RECENT NEWS

“வேலையத்தவன் மூளையில் சாத்தான் குடியிருக்கும்..”வார்த்தையால் வெளுத்த டிஜிபி..!
மாணவர்களுக்கு சொன்ன  புத்திமதி

இந்தியா

“விழுந்தா என்னை பிடிப்பியா?” சிரித்தபடியே, 4 வது மாடியிலிருந்து வழுக்கி விழுந்த இளம் மனைவி.. 2 ஆம் ஆண்டு திருமண விழா சோகம்!

Jul 22, 2025 01:45 AM

287

“விழுந்தா என்னை பிடிப்பியா?” சிரித்தபடியே, 4 வது மாடியிலிருந்து வழுக்கி விழுந்த இளம் மனைவி.. 2 ஆம் ஆண்டு திருமண விழா சோகம்!

கால் சென்டர் ஊழியரான போரிங்கி பர்வதி மற்றும் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த துரியோதன் ராவ் ஆகியோர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இரண்டாவது ஆண்டு திருமணத்தை கொண்டாடியவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அரியானா குருஹ்ராமிலுள்ள டி.எல்.எஃப் ஃபேஸ் 3 இல் உள்ள தங்கள் வீட்டில் அமைதியான மாலை நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, இளம் மனைவி பர்வதி மொட்டை மாடிச் சுவரில் ஏறி அதன் மீது அமர்ந்து, கால்களை விளிம்பின் இருபுறமும் ஊன்றிக் கொண்டார்.

“நான், இப்போது அப்படியே விழுந்தால் என்னை நீ காப்பாற்றுவாயா?” என நகைச்சுவையாய் கேட்டு சிரித்துக்கொண்டே, திடீரென பின்னால் சாய்ந்துள்ளார்.

உடனே, பதட்டத்துடன் கணவர் துரியோதன் கையை நீட்டி, மனைவி பர்வதியை இழுக்க முயற்சித்துள்ளார். ஆனால், கணவரின் பிடியிலிருந்து நழுவி, நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டதாக கண்ணீரோடு வாக்குமூலம் அளித்திருக்கிறார், துரியோதன்.

"நான் அவளை கீழே வரச் சொன்னேன். அதைச் செய்ய முயற்சிக்கும்போது, அவள் வழுக்கி விழுந்தாள். நான் அவள் கைகளை சுமார் 2 நிமிடங்கள் பிடித்துக்கொண்டு உதவிக்காகக் கத்தினேன், ஆனால் அருகில் யாரும் இல்லை, அவள் என் முன்பே கைகளிலிருந்து நழுவிவிட்டாள்.

கட்டிடத்தின் பின்புறத்தில் ஒரு மென்மையான, ஈரமான நிலத்தில் அவள் விழுந்தாள், அவளுக்கு பலத்த உள் காயங்கள் ஏற்பட்டன.

நான், அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன், ஆனால், அரை மணி நேரத்திற்குப் பிறகு அவள் உயிரிழந்தாள். அவளுடைய மரணம் என்னை மிகவும் உலுக்கியது” என இதயம் கனக்க வாக்குமூலம் அளித்துள்ளார், துரியோதன்.

இறந்த நான்கு நாட்களுக்குப் பிறகு, இருண்ட இரண்டு அறைகள் கொண்ட அந்த குடியிருப்பில், ராவ் இழப்பைப் பற்றிப் புலம்பி "கடவுளின் திட்டம்" என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

"இது என்னுடைய துரதிர்ஷ்டம். நாங்கள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தோம். நாங்கள் இருவரும் வேலை செய்து கொண்டிருந்தோம், ஒரு குழந்தையைப் பெறவும் திட்டமிட்டிருந்தோம்.

ஆனால், எங்கள் கனவுகள் அனைத்தும் ஒரே அடியில் நொறுங்கிப் போயின. ஒருவேளை கடவுள் விரும்பியது இதுதான் போல" என அவர், கதறி அழுதுகொண்டிருப்பது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபரீத விளையாட்டுகள், விபரீத சோதனைகள் வாழ்க்கையில் வேண்டாமே!

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“வேலையத்தவன் மூளையில் சாத்தான் குடியிருக்கும்..”வார்த்தையால் வெளுத்த டிஜிபி..!
மாணவர்களுக்கு சொன்ன  புத்திமதி
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies