மாமியார் கழுத்தை நெறித்துக் கொலை செய்த மருமகள்
Aug 11, 2025
தமிழ்நாடு
கந்து வட்டிக்கு பயந்து கிட்னியை விற்கிறார்கள் - இந்திய கம்யூ. குற்றச்சாட்டு.. தொழில்கள் நலிவடைந்ததாக வேதனை..!
Jul 21, 2025 04:19 PM
102
கந்து வட்டிக்கு பயந்து கிட்னியை விற்கிறார்கள்
நாமக்கல் பள்ளிப்பாளையம், குமாரபாளையம் சுற்று வட்டார பகுதியில் சிறு தொழில்கள் நாளுக்கு நாள் நலிவடைந்து வரும் நிலையில், ஏழைத்தொழிலாளிகள் வேலைவாய்ப்புகளை இழந்து, கந்து வட்டி கொடுமைகளால் கிட்னியை விற்று உயிர் வாழும் நிலைக்கு தள்ளப்ப்ட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து அரங்கேறி உள்ள கிட்னி விற்பனை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் மருத்துவ குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கிட்னி விற்பனை விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றது.
கிட்னி விற்பனைக்கு தரகராக செயல்பட்ட , பள்ளிபாளையம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த திமுகவை சேர்ந்த ஆனந்தன் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக பள்ளிபாளையத்தில் கிட்னி விற்பனை செய்துள்ள தொழிலாளர்கள் குறித்தும், இடை தரகர்கள் குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.வெப்படை அடுத்துள்ள சாமண்டூர் என்ற கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி லட்சுமணன் என்பவர் 2024 டிசம்பர் மாத இறுதியில் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களில் பெற்ற கடன் தொகையை அடைக்க வழி இன்றி கதிர் என்ற இடைதரகர் மூலம் தனது கிட்னியை திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு விற்பனை செய்ததாக தெரிவித்தார்.
யாரென்றே தெரியாத நபரை தனது தாய்மாமா என்று பொய் சொல்லவைத்து கிட்னியை தானம் செய்ய வைத்ததாகவும், அதற்காக தனக்கு 5 லட்சம் ரூபாய் தொகை பேசப்பட்டு 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் லட்சுமணன் குற்றம் சாட்டினார்.
காலை முதல் இரவு வரை மைக்ரோ பைனான்ஸ் கலெக்சன் ஊழியர்கள் வீட்டில் அமர்ந்து கொண்டு கடுமையாக மிரட்டியதாக தெரிவித்த லட்சுமணன், தனது அத்தை மகளும் கிட்னியை விற்றதாகவும், அவரை பார்த்து தானும் கிட்னியை விற்று கடனை அடைக்க முடிவு செய்ததாக தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் இணைந்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் கிட்னி விற்பனையில் ஈடுபட புரோக்கர்களாக இருந்த நபர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகார் அளித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் கிட்னி விற்பனைக்கு மூல பிரச்சினையாக உள்ள மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களை முறைப்படுத்தவும், உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், மேலும் கிட்னி விற்பனையில் பாதிக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு தமிழக அரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
சிறு தொழில்கள் நலிவடைந்து உடல் உறுப்புகளை விற்று உயிர்வாழும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu