தமிழ்நாடு
கத்தியால் கழுத்த அறுத்தவன ஏன் கையை கட்டி போட்டீங்க ? போலீஸ் கேள்விக்கு சுளீர் பதில்..! வடக்கு இளைஞர் சிக்கியது எப்படி ?
Apr 17, 2025 03:12 PM
464
கத்தியால் கழுத்த அறுத்தவன ஏன் கையை கட்டி போட்டீங்க ? போலீஸ் கேள்விக்கு சுளீர் பதில்..!
ஈரோட்டில் வீட்டில் தனியாக இருந்த முதியவரின் கழுத்தை அறுத்து, கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வட மாநில இளைஞரை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது
வீடுபுகுந்து முதியவரின் கழுத்தை கத்தியால் அறுத்தவனை , மடக்கிப்பிடித்து அடித்து கட்டிபோட்ட நிலையில், போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் கட்டிபோட்டது ஏன் ? என்று கேட்டு போலீசாரிடம் முதியவரின் மகன் வாக்குவாதம் செய்த காட்சிகள் தான் இவை..
ஈரோடு கொல்லம்பாளையம் ஹவுசிங் போர்டு பகுதியில் சுப்பிரமணியம் ஜெயலட்சுமி, ஆகிய வயதான தம்பதியினர் வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
அங்கு கஞ்சா போதையில் வந்த வடமாநில இளைஞர் ஒருவர் சுப்பிரமணியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு ஜெயலட்சுமியை கட்டையால் தாக்கி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகின்றது.
மனைவி ஜெயலட்சுமி கூச்சலிட்டதை கேட்டு வந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் இருந்த முதியவர் சுப்பிரமணியத்தை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வரும் போதே கையில் கட்டையுடன் வந்து தாக்கியதாக போலீசாரிடம் ஜெயலட்சுமி தெரிவித்தார்
இதற்கிடையே தப்பி ஓடிய வடமாநில இளைஞரை விரட்டிச்சென்ற பொதுமக்கள் கல்லால் அடித்து விழச்செய்து மடக்கிப் பிடித்தனர். அவனை கட்டிப் போட்டு தாக்கியதில் படுகாயம் அடைந்த இளைஞர் மயங்கினார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூரம்பட்டி காவல்துறையினர் காயம் அடைந்த வடமாநிலத்தவரை தாக்கி கட்டிபோட்டது யார் ? போலீசுக்கு தகவல் சொல்லி இருக்கலாமே ? என்றனர் அவர்களுடன் சுப்பிரமணியத்தின் மகன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
மயக்கத்தில் இருந்த அந்த வடக்கு இளைஞரை மீட்டு 108 ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்கா அனுப்பி வைத்தனர்.
என்ன காரணத்திற்காக அந்த வடக்கு இளைஞர் , முதியவர் சுப்பிரமணியத்தை கொலை செய்ய முயன்றார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu