BIG STORIES
மறுவீடு சென்ற பெண்ணிற்கு பாலியல் டார்ச்சர்..! அதுக்கு குடும்பமே சப்போர்ட்டாம்..! ஜாமீனில் அனுப்பிய போலீசார்..
Jul 14, 2025 10:05 AM
311
மறுவீடு சென்ற பெண்ணிற்கு பாலியல் டார்ச்சர்..! அதுக்கு குடும்பமே சப்போர்ட்டாம்..!
திருமணமாகி கணவர் வீட்டிற்கு ஆசையோடு சென்ற பெண்ணை அடித்து சித்ரவதை செய்ததோடு, மாமனார் பாலியல் தொல்லை அளித்ததாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் நீதி கேட்டு போராடிய சம்பவம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..!
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே மலையடிவாரத்தில் உள்ள ராசிகுட்டை பகுதியை சேர்ந்தவர்கள் ராஜா - சாந்தா தம்பதியினர். இவர்களின் ஒரே மகனாக ராஜீவ்காந்தி என்பவருக்கு கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதியன்று திருமணம் நடைபெற்றுள்ளது.
சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ராஜீவ்காந்தி, திருமணமான 10 நாட்களிலேயே மனைவியை சொந்த ஊரில் விட்டுவிட்டு வேலைக்காக சென்னை சென்றுள்ளார். ராஜீவ்காந்தியின் மனைவியிடம் போன் இல்லாததால் மாமனார் ராஜாவின் மொபைலில் இருந்து தினமும் கணவருடன் பேசி வந்துள்ளார்.
திருமணம் ஆன புதிதில் கணவர் மனைவி இருவரும் போனில் நெருக்கமாக பேசி வந்ததை, மாமனார் ராஜா போனில் ஆட்டோ கால்ரெக்கார்டு மூலம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ராஜா , தனது மருமகளை தவறாக நினைத்து கொண்டு, பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து தனது கணவர் ராஜூவ் காந்தியிடம் சொன்னால் அவர் கண்டிப்பார் என அந்த பெண்ணும் கணவரிடம் தெரிவிக்க, அவர் அப்படித்தான், அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ என கூலாக கணவர் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனை கேட்டு அந்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுமுறையில் வந்த கணவரிடம் உங்க அப்பா என்னை ரொம்ப டார்ச்சர் செய்கிறார் என்னால் இனிமேல் இங்கு இருக்க முடியாது, நான் என் அம்மா வீட்டிற்கு செல்கிறேன் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கணவர் ராஜூவ்காந்தி மனைவியை ஆபாசமாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.
படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் கொடுத்த புகாரின் பேரில் காவேரிப்பட்டிணம் போலீசார் உறவினர்களை வைத்து பஞ்சாயத்து பேசி அனுப்பிவைத்துவிட்டதாகவும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் என கூறப்படுகிறது.
மேலும் கடந்த 2024ம் ஆண்டு வீட்டில் இருந்த மருமகளுக்கு, மாமனார் ராஜா முத்தம் கொடுக்க முயன்றதாகவும், அப்போது ஆத்திரத்தில் அந்த பெண் அரிவாள் மனையால் உன்னை வெட்டி கொன்று விடுவேன் என மிரட்டியதால் அங்கு இருந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
மாமனார் பாலியல் தொல்லை கொடுப்பது பற்றி மாமியாருக்கும், நாத்தனாருக்கும் தெரிந்தும் அவர்கள் இது பற்றி எதுவும் கண்டிக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் வேதனையோடு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து இது போன்று நடந்து வருவதால் அந்த பெண், தனது தாய் வீட்டிற்கு அடிக்கடி கோபித்து கொண்டு செல்வதும் பின்னர் கணவர் தனது வீட்டிற்கு அழைத்து வருவதும் வாடிக்கையாக நடந்து வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 5ம் தேதியன்று மதுபோதையில் இருந்த மாமனார் ராஜா, ஜெயஸ்ரீயை தாக்கி ஆபாசமாக பேசியதாகவும், அப்போது அருகில் இருந்த கணவன் ராஜூவ் காந்தியும் சேர்ந்து மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது காயங்களுடன் அந்த பெண் அறைக்குள் தப்பித்து சென்ற போது, மாமனார் கடப்பாரை வைத்து கதவை உடைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து காயங்களுடன் தப்பித்த பெண்ணிற்கு தருமபுரி அரசு மருத்துவமனையில் 5 நாட்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண், தனக்கு நேர்ந்த கொடுமைகளை ஆடியோ ஆதாரத்தோடு காவேரிப்பட்டிணம் காவல் நிலையத்தில் கணவர் மீதும் மாமனார் மீதும் புகார் அளித்துள்ளார்.
ஆனால் போலீசார் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் மாற்றுதிறனாளி தந்தை, காவல் நிலையத்திற்கு சென்று எப்.ஐ.ஆர்., நகல் கேட்டதற்கு, இன்னும் எப்.ஐ.ஆர். க்ளோஸ் செய்யவில்லை, நீ கேட்ட உடனே எல்லாம் தர முடியாது, நீ முதல்ல இங்கிருந்து கிளம்பு என போலீசார் அவரை அனுப்பி வைத்துவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் வேதனையோடு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, மகளின் திருமணத்திற்கு வரதட்சணையாக 15 சவரன் நகை, இரண்டு வாகனம் வாங்கி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து மூன்று முறை காவேரிப்பட்டிணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் வேதனையோடு தெரிவித்துள்ளார்.
பின்னர் மருமகனின் வீட்டிற்கு அருகிலேயே மகளையும், மருமகனையும் தனிக்குடித்தனம் வைத்ததாகவும், அப்போது கூட அரிசி, பருப்பு என வீட்டு சாமான்களை தான் தான் வாங்கி கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் பல முறை புகார் அளித்தும் குற்றவாளிகள் மீது போலீசார் பெயரளவுக்கு அடிதடி வழக்குப்பதிவு மட்டும் செய்து ஜாமினில் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu