அதிமுக - பாஜக கூட்டணியை பார்த்து பயம் - இ.பி.எஸ்
Jul 23, 2025
உலகம்
ஈரானில் இருந்து இதுவரை 517 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர் - வெளியுறவுத் துறை
Jun 21, 2025 07:04 AM
57
ஈரானில் இருந்து இதுவரை 517 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர் - வெளியுறவுத் துறை
ஆபரேஷன் சிந்து நடவடிக்கை மூலம் ஈரானில் இருந்து இதுவரை 517 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளதையடுத்து, ஈரானில் உள்ள இந்தியர்களை விமானம் மூலம் பாதுகாப்பாக அழைத்துவரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
மோதல் காரணமாக, மூடிய தனது வான் எல்லையை இந்தியர்கள் வெளியேறுவதற்கு வசதியாக ஈரான் பிரத்யேகமாகத் திறந்துவிட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு துர்க்மெனிஸ்தான் வழியாக 290 பேர் இந்தியா வந்தனர். இன்று மேலும் இரு விமானங்களில் இந்தியர்கள் நாடு திரும்ப உள்ளதாகவும், ஈரானில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் இணைந்து பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu