RECENT NEWS

கோலாகலமாக தொடங்கிய காற்றாடித் திருவிழா

BIG STORIES

"லவ் மேரேஜ் பண்ண பொண்ண அடிச்சு மாட்டிட்டாங்க".. புள்ளத்தாச்சினு கூட பாக்கல" - ரிதன்யாவை அடுத்து குமுதா?

Jul 14, 2025 01:20 PM

277

கோவையை சேர்ந்த ரிதன்யா என்ற பெண் திருமணமாகி சில மாதங்களிலேயே மாப்பிள்ளை வீட்டார் செய்த டார்ச்சர் தாங்க முடியாமல் ஆடியோ ஒன்றை பதிவிட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த சம்பவத்தின் தாக்கம் குறைவதற்குள்ளாகவே காதல் திருமணம் செய்து 2 ஆண்டுகளே ஆன பெண்ணை கணவர் வீட்டினர் துன்புறுத்தி கொலை செய்துவிட்டதாக பெண்ணின் வீட்டினர் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அங்கு உடன் வேலைபார்த்து வந்த குமுதா என்ற பெண்ணிற்கும் அஜித்குமாருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

இருவரும் வேறு வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்ற நிலையில் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்துள்ளது. திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் அஜித்குமார் குடும்பத்தினர் சம்மதத்தோடு இருவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. அஜித்குமார் - குமுதா தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ஒரு கைக்குழந்தை உள்ளது.

இந்த நிலையில், வீட்டில் இருந்த குமுதா தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பூந்தமல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய குமுதாவின் அண்ணி பவித்ரா, திருமணம் ஆனதில் இருந்தே குமுதாவிற்கு வரதசட்சனை போடவில்லை எனவும், ஜாதியை காரணம் காட்டியும் பெல்டால் அடித்து சித்தரவதை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

குமுதா 3 மாத கர்ப்பிணியாக இருந்தபோதே இந்த கொடுமைகளையெல்லாம் தாங்கமுடியாமல், அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றதாகவும், ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஜித்குமார் மதுவுக்கு அடிமையாகி, அடிக்கடி நண்பர்களோடு ஹோட்டலில் ரூம் எடுத்து குடித்து வந்ததாகவும், சம்பவத்தன்று கூட அப்படி வெளியே சென்ற அஜித்குமார், குமுதா போனை எடுக்கவில்லை என நண்பர் ஒருவரை அனுப்பி பார்க்க சொன்னதாவதும், அப்போது குமுதா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது.

சுவற்றில் இருக்கும் கம்பி உயரமாக இருக்கிறது அதில் உயரம் குறைவாக இருக்கும் குமுதாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முடியாது. அதனால் அவரை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் ஏதோ செய்து விட்டனர் என்றும் குமுதாவின் அண்ணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய குமுதாவின் தாயார், திருமணத்திற்கு நகைகள் போடவில்லை, எதுவும் செய்யவில்லை என்று பலமுறை சண்டையிட்டு மகளை அடித்து துன்புறுத்தியதாகவும், ஜாதியை குறிப்பிட்டு தகாத வார்த்தைகளில் திட்டி உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒன்றரை வயதில் குழந்தை இருக்கும்போது எப்படி அவர் தற்கொலை செய்து கொள்வார்? இந்த மரணத்தில் மர்மம் இருக்கிறது. குமுதாவின் மரணத்திற்கு அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரே காரணம்" என்று குமுதாவின் உறவினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

நான் ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்று வாங்கனுமுன்னா அவ்ளோ பேரு கிட்னியும் கழட்டனும்..! திமுக எம்.எல்.ஏ சொல்வது என்ன ?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies