முகப்பு
சிக்கலில் சிரியல் நடிகை பாண்டியன் ஸ்டோர் 2 நடிகையின் தில்லாலங்கடி வேலை வெளியான அதிர்ச்சி தகவல்
Jun 17, 2025 02:49 PM
277
பாண்டியன் ஸ்டோர் 2 நடிகை மீது புகார் சிக்கலில் சிரியல் நடிகை
பாண்டியன் ஸ்டோர் 2, பொன்னி, ஆனந்த ராகம் போன்ற ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலமான ரிஹானா, திருமணம் செய்து, பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவருபவர் ரிஹானா பேகம். சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் இவர், சீரியலை தாண்டி, யூடியூப் சேனல்களில் சீரியல் நடிகர், நடிகைகள் இல்லற வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனை குறித்து, வாண்டடாக பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு அர்னவ் மற்றும் அவருடைய மனைவி திவ்யா இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டபோது ரிஹானா திவ்யாவுக்கு ஆதரவாக பேசி இருந்தார். மேலும் அர்னவுக்கு அறிவுரை கூறும் ஆடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதேபோல் சீரியல் நடிகை சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் ஆகியோர் இடையே பிரச்சனை ஏற்பட்டபோதும் விஷ்ணுகாந்துக்கு ஆதரவாக ரிஹானா பேசியிருந்தார்.
இவ்வாறு மற்ற சீரியல் நடிகர்களின் குடும்ப பிரச்சனைகளில் தலையிட்டு கருத்துக்களை கூறி வந்த ரிஹானா மீது தற்போது திருமண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தொழிலதிபர் ராஜ் கண்ணன் என்பவர் ரிஹானா... தன்னை திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி, சென்னை பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை ரிஹானா பேகம் தன்னுடைய நண்பர் மூலம் தனக்கு அறிமுகமானார். அவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்று விட்டதாக கூறியதாகவும், 2 குழந்தைகள் மற்றும் தன்னுடைய தாயாருடன் தனியாக வசித்து வருவதாக கூறினார்.
ஒருமுறை அவர் என்னை வீட்டுக்கு அழைத்து சென்றார். அப்போது அவரின் அம்மா, என் கையை பிடித்து கொண்டு தன்னுடைய மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கெஞ்சியதாகவும், ஒரு கட்டத்தில் தானும் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன் என கூறியிருக்கிறார். அதன்படி சமீபத்தில் இவர்களின் திருமணம் ராஜ் கண்ணனின் நண்பர் வீட்டில் நடந்தது.
திருமணத்திற்கு பின்னர், ராஜ் கண்ணன், ஒன்றாக வாழ இனி நீங்கள் தனியாக இருக்கவேண்டாம். உன் அம்மா மற்றும் பிள்ளைகளுடன் பூந்தமல்லியில் உள்ள என்னுடைய வீட்டிற்கு வர வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை மறுத்த ரிஹானா, தான் ஒரு நடிகை என்பதால் தன்னை பார்க்க சிலர் வீட்டுக்கு வருவார்கள். அவர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அதையெல்லாம் நீங்கள் கண்டும் காணாமல் இருக்க வேண்டும் என்று ரிஹானா, தன்னிடம் பேசிய ஆடியோ இருக்கிறது என்றும் ராஜ் கண்ணன் அந்த புகாரில் கூறியிருக்கிறார்.
பணம் கஷ்டம், தேவை என கூறி அவ்வப்போது சிறுக சிறுக 18 லட்சம் ரூபாய்க்கு மேல் ரிஹானா ராஜ் கண்ணணிடமிருந்து பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார், ரிஹானா பேகம், அவருடைய தாய் மும்தாஜ் மற்றும் முதல் கணவர் ஹபிபுல்லா ஆகிய 3 பேரை அழைத்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து புகார்களும் தவறானது என்று மறுத்துள்ள ரிஹானா, தன்னை பிறந்த நாள் விழாவுக்கு நண்பர் வீட்டிற்கு வரவழைத்து ஏமாற்றி ராஜ்கண்ணன் தாலிகட்டியதாகவும் , தான் நகைகளை விற்று கொடுத்த 18 1/2 லட்சம் ரூபாயை வைத்து தான் வேளச்சேரியில் ரெஸ்ட்ரோ பாரை ஆரம்பித்ததாகவும் தனது பணத்தை மோசடி செய்தது குறித்து கடந்த 2023 ஆம் ஆண்டே மகளிர் ஆணையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். மன்னிப்பு கேட்டதால் புகாரை வாபஸ் பெற்றதாக குறிப்பிட்டுள்ள ரிகானா, ஒரு கட்டத்தில் அதனை தரமறுத்து தன்னை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்பதற்காக தன் மீது பொய்யான புகாரை அளித்திருப்பதாக ஆடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்
இதைத்தொடர்ந்து போலீசார் இரு தரப்பிடமும் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu