முகப்பு
"உன்னோட தாய் சாபம் குழந்தைகளை பாதிக்கும் மன்னிப்பு கேட்டு போ..” புத்தி சொன்ன காவல் ஆய்வாளர்..
Jun 20, 2025 08:34 AM
233
பெத்த மனம் பித்து... பிள்ள மனம் கல்லு... என்ற சான்றோர் வாக்குப்படி காவல் நிலையத்தில் புத்தி சொல்லும் காவல் ஆய்வாளரின் வார்த்தைகளை கேட்ட பின்னரும்... கல் சிலை போல நிற்கும் இவர் தான் கட்டிட மேஸ்திரியின் காதல் வலையில் விழுந்த டிப்ளமோ படித்த இளம் பெண் சந்திதா..!
தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த சீரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி அருள்குமாரும், கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் அடுத்த அரசம்பட்டியை சேர்ந்த சந்திதா என்ற பெண்ணும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமாகி காதலித்து வந்தனர். சந்திதா டிப்ளமோ அக்ரிகல்சர் படித்து முடித்துவிட்டு பென்னாகரம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். 6 மாதம் தொடர்ந்த இவர்களின் காதலுக்கு சந்திதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறிய சந்திதா ஓசூரில் உள்ள முருகன் கோயிலில் வைத்து தனது காதலன் அருள்குமாரை திருமணம் செய்து கொண்டார். தங்கள் பெண்ணை காணாமல் சந்திதாவின் பெற்றோர் தீவிரமாக தேடி வந்த நிலையில் பெற்றோருக்கு பயந்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு பாலக்கோடு மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
இதையடுத்து இருவரின் பெற்றோர்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். காவல் நிலையத்திற்க்கு வந்த பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தன்னுடன் வருமாறு அவரது தாய் கண்ணீர் விட்டு கதறி அழுது பார்த்தார் . சந்திதா தனது காதலனை விட்டு பிரிந்து செல்ல மறுத்தார். காவல் ஆய்வாளரும் தாயின் பெருமையை எடுத்துக்கூறிப்பார்த்தால் சந்திதா தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
காதலனுடன் தான் செல்வேன் என போலீசாரிடம் உறுதியாக கூறியதால், “உன்னோட தாய்கிட்ட சாபம் வாங்காத அது உன்னோட குழந்தைகளை பாதிக்கும் , பெத்தவங்ககிட்ட மன்னிப்பு கேட்டுட்டு உன் விருப்பபடி போ..” என்று புத்திமதி சொன்ன காவல் ஆய்வாளர் , அந்த பெண்ணை காதலனுடன் அனுப்பி வைத்தார்
தங்கள் மகள் தங்களை விட்டு பிரிந்து சென்ற சோகத்துடன் அவரது தாய் தந்தையினர் வீட்டிற்கு சென்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu