BIG STORIES
நிச்சயமான பெண்ணை வருங்கால கணவனே ரசித்து கொலை செய்த கொடூரம்..! 100 ஜென்மம் உன்கூட.. எல்லாம் பொய்யா?
Jul 22, 2025 01:39 AM
349
நிச்சயமான பெண்ணை வருங்கால கணவனே ரசித்து கொலை செய்த கொடூரம்..! 100 ஜென்மம் உன்கூட.. எல்லாம் பொய்யா?
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் சௌந்தர்யா. இவர், தனது ஊரை சேர்ந்த தோழிகளோடு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இதற்காக ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவளூர்குப்பம் பகுதியில் தோழிகளோடு சௌந்தர்யா அறை எடுத்து தங்கி வந்துள்ளார்.
சௌந்தர்யா நாகப்பட்டினத்தை சேர்ந்த உறவினரான தினேஷ் என்ற இளைஞனை 8 வருடமாக காதலித்து வந்துள்ளார். காதலன் தினேஷும், சௌந்தர்யா தங்கியிருந்த பகுதியிலே அறை எடுத்து, சௌந்தர்யா வேலை பார்த்து வந்த அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இருவரும் பைக்கில் வெளியே சுற்றுவதையும் அதனை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருவதையும் வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர்.
சௌந்தர்யா - தினேஷ் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இருவீட்டார் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இருவருக்கும், வரும் செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற இருந்துள்ளது.
இந்த நிலையில், சௌந்தர்யாவின் அறையில் தங்கியிருந்த தோழிகள், தினேஷிடம் சௌந்தர்யா யாரோ ஒரு பையனோடு மணிக்கணக்காக போனில் பேசுவதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு ஆத்திரமடைந்த தினேஷ், காதலியிடம் இது குறித்து சண்டையிட்டுள்ளார்.
அது மட்டுமில்லாமல் சௌந்தர்யாவிற்கு தினேஷ் போன் செய்யும்போதெல்லாம், போன் பிசியாக இருப்பதால் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருகட்டத்தில் சௌந்தர்யா , தினேஷின் மொபைல் எண்ணை ப்ளாக் செய்ததாக கூறப்படுகிறது.
கடந்த 17 ஆம் தேதியன்று, சௌந்தர்யாவின் தோழிகள் அனைவரும் வேலைக்கு சென்ற நிலையில். சௌந்தர்யா மட்டும் வேலைக்கு செல்லாமல் அறையில் இருந்துள்ளார்.
சௌந்தர்யா மட்டும் அறையில் இருப்பதை அறிந்த தினேஷ், சௌந்தர்யாவின் அறைக்கு ரகசியமாக சென்றுள்ளார். அப்போது அறையில், சௌந்தர்யாவும், அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த விக்னேஷ் என்ற இளைஞனும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த தினேஷ், அதிர்ச்சியடைந்து சௌந்தர்யாவோடு வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது சௌந்தர்யாவும், விக்னேஷும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. இதனால் தினேஷ் அங்கிருந்து ஆத்திரத்தோடு கிளம்பி சென்றுள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று மதியம் சௌந்தர்யா மட்டும் அறையில் தனியாக இருந்த நிலையில், அங்கு சென்ற தினேஷ், சௌந்தர்யாவோடு வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த தினேஷ், "நீ அழகா இருக்குற, அதுனால தான் பிரச்சனை" என கூறிக்கொண்டே தான் கொண்டுவந்த சுத்தியல், மற்றும் உளியால் சௌந்தர்யாவின் முகம், தலை, உடல் என 15க்கும் மேற்பட்ட இடங்களில் கொடூரமாக தாக்கியுள்ளார்.
மேலும் ஆத்திரம் தீரும் வரை அருகிலேயே அமர்ந்து சைக்கோ தனமாக ரசித்து, ரசித்து அடித்து கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சௌந்தர்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உடனே அங்கிருந்து தனது சொந்த ஊரான நாகப்பட்டினத்திற்கு தப்பிச் சென்ற தினேஷ், நாகப்பட்டினம் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
சௌந்தர்யா கொடூரமான முறையில் கொல்லப்பட்டு கிடப்பதாக தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விக்னேஷிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிச்சயமான பெண், வேறொரு ஆணோடு தொடர்பில் இருந்ததால் காதலன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu