RECENT NEWS

கராத்தே மாஸ்டரின் பாழடைந்த வீடு.. சிறுமிகள் கொடுத்த பகீர் வாக்குமூலம்.. தற்காப்புக்காக பெண் பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர்; நடந்த விபரீதம்!

BIG STORIES

“கனவிலும் யாரோ தூக்கிக்கிட்டு போற மாதிரியே இருக்கு”-அலறி துடிக்கும் சிறுமி.. ! அதிரவைத்த தாயின் புதிய வாக்குமூலம்!

Jul 22, 2025 02:25 PM

265

“கனவிலும் யாரோ தூக்கிக்கிட்டு போற மாதிரியே இருக்கு”-அலறி துடிக்கும் சிறுமி.. ! அதிரவைத்த தாயின் புதிய வாக்குமூலம்!

“கனவிலும் யாரோ தூக்கிக்கிட்டு போற மாதிரியே இருக்கு”-அலறி துடிக்கும் சிறுமி.. !

“திரும்ப திரும்ப அந்த ஞாபகமே வருதும்மா...யாரோ என்னை தூக்கிட்டு போற மாதிரியே கனவு வருதுமா...யாரோ துரத்திக்கிட்டு வர்ற மாதிரியே இருக்குமா... செடி மேல போயி ஒளிஞ்சிக்கிறோமா...” கொடூர மிருகத்தால் காட்டுப்பகுதியில் பாலியல் சித்திரவதை செய்யப்பட்டதால், கண் அயர்ந்து உறங்கக்கூட முடியாமல், துடித்து பிடித்து கண் விழித்து எழும், கும்மிடிபூண்டி சிறுமியின், இதயம் நொறுங்க வைக்கும் வாக்குமூலம்தான் இது...

கும்மிடிபூண்டி சிறுமியின் பாலியல் வன்கொடுமை தொடர்பாக, கொடூரனின் புதிய புகைப்படத்தையும் வீடியோவையும் வெளியிட்டு அவனைப் பற்றியை விவரங்கள் தெரிந்தால், 99520 60948 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு, தகவல் அளிக்கலாம் என பொதுமக்களின் உதவியை நாடியிருக்கிறது, காவல்துறை.

பாதிக்கப்பட்ட சிறுமி, ராயப்புரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடித்து அவர் வீடு திரும்பிய நிலையிலும் மாணவியின் மனதில் ஏற்பட்ட ரணம் மாறவில்லை. மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள அவர், தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் அறையிலே அடைத்து வைக்கப்பட்டதைப்போல உணர்ந்ததால், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்குக்கூட தள்ளப்படலாம் எனவும், பிள்ளைகளோடு பிள்ளையாக விளையாடி அவரது மனநிலையை மாற்ற தற்போது, மாணவி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில், குற்றவாளி எங்கோ இருக்கிறான். அவனை கண்டுபிடிக்க முடியாத போலீஸ், தங்களை யாரிடமும் பேசவோ, சந்திக்கவோ அனுமதிக்க மறுத்து குற்றவாளியைப் போல், தங்களை பின் தொடர்ந்து கண்காணித்து, டார்ச்சர் செய்து வருவதாகவும் சிறுமியின் தாய் குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 10 நாட்களாக போலீசார் குற்றவாளியை தேடி வந்தாலும், அவனை பற்றிய விவரங்களை போலீசாரால் சேகரிக்க முடியாமல் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.

புகார் அளித்த அன்றே, ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையாக வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டிருந்தால், அவனை பிடித்து இருக்கலாம். ஆனால், ஆரம்பாக்கம் காவல் நிலைய போலீஸார் அலட்சியம் காட்டியதால், அவனை பற்றி தகவலைக்கூட சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளது, காவல்துறை.

மேலும், ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி காட்சி இல்லாத நிலையில், போலீசார் மற்ற ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிளை ஆய்வு செய்த போது, ரயிலில் பயணிப்பது போன்ற புகைப்படம் கிடைத்தது. அதை, அடிப்படையாக வைத்து குற்றவாளி, சம்பவத்தன்று சூலூர்பேட்டையில் இருந்து சென்ட்ரல் நோக்கி சென்ற மின்சார ரயிலில் பயணித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் மதியம் 12 மணிக்கு இறங்கியுள்ளான். பின்னர், பெட்டிக்கடை அருகே காத்திருந்து அந்த வழியாக வந்த சிறுமியை பின் தொடர்ந்து சென்றுள்ளான். யாரும் இல்லாததை அறிந்து, வாயை பொத்தி மாந்தோப்பிற்கு தூக்கிச்சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் என கூறப்படுகிறது.

ரயில் நிலையத்தின் அருகே உள்ள பெட்டிக்கடை எப்பொழுதும் திறந்து இருக்கக்கூடிய நிலையில், அன்று அவசர வேலை காரணமாக மூடிவிட்டு சென்ற நிலையில், இவை அனைத்தும் அந்த கடையில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

அதில், உள்ள பதிவுகளின் அவன் 12:15 மணியளவில் பெட்டிக் கடையில் காத்திருந்து, சிறுமியை பார்த்ததும், பின்தொடர்ந்து, பாலியல் வன்கொடுமை செய்து விட்டு பொதுமக்கள் விரட்டியதும், மீண்டும் பெட்டி கடை வழியாகவே ரயில் நிலையத்திற்கு சென்று 1:40 மணியளவில் வந்த மற்றோரு ரயிலில் தப்பி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பெட்டிக்கடையில் உள்ள சிசிடிவியே ஆதாரமாக உள்ள நிலையில், ரயில் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் இல்லாததும், விசாரணையின் தொய்வுக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சம்பவதன்று சிறுமியின் முன்பாக இரண்டு முறை போனில் பேசியதாக, தகவல்கள் வெளியான நிலையில், செல்போனில் அந்த பகுதியில், அந்த நேரத்தில் வந்த அழைப்புகளை வைத்தும் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமி மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கைவைத்தால் கூட அலறி துடிப்பதாகவும், கனவிலும் யாரோ தூக்கிச் செல்வது போல, தனக்கு நடந்த கொடுமைகளை நினைத்து மிகவும் பயந்த நிலையில் இருப்பதாகவும் தாய் வேதனையோடு கூறியிருப்பது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்தால் 5,000 ரூபாய் சம்பளம்!.. Call Boy Job ரெடியா? கரும்பு தின்னக்  கூலி... தினம் தினம் ஜாலி... மாறிய Climax
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies