BIG STORIES
பரோட்டாவில் கை வைத்தார் உடலில் உயிர் இல்லை...! அருவா எடுத்த ரவுடி அவுட்..! காவல் நிலையம் அருகே நடந்தது என்ன ?
Jul 16, 2025 01:09 AM
387
பரோட்டாவில் கை வைத்தார் உடலில் உயிர் இல்லை...! அருவா எடுத்த ரவுடி அவுட்..!
சேலத்தில் நிபந்தனை ஜாமீனுக்கு கையெழுத்து போட சென்ற இளைஞர் , காவல் நிலையம் அருகில் உள்ள ஓட்டலில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடியில் கப்பல் மாலுமி கொலைக்கு பழிக்கு பழியாக நடந்ததா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையம் அருகே உள்ள உணவகம் ஒன்றிற்கு இளைஞர் ஒருவர் தனது மனைவியுடன் சாப்பிடச்சென்றார். ஓட்டலில் அமர்ந்து பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்த போது பின்னால் இருந்து வந்த 6 பேர் கும்பல் அரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அந்த இளைஞரை கொடூரமாக வெட்டி கூறுபோட்டு விட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர்
சம்பவ இடத்துக்கு வந்த அஸ்தம்பட்டி போலீசார் குப்புற படுத்தபடி சடலமாக கிடந்த மதனையும் அவருக்கு அருகில் ரப்பரிலான வலது கை ஒன்றையும் கைப்பற்றினர். ஏற்கனவே ஒரு தாக்குதல் முயற்சியில் மதன் தப்பியதாகவும் அப்போது அவரது வலது மணிக்கட்டு வரை துண்டானதாகவும் கூறப்படுகின்றது. அதனை மறைப்பதற்காக வலது கை மணிகட்டுக்கு கீழ் 5 விரல்களை கொண்ட ரப்பரிலான செயற்கை கையை பொறுத்தி இருந்ததாக கூறப்படுகின்றது.
இடது கையால் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வலது கையால் தடுத்த போது செயற்கை கை தனியாக கழண்டு கொண்டதாக கூறப்படுகின்றது. பட்டபகலில் காவல் நிலையம் அருகே நடந்த இந்த கொடூர கொலை சம்பவத்தால் அந்தப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இரண்டு பைக்குகளில் 6 பேர் கும்பல் தப்பிச்செல்லும் காட்சி அருகில் உள்ள தேனீர் கடையில் உள்ள சிசிடிவியில் பதிவாகி இருந்தது. அதனை வைத்து போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
பழக்குபழியாக இந்த கொலை நடந்ததாக என போலீசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் தூத்துக்குடி திரேஸ் புரம் சாலையில் மதன்குமார் அதிவேகமாக பைக்கில் சென்றதாகவும், இதனை அங்கு வசித்த கப்பல் மாலுமியான மரடோனா என்பவர் தட்டிக்கேட்டதாகவும் கூறப்படுகின்றது. அப்போது போதையில் இருந்த மதன்குமார் நண்பர்களுடன் சேர்ந்து மரடோனாவை வெட்டிக் கொலை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து ஜாமீன் கேட்டு மதன்குமார் மனுதாக்கல் செய்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி நிபந்தனை ஜாமீன் கையெழுத்திட, மதனும் ,அவனது மனைவியும் கடந்த ஒன்பதாம் தேதி தூத்துக்குடியில் இருந்து சேலம் வந்து பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.
கடந்த பத்தாம் தேதி முதல் தினமும் மதன் காலை மற்றும் மாலையில் அஸ்தம்பட்டி காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு வந்து உள்ளார். இந்த நிலையில் சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையம் வந்து கையெழுத்து போட்டு விட்டு சென்ற சிறிது நேரத்தில் இந்த கொடூர கொலை சம்பவம் நிகழ்த்தப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர் .
மதன் கொலை செய்யப்பட்டதும் அவரது மனைவி மோனிஷா அஸ்தம்பட்டி காவல் நிலையம் சென்று தஞ்சம் அடைந்தார். இவரிடம் போலீஸ் உதவி கமிஷனர் அஸ்வினி தலைமையிலான போலீசார் விசாரித்தனர்.
இதன் பின்னர் அஸ்வினியும் மதனும் தங்கி இருந்த லாட்ஜுக்கு சென்று மதன் ஏதும் ஆயுதங்கள் பதுக்கி
வைத்துள்ளாரா? வேறு ஏதும் ஆவணங்கள் உள்ளதா ? என சோதனை செய்து பார்த்தனர்.
கொல்லப்பட்ட மதன்குமாருக்கு 27 வயது. தூத்துக்குடி வடபாகம் தந்தை பெரியார் நகரில் வசித்து வந்த மதன் மீது 2 கொலை, 3 கொலை முயற்சி என 5 வழக்குகள் உள்ளதாகவும், ஆரம்பத்தில் கெத்துக் காட்டுவதற்காக கத்தியுடன் சுற்றியவரின், கதை அரிவாளால் முடித்து வைக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu