RECENT NEWS

பூங்காவில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்பட்ட விவகாரம்..!

பூங்காவில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்பட்ட விவகாரம்..!

Jul 18, 2025

பூங்காவில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்பட்ட விவகாரம்..!

பூங்காவில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்பட்ட விவகாரம்..!

Jul 18, 2025

முகப்பு

ஹனிமூன் மர்டர் மாதிரி 'கறிக்குழம்பு' மர்டர்.. திருமணமான 36 நாளில் மாப்பிள்ளை மர்கயா..!

Jun 20, 2025 08:00 AM

156

ஹனிமூன் மர்டர் மாதிரி 'கறிக்குழம்பு' மர்டர்.. திருமணமான 36 நாளில் மாப்பிள்ளை மர்கயா..!

மேகாலயாவில் திருமணமாகி ஹனிமூனுக்கு சென்ற இடத்தில் மனைவி கணவனை தீர்த்துக் கட்டிய ஹனிமூன் மர்டரின் பதற்றம் குறைவதற்குள்ளேயே ஜார்கண்டில் திருமணமான 36 நாளில் மனைவி கணவனை தீர்த்து கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டம் பஹோகுந்தர் கிராமத்தை சேர்ந்த 22 வயதான சுனிதா என்பவருக்கும், சத்தீஸ்கர் மாநிலம் ராம்சந்திரபூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட விஷுன்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரகுநாத் சிங் என்பவருக்கும் இரு வீட்டார் முன்னிலையில் கடந்த மே 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் ஆகி கணவர் வீட்டிற்கு சென்ற சுனிதா, சில நாட்களிலேயே ரகுநாத் சிங்கை பிடிக்கவில்லை அவரோடு வாழமுடியாது என கூறி தனது தாயார் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஜூன் 5 ஆம் தேதியன்று விஷ்ணுபூரில் வைத்து இரு வீட்டாரும் பஞ்சாயத்து பேசியுள்ளனர். பஞ்சாயத்து முடிவில் சுனிதாவின் பெற்றோர் சுனிதாவை சமாதானம் செய்து வைத்து கணவரோடு அனுப்பி வைத்துள்ளனர்.

ஜூன் 15 ஆம் தேதியன்று, கணவனுக்கு பிடித்த கறிக்குழம்பை செய்து வைத்த சுனிதா, கணவருக்கு பரிமாறியுள்ளார். அதனை சாப்பிட்ட சில நேரத்திலேயே ரகுநாத் சிங் அசௌகரியமாக உணர்ந்துள்ளார். இதனால் ரகுநாத் சிங்கின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனால் மருத்துவர்கள் சந்தேகமடைந்து உடலை சோதனை செய்தபோது ரகுநாத் சிங் உடலில் நச்சு தன்மை கொண்ட பொருள் இருந்தது தெரியவந்துள்ளது. மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ரகுநாத் சிங்கின் தாயார் ராஜ்மதி தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் சுனிதாவை பிடித்து விசாரித்தபோது, கணவருக்கு கறிக்குழம்பில் பூச்சி கொல்லி மருந்தை கலந்து கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் இதற்கு முந்தைய நாள், சமயலறை தோட்டத்திற்காக கணவரிடம் கூறி மார்க்கெட்டில் இருந்து பூச்சி மருந்து வாங்கி வர சொன்னதும், ரகுநாத் சிங் வாங்கிக் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் விசாரணையில், சுனிதா எக்ஸ்ட்ராவாக இரண்டு பூச்சி கொல்லி மருந்து பாக்கெட்டுகள் வாங்கி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. ஒரு வேலை கணவர் இறக்கவில்லை என்றால் ப்ளான் பி,பிளான் சி என அடுத்தடுத்த ப்ளான்களை சுனிதா கைவசம் வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

கணவரை கொலை செய்ய காரணம் என்ன? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்த போது, அதே பகுதியை சேர்ந்தவர்கள் சில தகவல்களை தெரிவித்துள்ளனர். சுனிதாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் தகாத உறவு இருப்பதாகவும், அதனால் கணவரை தீர்த்து கட்டிவிட்டு அவரது காதலனோடு செல்ல முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது.

சுனிதாவை போலீசார் கைது செய்த நிலையில், இதில் வேறு யாரும் உடந்தையாக இருந்தால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணைப் பிரிவு காவல் அதிகாரி ரோஹித் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

புதியதாக திருமணம் ஆன கணவர்களை ஹனிமூன் மர்டர், கறிக்குழம்பு மர்டர் என வித்தியாச வித்தியாசமாக மனைவிகள் கொலை செய்வது போன்ற சம்பவங்கள் வைரலாக பரவி வருவதால் புதிதாக திருமணம் செய்பவர்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஆசை ஆசையாய் காத்திருந்து வீட்டில் அடம்பிடித்த இளைஞர்..! ஒன்றரை மாதத்தில் சோகம்..! உயிர் கொடுத்தவருக்கு உயிர் இல்லை..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies