முகப்பு
"கடவுளே..ஏன் இந்த சோதனை"..நொறுங்கிய பெற்றோர்கள் கோர விபத்தால் போன உயிர்கள்..தப்பி ஓடியவர் யார்? என்ன நடந்தது?
Jun 20, 2025 08:04 AM
165
"என் தங்கமே.. எந்திரிச்சு வாடா" என பெற்றோர்கள் உயிரிழந்த மகன்களுக்காக கதறி துடித்த சோகக் காட்சிகள் தான் இவை..
தருமபுரி மாவட்டம் நாகாளம்மன் கோம்பை பகுதியை சேர்ந்த 19 வயதான கார்த்திக் என்ற இளைஞர் மேஸ்திரி வேலை செய்து வந்துள்ளார். கார்த்திக்கிற்கு அதே பகுதியைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் வெற்றி என்பவரோடு நெருங்கிய நட்பு இருந்து வந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் பைக்கில் ஊர் சுற்றுவது என்பது பொழுதுபோக்காக இருந்து வந்துள்ளது
இந்நிலையில் 19 ஆம் தேதியன்று வெற்றி பள்ளிக்கு செல்லாமல் தனது கூட்டாளியான கார்த்தியோடு பைக்கில் ஊர் சுற்றி வந்துள்ளார். அப்போது மதியம் 12 மணி அளவில் இருவரும் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில் அருகே அதிவேகமாக சென்றுள்ளனர்.
மிகவும் குறுகலான அந்த சாலையில், எதிர்புறமாக தருமபுரியில் இருந்து முத்தம்பட்டி வழியாக டிப்பர் லாரி ஒன்று வந்துகொண்டிருந்துள்ளது. அதிவேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த பைக், எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதியுள்ளது.
இதில் பைக்கில் சென்ற இருவரும் லாரியின் வீலில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அறிந்த அப்பகுதியினர் டிப்பர் லாரி ஓட்டுனரை மடக்கி பிடித்து தாக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் பயந்துபோன லாரி ஓட்டுநர், அவர்களிடமிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அதியமான் கோட்டை காவல்துறையினர் இறந்து போன இவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த இரு வீட்டாரும், மகன்களை பறிகொடுத்த துக்கத்தில் கதறி துடித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் அதே வேலையில், தப்பி ஓடிய டிப்பர் லாரி ஓட்டுனரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பாளையம்புதூர் பகுதியில் சுங்க சாவடி உள்ள நிலையில், லாரிகளுக்கு டோல் கேட்டில் பணம் கொடுக்க வேண்டும் என்பதால் இது போன்ற லாரிகள் குறுக்கு வழியில் குறுகலான சாலையில் வருவதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே அந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், இதனை தடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஒரே பகுதியைச் சார்ந்த இளைஞனும், சிறுவனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu