இந்தியா
”மகனின் எலும்பு கூடாவது கொடுங்கள்”.. தாய்க்கு உணவு கொடுக்க வந்த சிறுவன் உயிரை விட்ட சோகம்..!
Jun 18, 2025 11:03 AM
277
சிறுவன் உயிரை விட்ட சோகம்..!
அகமதாபாத்தில் உள்ள ஏர் இந்தியா விபத்து நடந்த இடத்திலிருந்து ஒரு தாய், தனது மகனைக் காப்பாற்ற தீவிரமாக முயற்சிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரின் மனதையும் உலுக்க செய்துள்ளது.
”மதிய வேலை அம்மாவிற்கு பசி எடுக்கும்.. சீக்கிரம் உணவை கொண்டுபோய் தரவேண்டும்” என மூச்சிரைக்க வந்த சிறுவனின், மூச்சு அடங்கிப்போன சோகக் கதையை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் கேட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அருகே இருந்த மருத்துவக் கல்லூரி விடுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் மட்டுமின்றி, விடுதியில் இருந்த மாணவர்கள் மற்றும் அப்பகுதியில் இருந்தவர்கள் என பலரும் உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்தில் அப்பகுதியில் இருந்த 14 வயதான ஆகாஷ் என்ற சிறுவனும் உயிரிழந்தார். ”தான் பெற்ற மகன், தன் கண்முன்னே தீயில் கருகுகிறானே” என அவனின் தாய் கதறி அழும் அந்த காட்சி காண்போரை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது.
அகமதாபாத் விமான நிலையில் அருகே உள்ள மெகானி என்ற குடியிருப்பு பகுதியில் உள்ள தனது அம்மா சீதாபென்னின் தேனீநீர் கடைக்கு எப்போதும் போல மதிய உணவு கொடுக்க வந்தான் 8 ஆம் வகுப்பு படித்துவந்த சிறுவன் ஆகாஷ்.
அன்றுதான், தனது அம்மாவை கடைசியாக பார்க்க போகிறோம், என அந்த சிறுவனுக்கு அப்போது தெரியாது. தாய்க்கு உணவு கொடுத்துவிட்டு, பின்னர் கடைக்கு அருகே விளையாடிக்கொண்டிருந்தான் ஆகாஷ். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் தீப்பிழம்புகள் அவனை சூழ்ந்தன.
தீயின் கோர முகத்தை கண்ட அப்பகுதி மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட, தனது மகன் அங்கே தானே விளையாட சென்றான்! என உணர்ந்த தாய் சீதாபென், மகனை காண ஓடிச்சென்றிருக்கிறார். தான் ஆசை ஆசையாய் வளர்த்த மகன் தீயில் சிக்கிக்கொண்டானே என துடிதுடித்து போன அந்த தாய், விபத்து நடந்த இடத்தை நெருங்கி தனது மகனைக் காப்பாற்ற முயன்றார்.
ஆனால் அதற்குள் சிறுவன் ஆகாஷ் தீயிக்கு இறையானார். இந்த போராட்டத்தில் தாய் சீதாபென்னுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகன் இறந்ததை கூட அறியாத சீதாபென், தற்போது அவர் சிகிச்சைபெற்றுவரும் நிலையில், ”தங்களது மகன் இறந்துவிட்டான் என்பதை எப்படி மனைவியிடம் சொல்வேன்” என ஆகாஷின் தந்தை, சுரேஷ் பாய் பட்னி குமுறி வருகிறார். ஒருபக்கம் மனைவி மருத்துவமனையிலும், மறுபக்கம் மகன் பிணவறையிலும் இருக்கும் சுரேஷ் பாய்யின் நிலையை விவரிக்க வார்த்தைகளே இல்லை.. உணவு கொடுத்துவிட்டு வருவதாக சென்ற மகன், உயிரிழந்த நிலையில், ”தனது மகன் ஆகாஷின் எலும்பு கூடாவது கொடுங்கள்” என அகமதாபாத்தின் மருத்துவமனைக்கு வெளியே கதறி துடித்துக்கொண்டிருக்கிறார் சுரேஷ் பாய்..
இப்படியாக அகமதாபாத் விமான விபத்தில் பலியான ஒவ்வொருவரின் தனிப்பட்ட கதைகளும் நெஞ்சைக் கலங்கடிக்க செய்துள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu