RECENT NEWS

அதிமுக - பாஜக கூட்டணியை பார்த்து பயம் - இ.பி.எஸ்

முகப்பு

சிறுத்தையால் தாக்கப்பட்ட 4 வயது குழந்தை... 13 மணி நேர தேடுதலுக்குப் பிறகு சடலமாக மீட்பு

Jun 21, 2025 09:35 AM

79

சிறுத்தையால் தாக்கப்பட்ட  4 வயது குழந்தை... 13 மணி நேர தேடுதலுக்குப் பிறகு சடலமாக மீட்பு

வனத்துறையினர், காவல்துறையினர் 4 வயது குழந்தையை தேடி வந்தனர்

கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுத்தை கவ்விச் சென்றதாக கூறப்பட்ட 4 வயது குழந்தை 13 மணி நேர தேடுதலுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டது.

வால்பாறை பச்சமலை எஸ்டேட்டில் வேலை பார்த்து வரும் ஜார்க்கண்ட் மாநில மனோஜ் - முந்தா மோனிகாதேவி தம்பதியின் 4 வயது குழந்தையான ரோஷினி வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் அருகேயுள்ள காளியம்மன் கோவில் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, புதரில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று திடீரென பாய்ந்து வந்து ரோஷினியை அவரது தாய் கண்முன்னே கவ்விக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

ரோஷினியின் தாய் மோனிகாதேவி துரத்திச் சென்ற போது சிறுத்தை குழந்தையை வாயில் கவ்வியபடி தேயிலை தோட்டத்திற்குள் சென்று மறைந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த தகவலை அறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் மோப்பநாய், ட்ரோன்களை பயன்படுத்தி குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.



வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கிய தேடும் பணி நள்ளிரவு 3 மணி வரை தொடர்ந்த நிலையில், சிறுத்தை ஓடிச் சென்ற பாதையில் இருந்து குழந்தை ரோஷினியின் ஆடை மீட்கப்பட்டது.

போதிய வெளிச்சம் இல்லாததால் குழந்தையை தேடும் பணி அதிகாலை 3 மணிக்கு தேடும் பணி நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் காலை 7 மணிக்கு குழந்தையை மீட்கும் பணி தொடங்கியது. சுமார் 11.30 மணியளவில் காளியம்மன் கோவிலில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் குழந்தை ரோஷினி உடல் சடலமாக மீட்கப்பட்டது.


குழந்தை ரோஷினி உடல் பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதேபோன்று ஒரு குழந்தையை சிறுத்தை கவ்விச் சென்று கொன்றதாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சார் யாரு டாடாவுக்கே டஃப் கொடுத்தவருடா..! சர்வீஸ் மைய தில்லுமுல்லு..! உள்ளே நடந்தது என்ன?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies