BIG STORIES
வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்களிடம் தோப்புக்கரணத்தோடு மன்னிப்பு...! மரத்தின் உரிமையாளரின் நேயம்...!
Jun 21, 2025 01:52 AM
126
வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்களிடம் தோப்புக்கரணத்தோடு மன்னிப்பு...! மரத்தின் உரிமையாளரின் நேயம்...!
புதுச்சேரியில், மதில் சுவர் கட்டுவதற்காக பக்கத்து வீட்டிலிருந்த தென்னை மற்றும் மா மரத்தை உரிமையாளருக்கு தெரியாமல் வெட்டிய தொழிலாளர்களை மரத்தின் உரிமையாளர் நூதன முறையில் அவர்களது தவறை உணர வைத்து தனது பெருந்தன்மையை காட்டினார்.
புதுச்சேரி, காலாப்பட்டு சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆன்ந்த். அவரது வீட்டின் அருகே குடியிருக்கும்
செல்வக்குமார் தனது வீட்டிற்கு மதில் சுவர் அமைக்க முடிவெடுத்தார். இதற்காக, தனது வீட்டின் அருகே இருந்த தென்னை மற்றும் மாமரங்களை வெட்டுவதற்காக மாத்தூரைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்கள் 4 பேரை செல்வக்குமார் அழைத்து வந்துள்ளார்.
அவர்கள், ஆன்ந்த்துக்கு சொந்தமான தலா ஒரு தென்னை மற்றும் மாமரத்தை வெட்டி வீழ்த்தியுள்ளனர்.
தான் ஆசையோடு வளர்த்து வந்த மரங்கள் வெட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆனந்த், இதுகுறித்து செல்வக்குமார் மற்றும் மரம் வெட்டிய தொழிலாளர்களிடம் கோபத்தோடு கேள்வி எழுப்பினார். தவறுதலாக வெட்டிவிட்டோம் என அவர்கள் கூறிய நிலையில், மரத்தை வெட்டிவிட்டு தவறுதலாக வெட்டி விட்டோம் என்றால் எப்படி ஏற்றுக் கொள்வது என தெரிவித்த ஆனந்த் வெட்டி வீழ்த்தப்பட்டிருந்த மரங்களை செல்ஃபோனில் வீடியோ பதிவு செய்துக் கொண்டு புகார் அளிக்க காவல் நிலையத்திற்குச் சென்றார்.
நாங்கள் தவறு செய்து விட்டோம் எங்களை மன்னித்து விடுங்கள், போலீஸில் புகார் அளிக்க வேண்டாம் என்று அவர்கள் ஆனந்த்திடம் செல்ஃபோனில் பேசி மறுபடியும் மன்னிப்புக் கேட்டனர். அதற்கு என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டாம், உண்மையிலேயே மன்னிப்பு கேட்பதாக இருந்தால் வாயில்லாமல் நிழல் தந்து வெட்டி வீழ்த்தப்பட்ட அந்த மரத்திடம் கேளுங்கள் என ஆனந்த் கூறியுள்ளார். மேலும், மன்னிப்பு கேட்பதை வீடியோவாக எடுத்து எனக்கு அனுப்பினால் போலீஸில் புகார் கொடுக்க மாட்டேன் என ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, மரம் வெட்டும் தொழிலாளர்கள், கீழே வீழ்த்தப்பட்டு கிடந்த மரங்களின் முன்பு நாங்கள் செய்தது தவறு, மன்னித்துவிடு, என்று தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு கேட்டனர். அந்த வீடியோவை ஆனந்த்தின் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பியதால், இதனை ஏற்று அவர் புகார் அளிக்காமல் வீடு திரும்பினார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu