முகப்பு
4 வயது குழந்தையை கவ்விச்சென்ற சிறுத்தை... பாதி உடல் மட்டுமே, மீதி உடல் எங்கே?
Jun 21, 2025 04:09 PM
177
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது குழந்தை தேடுதல் வேட்டையில் நடந்த பரிதாபம்!
கோவை மாவட்டம், வால்பாறை மலைப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட எஸ்டேட்டுகள் உள்ளன. இங்கு, பல்லாயிரக்கணக்கான தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, வட மாநிலங்களைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்களும் அதிகளவில் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்கள், பெரும்பாலும் எஸ்டேட்டுக்கு சொந்தமான லைன் வீடுகள் எனப்படும் வரிசையாக கட்டப்பட்ட வீடுகளில் தான் தங்கியுள்ளார்கள். இப்படிப்பட்ட வீடுகள் இருக்கும் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும்.
இதனால், மனித – வனவிலங்கு மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்துகொண்டே இருக்கும். இந்நிலையில்தான், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ்முந்தா மற்றும் மோனிகா தேவி தம்பதியர் பச்சைமலை எஸ்டேட்டில் பணியாற்றுவதால், லைன் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். இதில், மூத்த மகளான 4 வயது ரோஷினி, இரவு வீட்டின் முன்பு எப்போதும்போல விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது, தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை கண் இமைக்கும் நேரத்தில் திடீரென பாய்ந்து குழந்தையை தூக்கிச் சென்றது அப்பகுதியினரை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தையின் தாய் அலறித் துடித்ததைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்து தேட ஆரம்பித்தனர். ஆனால், அப்போது குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து, வனத்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். வால்பாறையில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் தேடுதல் பணியில் சவால் ஏற்பட்டது. விடியற்காலை 3 மணிவரை தேடுதல் வேட்டை தொடர்ந்தது. மீண்டும் காலை 6 மணிக்கு தொடர்ந்து தேட ஆரம்பித்தனர்.
மோப்ப நாய் வீரா மற்றும் டிரோன் கேமரா உதவியுடன் சிறுமியின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. அப்போதுதான், வீட்டின் 300 மீட்டர் தொலைவில் ஒரு புதருக்குள் கால் தனியாக உடல் தனியாக என பாதி உடல் மட்டுமே கண்டெடுக்கப்பட்ட, சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல், வால்பாறையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஒரு சிறுமியை சிறுத்தை தூக்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற கொடூர சம்பவங்களால் வால்பாறை மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu