BIG STORIES
நடிகையின் வாயை அடித்து கிழித்து கொடுமை படுத்திய விர்சுவல் வாரியர் விஷ்ணு..! குற்றப்பட்டியல் நீண்டதால் கைது
Jun 21, 2025 01:45 AM
503
நடிகையின் வாயை அடித்து கிழித்து கொடுமை படுத்திய விர்சுவல் வாரியர் விஷ்ணு..! குற்றப்பட்டியல் நீண்டதால் கைது
சென்னையில் நடிகையை காதலித்து திருமணம் செய்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் அந்த நடிகையை அடித்து துன்புறுத்தி கொடுமைப் படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் விருகம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்
கருங்காலி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் அஷ்மிதா நீல மேகம். அதன் பின்னர் தன்னை ஒரு ஒப்பனை கலைஞராக மறு உருவாக்கம் செய்து கொண்டு அழகு கலை நிபுணரான் இவர் 'அஸ்மிதா மேக்ஓவர் ஆர்டிஸ்ட்ரி’ என்ற பெயரில் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.
விருகம்பாக்கம் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வரும் அஸ்மிதா, இன்ஸ்டாகிராம் பிரபலமான விர்சுவல் வாரியர் விஷ்ணுகுமார் என்பவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இந்த நிலையில் விஷ்ணுகுமார் மீது அஷ்மிதா அடுக்கடுக்கான புகார் ஒன்றை அளித்தார்.
அதில் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதி நானும் என் கணவரும் என் வீட்டில் இருந்து காரில் கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த போது வீட்டில் இருந்து கிளம்பும் போதே சண்டையிட்டு வந்த என் கணவர் கிண்டி கத்திபார மேம்பாலம் அருகில் வந்து கொண்டிருந்தபோது எங்களுக்குள் ஏற்பட்ட வாய்தகராரில் காருக்குள் வைத்து மிகக் கொடூரமாக தாக்கியதில் என் முகத்தாடை கிழிந்து பற்கள் உடைந்தது என்னையும் என் குழந்தையையும் கொலை செய்ய முயன்றார். தன்னை ஒரு கர்ப்பிணி என்று பாராமல் தாக்கியதாகா அஷ்மிதா குறிப்பிட்டுள்ளார்
நான் 9 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் , கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி என் கணவர் நண்பர்களுடன் குடித்துவிட்டு , நண்பரின் சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி தாக்கப்பட்டார். அந்த நள்ளிரவில் நான் சென்று அவரது கைபேசியை வாங்கி பார்த்தபோது என் கணவர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. அந்த பெண்களுடன் தவறான உறவில் இருப்பதை வீடியோ எடுத்து அவருடைய கைபேசியில் வைத்து இருந்ததையும் பார்த்து மிகுந்த மன உளச்சலுக்கு ஆளானதாக குறிப்பிட்டுள்ளார் அஷ்மிதா
அடுத்ததாக கடந்த மே மாதம் 5ஆம் தேதி என் கணவர் மற்றும் மாமியார் ஆகியோரை கடன் மோசடி வழக்கில் பெங்களூரு போலீசார் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். பெங்களூர் காவல் நிலையத்தில் இருந்து என்னை செல்போனில் தொடர்பு கொண்ட விஷ்ணு, 37 லட்சம் ரூபாயை திருப்பி கொடுத்தால் தான் வெளியில் விடுவதாக சொல்கிரார்கள் என்று என்னிடம் கெஞ்சி மனமுடைந்து பேசினார். இதையடுத்து அடுத்த இரண்டு மணி நேரத்தில் என் அம்மாவின் வங்கியிலும் , என் நடப்பு கணக்கு வங்கியிலும் அவசர கடன் பெற்று அந்த கடன் தொகையை வங்கி மூலம் என் கணவரின் வங்கி கணக்கிற்கு செலுத்தி என் கணவரை காவல் நிலையத்திலிருந்து மீட்டதாக தெரிவித்துள்ளார் அஷ்மிதா
இது குறித்த எவ்வித நன்றியுணர்வும் இல்லாமல் விஷ்ணுகுமார் மீண்டும் தொடர்ந்து மது போதைகளுக்கு அடிமையாகி சமூக வலைதளத்தில் என்னையும் என் குடும்பத்தையும் பற்றி ஆதாரமற்ற பொய்களை யூடியூப் சேனல்களில் பதிவிட்டு வருகிறார். கடந்த 8ந்தேதி மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்த நிலையில் தினமும் மது போதையில் வந்து தன்னை காட்டு மிராண்டி தனமாக தினமும் அடித்து உதைத்து துன்புறுத்துவதாக கணவர் விஷ்ணுகுமார் மற்றும் உடைந்தையாக உள்ள அவரது தாயார் ஆனந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க அஷ்மிதா கோரி இருந்தார்.
அதன் பேரில் பெண் வன்கொடுமை, மோசடி, கொலை மிரட்டல், கொலை முயற்சி மற்றும் சமூக வலைதளத்தில் பொய்யான தகவல்களை தொடர்ந்து பரப்புதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விஷ்ணுகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஒரு காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து பொங்கி.. இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட விர்சுவல் வாரியர் விஷ்ணு அதே வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu