BIG STORIES
”வேறு ஆண்களுடன் பேச கூடாது!” துப்பட்டாவால் காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற காதலன்..
Jul 22, 2025 05:22 AM
304
”வேறு ஆண்களுடன் பேச கூடாது!” துப்பட்டாவால் காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற காதலன்..
வேறு ஆண்களுடன் பேசி வந்ததால் ஆத்திரமடைந்த காதலன்... துப்பட்டாவால் கழுத்து நெரிக்கப்பட்டு, இளம்பெண்ணை கொலைச் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சிட்கோ வளாகத்தில் இளம்பெண் ஒருவர், துப்பாட்டாவால் கழுத்து நெறிக்கப்பட்டுப் பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்டு கிடந்த இளம்பெண் கழனிவாசல் பட்டியை சேர்ந்த சுகன்யா என்றும், திருமணமாகி கணவருடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
அதையடுத்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த சுகன்யாவின் செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்ததில் அதில் சுகன்யா இறப்பதற்குமுன் கடைசியாக ஒரு இளைஞரிடம் பேசியிருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, அந்த இளைஞரை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கிய போலீசார், சுகன்யா ஏன் கொல்லப்பட்டார்? எதற்காக சிட்கோ வளாகத்தில் சுகன்யாவின் உடல் வீசப்பட்டது? என்பது குறித்து விசாரணையை தீவிரபடுத்தினர்.
திருச்சி மாவட்டம், கழனிவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகன்யா. இவருக்கு, 7 ஆண்டுகளுக்கு முன், கஸ்பா பொய்கைபட்டியைச் சேர்ந்த கலையரசன் என்பவருடன் திருமணம் நடந்தது.
ஆனால் திருமணம் நடந்த சில மாதங்களில் கணவரின் உறவினரான தினேஷ் (28), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின் அது திருமணம் தாண்டிய உறவாக மாறியிருக்கிறது.
அதைத்தொடர்ந்து, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர். பின்னர் சில நாட்கள் கழித்து சுகன்யாவின் உறவினர்கள் இவரை தேடி பிடித்து ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் கலையரசனுக்கு, சுகன்யாவுடன் வாழ விரும்பம் இல்லாததால் இருவரும் விவாகரத்து செய்தனர்.
அதைத்தொடர்ந்து வேடசந்துர் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவருடன், கடந்த 2022ஆம் ஆண்டில் சுகன்யாவுக்கு இரண்டாவது திருமணம் நடந்தது.
ஆனால் வினோத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுப்பட்டால் பிரிந்து, தனது தந்தை வீட்டுக்கு திரும்பிய அவர், மீண்டும் பழைய காதலன் தினேஷ் உடன் தனது உறவைத் தொடர்ந்திருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு சென்னைக்கு சென்ற சுகன்யா, அங்கு ஒரு மொபைல் போன் கடையில் பணியாற்றி வந்திருக்கிறார். இதற்கிடையே தினேஷுக்கு திருமணமாகி, அவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார். ஆனாலும், சுகன்யாவுடன் தினேஷ் பழகி வந்ததை நிறுத்தவில்லை.
இந்நிலையில் சுகன்யா, சில நாட்களாக ஆண் நண்பர்களுடன் செல்போனில் பேசிவந்ததாகவும், இதனை தினேஷ் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் சுகன்யா அதனை கண்டு கொள்ளாமல் ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆந்திரமடைந்த தினேஷ், சுகன்யாவை செங்கல்பட்டிற்கு நேரில் சென்று, மணப்பாறைக்கு அழைத்து சென்றிருக்கிறார்.
பின்பு பைக்கில் சிப்காட் வளாகத்திற்கு சுகன்யாவை அழைத்துச் சென்று, ”நீ வேறு ஆண்களுடன் பேச கூடாது” என கண்டித்துள்ளார்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மேலும் கோபமடைந்த தினேஷ், சுகன்யா அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்திருக்கிறார்.
பின்னர் சுகன்யாவின் உடலை சிட்கோ வளாகத்தில் வீசி விட்டு அங்கிருந்து தப்பிசென்றிருக்கிறார். தற்போது இந்த கொலை தொடர்பாக தினேஷை கைதுசெய்துள்ள மணப்பாறை போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu