மனைவி, 2 பெண் குழந்தைகளை கொன்ற விவசாயி
Jun 21, 2025
BIG STORIES
13 வருஷ வேலைக்காரன் முதலாளி வீட்டில் பார்த்த பெரிய வேலை என்ன தெரியுமா? காவலர் உள்ளிட்ட 4 பேர் கைது
Jun 18, 2025 04:44 PM
238
காவலர் உள்ளிட்ட 4 பேர் கைது
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நீலிகொல்லை பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலை அதிபர் வீட்டிற்குள் பட்டபகலில் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக அந்த வீட்டின் வேலைக்காரன், காவலர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நீலிகொல்லை பகுதியை சேர்ந்தவர் இம்தியாஸ், தோல் தொழிற்சாலை அதிபரான இவர் லண்டனில் உள்ள மகள் வீட்டில் இருந்து பக்ரீத் பண்டிகைக்காக தனது மனைவியுடன் சொந்த ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று கடை வீதிக்கு சென்று வந்த வீட்டு வேலைக்காரர் சக்திவேலை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல், அவர் கதவை திறந்து வீட்டுக்குள் சென்ற போது அவரை தள்ளிக் கொண்டு வீட்டிற்குள் புகுந்தது.
வீட்டு வேலைக்காரர் சக்திவேல் ,இம்தியாஸ் ஆகியோரை பிளாஸ்டிக் டேப்பால் கை, கால்களையும் வாயையும் இறுக்கமாக கட்டிபோட்டு விட்டு, இம்தியாஸ் மனைவியை வைத்தே மிரட்டி வீட்டில் இருந்த லாக்கரை திறந்து நகை பணத்தையும் இரு செல்போன்களையும் அள்ளிச்சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
திசைக்கு ஒன்றாக கொள்ளையர்கள் தப்பி ஓடிய சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போலீசாரும், அக்கம் பக்கதினரும், முதலில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட வேலைக்காரன் சக்திவேலை பார்த்து பரிதாபப்பட்டனர்.
தொழில் அதிபர் வீட்டில் அந்த பிளாஸ்டிக் டேப் யார் வாங்கியது? என்று விசாரித்த போலீசார் அதனை வைத்து வேலைக்காரன் சக்திவேலை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அவனை உரிய கவனிப்புடன் விசாரித்த போது மொத்த கொள்ளை சம்பவத்துக்கும் ‘காட்பாதராக’ இருந்து திட்டம் போட்டு கொடுத்ததே, வேலைக்காரன் தான் என்பது தெரியவந்தது.
13 வருடங்களாக தொழில் அதிபர் இம்தியாஸ் வீட்டில் சக்திவேல் வேலைக்காரனாக இருந்து வந்ததாகவும், அவருக்கு நம்பகமாக இருந்ததால் வீட்டின் அனைத்து அறைகளிலும் சர்வ சாதாரணமாக வந்து சென்றுள்ளார். மிகுந்த பாதுகாப்பு முன் எச்சரிக்கையுடன் வீட்டை வடிவமைத்து இருந்தார் இம்தியாஸ் என்கின்றனர் போலீசார் , அந்தவகையில் யார் வீட்டுக்குள் வர வேண்டும் என்றாலும் இரு கதவுகளை அடுத்தடுத்து திறந்து கடந்தால் தான் வீட்டிற்குள் செல்ல இயலும் வகையில் முன்பக்கம் இருந்துள்ளது.
வீட்டிற்குள் லாக்கர் இருப்பது யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக கபோர்டுக்குள் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. இவற்றை எல்லாம் தெரிந்து வைத்திருந்த சக்திவேல், தனது ரகசிய காதலி சாந்தகுமாரியிடம் தெரிவித்து “ஊரில் இருந்து அம்மா வந்திருக்காங்க, இப்ப அவங்க லாக்கரில் கிலோ கணக்கில் நகை இருக்கும்” என்று கூறி உள்ளார்.
இதையடுத்து சாந்தகுமாரி தன்னிடம் போக்கும்.. வரத்துமாக இருந்த இளவரசனிடம் இதனை சொல்ல அவர் திருப்பதி திருமலா காவல் நிலையத்தில் காவலராக உள்ள அருண்குமாருடன் சேர்ந்து கொள்ளை திட்டம் வகுத்துள்ளனர். அதன் படி சக்திவேலுவின் பின்னால் சென்ற கொள்ளையர்கள் திட்டமிட்டபடி அவரை தாக்கி கட்டிபோட்டு விட்டு கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து முதலில் சக்திவேலையும், அவர் கொடுத்த தகவலின் பேரில் திருப்பதியில் வைத்து சாந்தகுமாரியையும், இளவசனையும், காவலர் அருண்குமாரையும் போலீசார் கைது செய்தனர். கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரும் சிறுவர்கள் என்று கூறப்படும் நிலையில் அவர்களை வலை வீசி தேடி வருகின்றனர். தொழில் அதிபர் இம்தியாஸின் மனைவி நகைகளை எல்லாம் வங்கி லாக்கரில் வைத்திருந்ததால் பெரிய அளவில் நகை கொள்ளையடிக்கப்படவில்லை என்றும் இரு செல்போன்களை மட்டுமே திருடுபோனதாக போலீசார் தெரிவித்தனர்.
விசுவாசமாக இருந்த வேலைக்காரனே திட்டமிட்டு வீட்டிற்குள் கொள்ளையர்களை அழைத்துச்சென்று சினிமாபாணியில் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி இருப்பது உள்ளூர் வாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu