BIG STORIES
"இந்த ஊரே வேணாம்னு சொன்னனே கேக்கலையே..! " காதல் மனைவி ஒப்பாரி.. ரோட்டில் பாய்ந்தது ரத்த ஆறு..
Jul 22, 2025 05:11 AM
369
"இதுக்கு தான இந்த ஊருக்கே வர வேணாம்னு சொன்னேன்" என காதல் மனைவி தலையில் அடித்துக் கொண்டு அழுத காட்சிகள் தான் இவை..
மதுரை மாவட்டம் அண்ணா நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரும்பாலை பகுதியைச் சேர்ந்தவர் பரோட்டா மாஸ்டர் இசக்கிமுத்து. இவர் வேறொரு சமுதாயத்தை சேர்ந்த மணிமேகலை என்ற பெண்ணை காதலித்து சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளார்.
அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்த இசக்கிமுத்து மீது கொலை வழக்கு, அடிதடி வழக்கு என பல வழக்குகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, மது போதையில் இருந்த இசக்கிமுத்து கரும்பலை பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவரின் தம்பி ஒருவரிடம், சிகரெட் வாங்கிவருமாறு கூறி அடித்துள்ளார்.
இதனால் அந்த நபர் தனது அண்ணன் உதயகுமாரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரவுடி இசக்கிமுத்துவிடம் உதயகுமார் தட்டிக்கேட்டபோது இசக்கிமுத்து உதயகுமாரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் முன் பகை இருந்து வந்துள்ளது.
தனது கணவருக்கு இதுபோன்ற எதிரிகள் இருப்பதால், காதல் மனைவி மணிமேகலை, "நமக்கு இந்த ஊரே வேண்டாம்" என கூறி தனது கணவரை திண்டுக்கலுக்கு அழைத்து சென்றுள்ளார். சில மாதங்களாக மனைவியோடு திண்டுக்கலில் தங்கியிருந்த இசக்கிமுத்து மீண்டும் அண்மையில் கரும்பாலை பகுதியில் வீடு எடுத்து மனைவியோடு தங்கிவந்துள்ளார்.
மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலைக்கு சென்றுவிட்டு உலக தமிழ்ச் சங்கம் எதிரேயுள்ள கரும்பாலை சாலையில் மாலையில் இசக்கிமுத்து நடந்து சென்றுள்ளார்.
அப்போது ஏற்கனவே முன்பகை இருந்த உதயகுமாரின் தம்பியை பார்த்த இசக்கிமுத்து , மீண்டும் வம்பிழுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உதயகுமாரின் தம்பி உடனே உதயகுமாரிடம் தெரிவித்துள்ளார்.
அங்கு தனது அண்ணன் பழனியப்பா மற்றும் நண்பர் காளிதாஸோடு உதயகுமார் அங்கு சென்றுள்ளார். "இவனை இப்படியே விட்டால் பிரச்னை" என கருதிய அந்த கும்பல், அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து ரவுடி இசக்கி முத்துவின் தலையில் போட்டுள்ளனர்.
இதில் இசக்கி முத்து தலை நசுங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உடனே கொலை செய்த மூவரும் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து கொலை செய்தவர்கள் உதயகுமார், பழனியப்பா, காளிதாஸ் என அடையாளம் கண்டறிந்தனர்.
தகவல் அறிந்து வந்த இசக்கி முத்துவின் மனைவி, இந்த ஊரே வேணாம்னு சொன்னனே கேக்கலையே" என கதறி அழுது ஒப்பாரி வைத்த காட்சிகள் காண்போரை கலங்க வைத்தது.
பின்னர் இசக்கி முத்துவின் உடலை கைப்பற்றிய போலீசார், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.
கொலை செய்துவிட்டு தலைமறைவான மூவரும் ஆரப்பாளையம் பகுதியில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தங்கள் கிடைத்ததை தொடர்ந்து, மூவரையும் போலீசார் கைது செய்து அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் முன்பகை காரணமாக பழி தீர்ப்பதற்காக நடுரோட்டில் தலையில் கல்லை போட்டு முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu