BIG STORIES
சங்கி.. சங்கி.. கூவி அழைத்து மைக்கால் வம்பிழுத்த தோழர் சுத்துபோட்டு வெளுத்த சம்பவம்..! பதிலுக்கு பதில் தாக்குதலால் பரபரப்பு
Jun 21, 2025 02:01 AM
347
சங்கி.. சங்கி.. கூவி அழைத்து மைக்கால் வம்பிழுத்த தோழர் சுத்துபோட்டு வெளுத்த சம்பவம்..! பதிலுக்கு பதில் தாக்குதலால் பரபரப்பு
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தின் போது உள்ளூர் இந்து முன்னனி பிரமுகரை அவதூறாக பேசியதால் உருவான தகராறில் , கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் சரமாரியாக தாக்கப்பட்டார். இருதரப்பினரும் நடத்திய மறியல் போராட்டத்தில் பா.ஜ.க பிரமுகர் மண்டை உடைக்கப்பட்டது
கையில் மைக்கை வைத்துக் கொண்டு... வாய்கொடுத்து வம்பிழுத்து வாங்கிக் கட்டியதால் ஆம்புலன்ஸில் அரசு மருத்துவனைக்கு தூக்கிச்செல்லப்பட்ட தோழர் சரத் இவர் தான்..!
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் கிளர்ச்சி பிரச்சார இயக்கத்தின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மைக்கில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் சரத் , இந்து முன்னணியைச் சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர் வினோத் என்பவரை தனிப்பட்ட முறையில் ஒருமையில் தாக்கி பேசியதாக கூறப்படுகிறது.
இதனை கேட்டு எரிச்சலடைந்து அங்கு வந்த வினோத், தன்னை விமர்சித்து பேசுவது ஏன் ? என்று கேட்க, “ஏய் சங்கி.. ஓரமா போ, போய்ட்டேயிரு..” என்று ஏக வசனம் பேசியதால் வாக்குவாதம் முற்றியது
அங்கிருந்த போலீசார் மைக்கை ஆப் பன்ன சொல்ல, போலீசாரையும் சங்கி என்று விமர்சித்ததோடு, தாடிக்கொம்பு காவல் நிலையத்தை முற்றுகையிடுவோம் என்றும், சங்கிகளுக்கு அஞ்சாத செங்கொடி என்றும் வெறுப்பேற்றும் வகையில் அரைக்கூவல் விடுத்தார் தோழர் சரத்
அடுத்த சில நிமிடங்களுக்கெல்லாம் வினோத்துக்கு ஆதரவாக கூடுதல் இந்து முன்னணி நிர்வாகிகள் அங்கு வந்து, “தனிப்பட்ட விமர்சனம் செய்யாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டனர். அப்போதும் விடாமல் மைக்கில் முழங்கிக் கொண்டிருந்தார் தோழர் சரத், பொறுமை இழந்த இந்து முன்னனி அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் இந்து முன்னணியை சேர்ந்தவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது . இதில் கையில் மைக்குடன் வம்பிழுத்த தோழர் சரத்தை சரமாரியாக வெளுத்து விட்டனர்
இதில் தோழர் சரத் மயங்கி விட்டதாக கூறி தரையில் படுத்துக் கொண்டதால் அவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
பதிலுக்கு இந்து முன்னனியை சேர்ந்த வினோத்தும் காயம் அடைந்ததாக கூறியதால் அவரையும் ஆம்புல்ன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கிளர்ச்சி இயக்கத்தின் ஆர்ப்பாட்டத்தை பாதியிலேயே ஆப் செய்த தாடிக்கொம்பு காவல்துறையினர் இருதரப்பினரையும் கலைத்து போக அறிவுறுத்தினர். ஆனால் கலைந்து செல்ல மறுத்த மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்
அவர்களுக்கு போட்டியாக இந்து முன்னனியினரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தியதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது
அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் உருட்டு கட்டையை எடுத்து தாக்கியதில் பாஜக கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் பாலமுருகன் மண்டை உடைந்தது.
இதையடுத்து இரு கட்சியினரும் சாலையில் விரட்டி விரட்டி தாக்கி கொண்டனர்.
தாக்குதலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினரை பிடித்து இழுத்து காவல்துறையினர் தங்கள் வாகனத்தில் ஏற்றி அழைத்துச்சென்றனர்
காவல்துறையினர் முன்பே இரு கட்சியினரும் தாக்கி கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu