மாமியார் கழுத்தை நெறித்துக் கொலை செய்த மருமகள்
Aug 11, 2025
குறைந்தது தங்கத்தின் விலை - எவ்வளவு தெரியுமா..?
Aug 11, 2025
இந்தியா
100 + அந்தரங்க வீடியோக்கள்.. பெண் அரசியல் லீடர் பெட்ரூமில் உளவு.. மகன் போல் வளர்த்தவர் துரோகம்.. புயலை கிளப்பிய பொலிடிகல் மர்டர்..!
Jul 15, 2025 05:30 AM
486
புயலை கிளப்பிய பொலிடிகல் மர்டர்
பெண் அரசியல் லீடர் படுக்கை அறையில் ரகசிய கேமரா... மகனைப் போல் வளர்க்கப்பட்டவர் செய்த பச்சை துரோகம்...உளவு பார்க்கச் சொன்ன அரசியல்வாதி...காட்டிக்கொடுத்த டாட்டூ... காளகஸ்தியில் கொலை, சென்னை கூவத்தில் வீசிய கொடூரம்... ஆந்திர அரசியலில் புயலை கிளப்பிய பொலிடிகல் மர்டர்... அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சிப் பின்னணி குறித்து விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு...
நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் காளஹஸ்தி தொகுதி பொறுப்பாளரான வினுதா கோட்டா என்பவரிடம், கார் ஓட்டுநராகவும், உதவியாளராகவும் பணியாற்றி வந்தவர், 22 வயது இளைஞர் ஸ்ரீனிவாசலு. இவரை மிகக்கொடூரமாக சித்திரவதைக்குள்ளாகி படுகொலை செய்து, சென்னை பேசின் பாலம் கூவம் ஆற்றில் கடந்த 8 ஆம் தேதி சடலத்தை, வீசியதாக காளஹஸ்தி தொகுதி பொறுப்பாளர் வினுதா கோட்டா, அவரது கணவர் சந்திரபாபு, திருப்பதியைச் சேர்ந்த உதவியாளர் கோபி, கார் ஓட்டுநர் ஷேக்தாசன் ஆகியோரை, சென்னை ஏழுகிணறு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கைதான வினுதா கோட்டாவை ஏழுகிணறு போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. கொலை செய்யப்பட்ட ஸ்ரீனிவாசலு கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து வினுதா கோட்டா வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். மிகவும் நம்பிக்கையானவராகவும் மகனைப்போல வளர்க்கப்பட்டார் எனவும் கூறப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு, ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஆசைப்பட்ட காளஹஸ்தி தொகுதியை வினுதா கோட்டாவிற்கு கொடுக்கப்பட இருந்தது. ஆனால், கூட்டணி கட்சியான தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த பஜாலா சுதீர் ரெட்டியும் இதே தொகுதியை கேட்டு பெற்று தேர்தலில், வெற்றியும் பெற்று எம்.எல்.ஏ ஆனார். இதனால், 2 பேருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
மேலும் என்றைக்கு இருந்தாலும் வினுதா தனக்கு எதிரானவர். எனவே, அவரது அரசியல் செல்வாக்கை காலி செய்ய திட்டமிட்ட எம்எல்ஏ சுதீர், வினுதாவிற்கு மிக நம்பிக்கையானவராக இருந்த ஸ்ரீனிவாசலுவை பணம் கொடுத்து, வினுதா கோட்டா தொடர்பாக ரகசிய தகவல்களை பெற்று வந்ததாக கூறப்படுகிறது . மேலும் வினுதா கோட்டாவின் படுக்கையறையில் செல்போனை ஆன் செய்து வைத்து வீடியோ பதிவு செய்து ஸ்ரீனிவாசலு அதனை பஜாலா சுதீர் ரெட்டிக்கு அனுப்பியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உடை மாற்றும்போது வினுதா கோட்டா, கட்டிலுக்கு அடியில் செல்போனை மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு பிடித்துள்ளார். இதையடுத்து, ஸ்ரீனிவாசலுவை அடித்து உதைத்து விசாரித்தபோது, பஜாலா சுதீர் ரெட்டியிடம் ரூ. 30 லட்சம் வாங்கி கொண்டு ஃபோட்டோ, வீடியோ எடுத்து கொடுத்ததாகவும் கட்சியின் ரகசியங்களை தெரிவித்ததாகவும் அவர் கூறியதும் அதிர்ச்சி அடைந்ததாக கைதான வினுதா கோட்டா வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பெங்களூருவில் உள்ள சைபர் ஆய்வகத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக செல்ஃபோனை அனுப்பி, சோதனை செய்த போது தனது அந்தரங்கப்படங்கள் மட்டுமின்றி தன்னுடைய அடுத்தடுத்த நகர்வுகளையும் ஸ்ரீனிவாசலு தெரிவித்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தாகவும், 100க்கும் மேற்பட்ட தன்னுடைய வீடியோக்கள் இருந்துள்ளதை கண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து, கட்சி தலைவர் பவன் கல்யாணிடம் புகார் அளித்துள்ளார். அவர் இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சி தலைவரிடம் பேசுவதாகவும் அதுவரை பொறுமையாக இருக்குமாறும் கூறியுள்ளார். இதனால், இதற்கெல்லாம் காரணம் ஸ்ரீனிவாசலுதான் எனக் கூறி அவரை கட்டி வைத்து தாக்கி சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம், ரகசிய வீடியோக்களால் பஜாலா சுதீர் ரெட்டி தனக்கு பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஸ்ரீனிவாசலுவை பிடித்து மிரட்டுவதற்காக தேடியதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், வினுதா கோட்டா அவரது கணவர் உள்ளிட்டோர், ஸ்ரீனிவாசலுவை வீட்டில் உள்ள அறையிலேயே அடைத்து சித்ரவதை செய்ததோடு, சிசிடிவி கேமரா பொருந்திய அறையில் அடைத்து வைத்து பஜாலா சுதீர் ரெட்டிக்கு எதிரான ஆதரங்களை திரட்ட துவங்கியிருக்கிறார்கள்.
என்னை பற்றிய ரகசியங்களை வீடியோக்களையும் தகவல்களையும் கொடுக்க, சுதீர் ரெட்டி எவ்வளவு பணம் கொடுத்தார்? எவ்வளவு மீதி இருக்கிறது? என்பது தொடர்பாக கேட்டதாக தெரிகிறது. அப்போது, 30 லட்ச ரூபாய் கொடுத்ததாகவும் ஸ்ரீனிவாசலுவிடம் 10 லட்சம் ரூபாய் இருந்ததாகவும் மீதி பணத்தை செலவு செய்து விட்டதாகவும் கூறியதாக தெரிகிறது. அது தொடர்பான ஆதரங்களை கேட்டு சித்திரவதை செய்துள்ளனர்.
இந்த நிலையில் சித்திரவதை தாங்க முடியாமல் ஸ்ரீனிவாசலு கழிவறைக்கு சென்று தூக்கிட்டதாகவும், இதனை, சிசிடிவியில் பார்த்த வினுதா கோட்டாவின் கணவர் சந்திரபாபு கழிவறை கதவை உடைத்து ஸ்ரீனிவாசலு கழுத்தை நெரித்து கொன்றதாக போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தன்னுடைய மகன் போல வளர்த்த ஸ்ரீனிவாசலுவே இதுபோன்ற செயலில் ஈடுபட்டதால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று கைதான வினுதா கோட்டா வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஸ்ரீனிவாசலு உடலை வீட்டில் இருந்து அப்புறப்படுத்த திட்டமிட்டதாகவும் ஆந்திரா பதிவு எண் கொண்ட காரில் உடலை வைத்ததாகவும் கூறப்படுகிறது.
தனது மாமனாருக்கு மருத்துவ சிகிச்சைக்காக அதே காரில் ஏற்றி சென்னைக்கு வந்ததாகவும், வரும் வழியில் கார் பழுதானதால் தமிழ்நாடு பதிவு எண் கொண்ட காரை வரவழைத்து ஸ்ரீனிவாசலு உடலை மாற்றியதாகவும் கைதான வினுதா கோட்டா வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிவகுமார், ஷேக் தாசர், கோபி ஆகியோர் தான் உடலை சென்னைக்கு வந்து கூவம் ஆற்றில் வீசியதாகவும் கூறப்படுகிறது.
ஸ்ரீனிவசாலுவின் கையில் வினுதா கோட்டா என தெலுங்கில் டாட்டூ குத்தப்பட்டிருந்ததை வைத்தே, விசாரணையை தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
வழக்கை விசாரித்த மேஜிஸ்ட்ரேட், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். வருகின்ற 27 ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்ததை அடுத்து ஏழு கிணறு போலீசார் அவர்களை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் இன்னும் ஆதாரங்களை திரட்டும் பணி இருப்பதாலும் ஸ்ரீனிவாசலு செல்போனை இதுவரை பறிமுதல் செய்யாததால், சிறையில் அடைக்கப்பட்டுள்ள வினுதா கோட்டா, அவரது கணவர் சந்திரபாபுவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஏழுகிணறு போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான மனுவை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.
ஆனால், கைதான வினுதா கோட்டாவோ “அரசியல் சூழ்ச்சியால் சிறைக்கு செல்கிறேன்...தமக்கும் இந்த கொலைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை...திட்டமிட்டு என் மீது பழி போட்டப்பட்டுள்ளனர்...சிறையில் இருந்து வந்த பிறகு அவர்களைப் பார்த்துக் கொள்வேன்” என ஆவேசமாக கூறிச் சென்றிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu