953 கிலோ கஞ்சா மூட்டைகள் தீயில் போட்டு எரிப்பு
Jul 16, 2025
ஆதவ் அர்ஜூனாவுக்கு கொலை மிரட்டல் - ஒருவர் கைது
Jul 16, 2025
முகப்பு
“இந்த பொல்லாத உலகத்திலே ஏன் என்னை படைத்தாய் இறைவா வலி தாங்காமல் கதறும் கதறல்...” சிறுமி மர்டர் Heart Breaking PM Report
Jun 21, 2025 03:36 PM
161
சிறுமிக்கு சித்திரவதை; மாமனுடன் தாயும் கைது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் திடீர் திருப்பம்!
இந்த பொல்லாத உலகத்திலே, ஏன் என்னை படைத்தாய் இறைவா,
வலி தாங்காமல் கதறும், கதறல் உனக்கே கேட்க வில்லையா... என்பதுபோல, எப்படி எப்படியெல்லாம் அந்த சின்னஞ்சிறு பெண் குழந்தை, மரண வலி தாங்காமல் கதறி துடித்திருக்கும்? என்று யோசிக்கும்போதே நம் இதயங்களில் ரத்தக்கசிவை ஏற்படுத்திவிடுகிறது. அந்தளவுக்கு, சிறுமி பாலியல் சித்திரவதை கொலையில் பகீரிடவைக்கும் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
மூன்று வயது பெண் குழந்தை... பிறப்புறுப்பு, நெஞ்சுப்பகுதி, உதடுப்பகுதி என குதறிய காயங்களுடன் உடல் சிதைந்து, உருக்குலைந்து மருத்துவமனையின் பிணவறையில் கிடப்பதைப் பார்க்கும்போதே, நம் இதயம் வெடித்துவிடுமோ என மூச்சுத்திணற வைக்கிறது, இக்கோடூர சம்பவம்!
சிறுமிக்கு நேர்ந்த சித்திரவதைகள் என்ன? சிறுமியின் உடலை எடுத்துக்கொண்டு பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்த தாயும் கைது செய்யப்பட்ட பின்னணி என்ன? போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் வெளியான திடுக்கிடவைக்கும் தகவல்கள் என்னென்ன? என்பது குறித்து விவரிக்கிறது, இந்த இதயம் நொறுங்கவைக்கும் செய்தி தொகுப்பு...
கடலூர் மாவட்டம், கே.ஆடூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியருக்கு இரண்டு ஆண் மற்றும் பெண் குழந்தைகள். இந்த நிலையில், கணவருக்கு இதய ஆபரேஷன் செய்யப்பட்ட நிலையில், மனைவியின் சகோதரன் அதாவது சித்தப்பா மகன் ஜீவா என்பவர் பார்க்க வந்துள்ளார். அப்போது, “உங்கள் மனைவி, பிள்ளைகள் 10 நாட்கள் எங்கள் வீட்டில் தங்கி இருக்கட்டும். பிறகு, அனுப்பிவைக்கிறேன்” என கூறியுள்ளார்.
“நானே உடல்நலம் சரியில்லாமல் உள்ளேன். பிள்ளைகளுக்கு ஸ்கூல் திறந்துவிடும்” எனக்கூறியும்கூட, வற்புறுத்தி ஜீவா, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்துள்ள குணகம் பூண்டிக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
‘சின்ன மாமனார் பையன் தானே?’ என மூன்று பிள்ளைகளையும் மனைவியுடன் அனுப்பிவைத்துள்ளார், கணவர். 10 நாட்கள் கழித்து ஜீவாவை தொடர்புகொண்டவர், “ஸ்கூல் திறக்குதே... பசங்களை ஏம்பா அனுப்பிவைக்கல?” என கேட்டுள்ளார். 1,000 ரூபாய் பணம் கொடுத்து மூன்று பிள்ளைகளையும் அனுப்பி வைத்துவிட்டேனே என கூறியுள்ளார், ஜீவா.
மனைவி குழந்தைகளுடன் கடலூர்தானே வந்திருப்பார்? என கடலூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் தேடி அலைந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில்தான், மனைவியிடமிருந்து ஃபோன் வந்திருக்கிறது. “கடலூர் ஜி.ஹெச்சில் இருக்கேன். மூணு வயசு குழந்தை இறந்துடுச்சு” என கூறியிருக்கிறார். உடனே, கணவர் குடும்பத்தார் பதறியடித்துக்கொண்டு சென்று கடலூர் GH ல் பார்த்துள்ளார்கள். ஆனால், மனைவியையும் குழந்தைகளையும் காணவில்லை. அப்படி, யாரும் அட்மிட் செய்யப்படவில்லை என கூறியுள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் தேட ஆரம்பித்துள்ளார்கள், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர். அப்போது, ஜூன் 17 ஆம் தேதி கடலூர் பேருந்து நிலைய காய்கறி மார்க்கெட்டிலிருந்து வரும்போது, ஒரு பேருந்திலிருந்து “அப்பா... அப்பா” என குழந்தைகள் கூக்குரலிட்டு அழைக்கும் சத்தம் கேட்டுள்ளது.
சென்று பார்த்தபோதுதான், 10 வயது ஆண் குழந்தை மற்றும் 5 வயது பெண் குழந்தை அருகில் நிற்க, 3 வயது குழந்தை தலை தொங்கியபடி இருந்துள்ளது. என்ன நடந்தது? என கேட்டபோது, மனைவி அமைதியாக எதுவும் சொல்லாமல் கல்லுளி மங்கையாக நிற்க,
5 வயது பெண் குழந்தையோ, “அவன் தான் பாப்பாவை அடிச்சு கொண்ணுட்டான். என் கண்ணால பார்த்தேன்” என கதறியபடி கூறியிருக்கிறாள்.
அந்த ஜீவா என்பவன் தான் குழந்தையை இப்படி சீரழித்து கொலை செய்திருப்பான் என்ற சந்தேகத்துடன் புகார் அளித்தனர், கணவரின் உறவினர்கள். இதனைத் தொடர்ந்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோதுதான் திடுக்கிடும் பின்னணி வெளிவர ஆரம்பித்தது.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 3 வயது சிறுமிக்கு பிரேத பரிசோதனை நடைபெற்றதில், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி திருவண்ணாமலை அருகே பதுங்கி இருந்த ஜீவாவை கைது செய்தனர்.
மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த 3 வயது குழந்தையின் தாயையும் போலீசார் கைது செய்த நிலையில், ஜீவாவை கடலூருக்கு கொண்டு வரும்போது, வழியில் அவர் தப்பி ஓட முயற்சித்துள்ளார். போலீசார் அவரை மடக்கி பிடித்தபோது கீழே விழுந்ததில் பாலியல் கொடூரன் ஜீவாவின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அவர் ஜீவாவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விசாரணையில் மூன்று வயது குழந்தைக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அடித்து துன்புறுத்தியதால் அந்த குழந்தை வலி தாங்கமுடியாமல் துடி துடித்து உயிரிழந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
தாயின் குடிப்பழக்கம், தகாத நட்பு என்பதோடு, மனைவியின் சகோதரன் தானே என நம்பி மனைவி, பிள்ளைகளை அனுப்பிவைத்த நிலையில், மூன்று வயது குழந்தைக்கு ஜீவா கொடூரமாக பாலியல் தொந்தரவு கொடுத்து, அடித்து படுகொலை செய்த சம்பவம், கடலூர் மாவட்ட மக்களையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
மேலும், ஜீவா 5 வயது குழந்தையிடமும் பாலியல் சித்திரவதையில் ஈடுபட்டுள்ளாரா? ஜீவாவுடன் இருந்த உண்டியல் என்பவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை செய்துவருகிறார்கள். அத்துடன், ஜீவாவிற்கு இந்த தண்டனையெல்லாம் போதாது. போலீஸ் இன்னும்கூட ‘ஸ்ட்ராங்காக மடக்கி பிடித்திருக்கலாம்’. இன்னும் கடுமையான தண்டனையை கொடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள், பொதுமக்கள்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu