RECENT NEWS

பேருந்தை ஓவர்டேக் செய்த போது நிகழ்ந்த விபத்து.. தாய் கண்முன்னே மகன் உயிரிழப்பு..!

பேருந்தை ஓவர்டேக் செய்த போது நிகழ்ந்த விபத்து.. தாய் கண்முன்னே மகன் உயிரிழப்பு..!

Jul 19, 2025

பேருந்தை ஓவர்டேக் செய்த போது நிகழ்ந்த விபத்து.. தாய் கண்முன்னே மகன் உயிரிழப்பு..!

பேருந்தை ஓவர்டேக் செய்த போது நிகழ்ந்த விபத்து.. தாய் கண்முன்னே மகன் உயிரிழப்பு..!

Jul 19, 2025

முகப்பு

தாய்ப் பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தை உயிரிழப்பு..! மருத்துவர் சொல்வது என்ன?

Jun 20, 2025 08:09 AM

154

தாய்ப் பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தை உயிரிழப்பு..! மருத்துவர் சொல்வது என்ன?

சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் காந்திநகர் அன்னை இந்திரா காந்தி தெருவை சேர்ந்த குமரேசன் - சிந்தாமணி தம்பதியினருக்கு ஆறு வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 13 நாட்களுக்கு முன்பு சிந்தாமணிக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.

சிந்தாமணிக்கு காசநோய் இருந்ததால் தாம்பரம் காச நோய் மருத்துவமனையில் கடந்த 13 நாட்களாக சிகிச்சை பெற்றுவிட்டு புதன்கிழமையன்று மாலை குழந்தையுடன் வீடு திரும்பினார். அன்று இரவு சிந்தாமணி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துவிட்டு படுக்க வைத்திருக்கிறார். சிறிது நேரத்தில் குழந்தை அசைவு இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ந்துபோன அவர் உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்ததுவிட்டதாக தெரிவித்தனர். பிறந்து 13 நாளே ஆன ஆண் குழந்தை இறந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தகவல் அறிந்த சேலையூர் காவல் துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


பிரேத பரிசோதனையின் முடிவு வெளியான பின்னரே குழந்தை மூச்சு திணறலால் இருந்ததா அல்லது வேறு காரணத்தால் உயிரிழந்ததாக என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிறந்து சில நாட்களில் குழந்தைகள் இறப்பதற்கான காரணம் குறித்து பேசிய மருத்துவர் சாந்தி, முதல் மூன்று மாதங்களுக்கு குழந்தைகளை மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கே இதுபோன்ற இறப்புஅதிக அளவில்ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.

குழந்தைகளை தாய் அருகில் படுக்க வைத்து அசந்து தூங்கி விடுவதால் அவர்கள் மீது தாயின் உடல் அல்லது உடைகள் போன்றவை குழந்தையின் சிறிய மூக்கின் மீது படுவதால் மூச்சு விட முடியாத நிலையில் இது போன்ற இறப்பு ஏற்படுவதகாவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

முதல் மூன்று மாதங்களுக்கு குழந்தைகளின் கழுத்துஉறுதித் தன்மை இல்லாமல் இருப்பதால் அதை கையாளும் முறையினை குழந்தை பிரசவிக்கும் முன்பே பொம்மைகள் மூலமாக புரிதல்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர் சாந்தி தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி குழந்தைகள் தூங்கும் இடங்களில் உள்ள ஆடைகள் தொய்வு தன்மையில்லாமல் இறுக்கமாக மெத்தைகள் மீது கட்டில் மீதோ விரிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஸ்விக்கி - சோமேட்டோவுக்கு டஃப் கொடுக்கும்  “ZAAROZ”.. தமிழனின் உணவு டெலிவரி ஆப்..! ஓட்டல் விலையில் வீட்டுக்கு வரும் உணவு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies