வயதான +2 படித்து வரும் மகளிடம் நகை எங்கே போனது என கேட்டுள்ளார். அதற்கு பம்மி பம்மி பதிலளித்த சிறுமி, நகையை தனது பாய் பிரண்டுக்கு அனுப்பி வைத்துவிட்டேன் என கூறியுள்ளார். இதனை கேட்ட ரமேஷ் மீண்டும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
யார் அந்த பாய் பிரண்ட்? என ரமேஷ், மகளிடம் கேட்க, சில மாதங்களுக்கு முன்பு அபிஷேக் என்கிற இன்ஸ்டா ஐடி மூலம் தனக்கும் சக பள்ளி தோழிக்கும் அந்த நபர் அறிமுகமானதாக தெரிவித்துள்ளார். பின்னர் தன்னை காதலிப்பதாக தெரிவித்து அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்தததாகவும், தன்னிடம் பணம் இல்லை என சேட்டிங்கில் சொன்னதற்கு வீட்டில் உள்ள நகைகளை எடுத்து உனது தோழியிடம் கொடு, நான் வாங்கிக் கொள்கிறேன் என கூறியதாக சிறுமி தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் மார்ச் மாதம் முதலே அந்த சிறுமி, வீட்டில் இருந்த 60 சவரன் நகைகளை சிறிது சிறிதாக தோழி மூலம் கொடுத்து அனுப்பி வைத்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகளான அந்த பள்ளி தோழியிடம் ரமேஷ் விசாரித்துள்ளார். அதற்கு நகையை வாங்கி சென்ற நபர் பள்ளி பேருந்து நிறுத்தத்திற்கு ஹெல்மட் அணிந்து பைக்கில் வருவார், அவரிடம் நான் நகையை கொடுப்பேன், மற்றபடி அந்த நபர் யார் என்றெல்லாம் தெரியாது என தெரிவித்துள்ளர்.
இதனால் ரமேஷ் தனது மகள் மற்றும் மகளின் பள்ளி தோழியுடன் குளச்சல் காவல் நிலையத்திற்கு சென்று புகாரளித்தார். அப்போது போலீசார் அந்த தோழியிடம் விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இதற்கிடையே பாலகிருஷ்ணன் தனது வீட்டு பீரோவில் 8-காப்பு , இரண்டு செயின் என 15-சவரன் நகைகள் இருந்ததாகவும் இது உங்களுடையதா என ரமேஷிடம் காவல் நிலையத்தில் வைத்து காண்பித்துள்ளார். தனது நகைகள் தான் என ரமேஷ் உறுதி செய்துள்ளார்.
இந்த நகை எப்படி பீரோவிற்கு சென்றது என போலீசார் பள்ளி தோழியிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டபோது தோழி சொன்ன பதில் போலீசாரையே ஒரு நிமிடம் தலை சுற்ற வைத்துள்ளது. அபிஷேக் என்கிற போலி இன்ஸ்டா அக்கவுண்டை தான் தான் தயார் செய்து, காதலன் போல பேசி நகைகளை வாங்கி வைத்துக் கொண்டதாக தோழி தெரிவித்துள்ளார்.
17 வயதில் 60 சவரன் நகைகளை வாங்கும் அளவுக்கு என்ன பிரச்னை? என போலீசார் விசாரித்தபோது. இந்த திட்டத்திற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததே பள்ளி தோழியின் தாய் புஷ்பலதா என்பது தெரியவந்துள்ளது.
கூலி தொழில் செய்து வரும் பாலகிருஷ்ணனால் அவரது மனைவி புஷ்பலதா சுய உதவி குழுக்களிலும் வங்கியிலும் பெற்ற கடனை திருப்பி கட்ட முடியாமல் கடன் சுமைக்கு ஆளாகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் மகளின் தோழியை வைத்து இப்படி ஒரு திட்டம் தீட்டி நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.
அதில் சில நகைகளை அடகு கடையில் அடகு வைத்து கடனை அடைத்து வந்ததோடு தங்களது குடும்ப தேவைகளையும் நிறைவேற்றி வந்ததாகவும் புஷ்பலதா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே விசாரணை முடிந்து மோசடி மாணவியும், தாயும் வீடு திரும்பிய நிலையில், எங்கு தங்களை போலீசார் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் கடந்த 9-ஆம் தேதியன்று அந்த மாணவியும், தாயாரும் விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளனர். இருவரையும் மீட்ட போலீசார் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu