BIG STORIES
”திருமணமாகி ஒருநாள் கூட...” கூடுதல் வரதட்சணைக்காக.. மாடியில் இருந்து தள்ளிய கொடூர கணவன்..
Jul 22, 2025 05:06 AM
265
”திருமணமாகி ஒருநாள் கூட...” கூடுதல் வரதட்சணைக்காக.. மாடியில் இருந்து தள்ளிய கொடூர கணவன்..
வரதட்சணை கொடுமையால் மாடியில் இருந்து கணவன் தள்ளியத்தில் இளம்பெண்ணுக்கு கால்கள் உடைத்த நிலையில் ஸ்டெச்சரில் வந்து புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் சோழவரம் காவல்துறை எஸ்ஐ பாபா என்பவரின் மகன் காஜா ரவீக் என்பவரை நர்கீஸ் கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். திருமணத்தின்போது வரதட்சனையாக 30 சவரன் நகைகள், 10 லட்சம் பணம் தந்து, இந்த திருமணத்தை நர்கீஸ் வீட்டில் மிகவும் சிரமப்பட்டு நடத்தியுள்ளனர். இருப்பினும் கூடுதலாக வரதட்சனை கேட்டு தொடர்ச்சியாக நர்கீலை கணவன் வீட்டார் கொடுமைபடுத்திவந்துள்ளனர்.
இதனை ஆரம்பத்தில் யாரிடமும் சொல்லாமல் இருந்த நர்கீஸ், ஒருகட்டத்திற்கு மேல் கொடுமை தாங்காமல் தனது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். பின்னர் நர்கீஸின் பெற்றோர் வீட்டிற்கு சென்று, இதுகுறித்து கேட்டபோது ஆந்திரமடைந்த காஜா ரவீக்கும், அவரது தந்தை எஸ்ஐ பாபாவும் நர்கீஸை அடித்து, அவரை பெற்றோருடன் வீட்டிலிருந்து வெளியே விரட்டி விட்டுள்ளனர்.. பின்னர் தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்ற நர்கீஸ், தன்னை அடித்து கொடுமைப்படுத்தியது தொடர்பாக ஜமாத் மூலமாக புகார் செய்துள்ளார். அதையடுத்து ஜமாத்தினர், நர்கீஸின் கணவரை அழைத்து பேசி, சமாதானம் செய்தவைத்து அவருடன் நர்கீஸை அனுப்பி வைத்துள்ளனர்.
அப்போது நர்கீஸை அழைத்து செல்லும்போதே, ”உன்னை என்ன செய்யறேன் பார்? என்று சவால் விட்டபடி அவரது கணவர் கூறியதாக சொல்லப்படுகிறது.. இதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் முல்லை நகரில் இருவரும் தனிக்குடித்தனம் சென்றுள்ளனர். எல்லா பிரச்சனைகளும் சரியாகிவிடும் என நம்பிக்கையோடு சென்ற நர்கீஸுக்கு, அங்கு வரதட்சணை கொடுமை மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
ரவீக், தனது பெற்றோரின் பேச்சை கேட்டு தினமும், நர்கீஸை இரும்பு ராடு போன்றவற்றால் கடுமையாக தாக்கியிருக்கிறார்.. சம்பதன்று மீண்டும் வரதட்சனை கேட்டு ரவீக், நர்கீஸை மோசமாக அடித்து துண்புறுத்தியதுடன், அவரை மாடியிலிருந்து ரவீக் கீழே தள்ளிவிட்டிருக்கிறார்.. இதில் கீழே விழுந்த நர்கீஸை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி மருத்துவமனை அழைத்துசென்றுள்ளனர்.
தனது பெண்னை கொலை செய்யும் நோக்கில் அவரது கணவர் ரவீக் ஈடுபட்டதை அறிந்த நர்கீஸ் பெற்றோர், அவர் மீதும், அவரது பெற்றோர் மீதும் புகார் அளித்துள்ளனர். ஆனால் தனது மாமனர், எஸ்ஐ-யாக இருப்பதால் அதிகாரத்தை பயன்படுத்தி தங்களின் புகாரை சரிவர விசாரிக்காவிடாமல் காலம் தாழ்த்திவந்ததாக பாதிக்கப்பட்ட நர்கீஸ் வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.
தற்போது இரண்டு கால்களும் இழந்து, நடைபிணமாக தான் இருப்பதாகவும், தன்னை போன்று இனி யாரும் வரதட்சனை கொடுமைக்கு ஆளாக கூடாது என வேதனை தெரிவித்த நர்கீஸ், தனது கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆம்புலன்ஸில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று புகார் மனு அளித்திருக்கிறார்.
இந்த நிலையில், இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆம்புலன்ஸ் அருகே வந்து, நர்கீஸ் அவர்களிடம் நடந்த விவரங்களை கேட்டறிந்து இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu