முகப்பு
அட்டாக் மனைவி.. off ஆன கணவர் அலுவலக தோழிக்கு அடி உதை..! விவாகரத்து வழக்கால் ஆவேசம்
Jun 21, 2025 03:50 PM
166
கணவனின் அலுவலக தோழிக்கு அடி உதை..! ஆக்ரோச மனைவி.. அரவணைத்தும் பலனில்லை
தனது மனைவி மாற்றுத்திறனாளியான தன்னை தாக்கிவிட்டதாகவும், போலீசார் வழக்குபதிவு செய்யவில்லை என்றும் கணவர் ஒருவர் , மாற்று திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில் சிசிடிவி காட்சியுடன் புகார் அளித்தார்
இந்த அதிரி புதிரியான ஆக்சன் காட்சியில் எந்த இடத்திலும் கணவர் மீது அடி விழவில்லை, மனைவியின் போக்கஸ் முழுவதும் அலுவலகத்தில் உள்ள அந்த குறிப்பிட்ட பெண் மீது மட்டுமே இருப்பது தெரிந்தது. இது குறித்து போலீசில் விசாரித்த போது மாற்றுத்திரனாளி கணவர் சொல்ல மறந்த கதை வெளிச்சத்திற்கு வந்தது.
சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான செந்தில் நாதன். இவரது மனைவி ரமணி இவர்களுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் செந்தில் நாதன் பணிபுரிந்து வரும் அலுவலகத்தை நிர்வாகித்து வரும் ரேகா மீது சந்தேகப்பட்டு ரமணி பேசியதால் கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறு பாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். தற்போது இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடந்து வரும் நிலையில் குடும்ப செலவுக்கு பணம் கேட்டும் கொடுக்காததால் செந்தில் நாதன் மீது ரமணி ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது.
கடந்த 10 ந்தேதி கணவர் செந்தில் நாதன் வேலைபார்க்கும் , ரேகாவின் அலுவலகத்திற்கு தனது தாய் மற்றும் சகோதரர் உடன் சென்றுள்ளார் ரமணி. அண்ணனும், அம்மாவும் வெளியில் நிற்க அலுவலகத்திற்குள் சென்ற ரமணி, உள்பக்க அறையில் ரேகாவுடன் தனது கணவர் அமர்ந்திருப்பதை பார்த்ததும் பத்திரகாளியாக மாறி, ரேகாவை பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகின்றது
“என்னோட வாழ்க்கையை நாசமாக்கியதே நீ தான்” என்று ரேகா மீது கையில் கிடைத்தை எல்லாம் தூக்கி வீசினார்,
“வாழ்க்கையை அழிச்சிட்டியேடா “ என்று கணவரையும் கடுமையாக திட்டிய ரமணியை அங்கிருந்தவர்களும், செந்தில் நாதனும் பிடித்து வெளியே தள்ளி கதவை சாத்தினார்
ரமணியை வெளியே தள்ளி கதவை சாத்தியதும், ரேகா குரலை உயர்த்தி கடுமையாக திட்டிக் கொண்டே இருந்தார்
இதனால் ஆத்திரம் அடைந்த ரமணி ஆவேசமாகி முன்பக்க கதவின் கண்ணாடியை உடைத்ததாகவும் , செந்தில் நாதன் வெளியே சென்று மனைவியை தாக்கியதாகவும் கூறப்படுகின்றது
இதையடுத்து வெளியே நின்ற ரமணியின் சகோதரர் மோகனும், தாய் தேவியும் அலுவலகத்திற்குள் புகுந்து செந்தில் நாதனையும் ரேகாவையும் தாக்கினர். இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கவிடாமல் அரவணைத்து தற்காத்துக் கொள்ள முயன்றனர். இதில் நிலைதடுமாறி செந்தில் நாதன் கீழே விழுந்தார்
இதையடுத்து ரேகா அளித்த புகாரின் பேரில் ரமணி, தாய் தேவி சகோதரர் மோகன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றதால் அவர்களை போலீசார் கைது செய்யவில்லை என்று கூறப்படுகின்றது. இந்த நிலையில் அலுவலகம் புகுந்து அலுவலக தோழி ரேகாவையும் தன்னியும் தாக்கிய மனைவி குடும்பத்தினரைசிறைப்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கி உள்ள செந்தில் நாதன் , தன்னை மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் மனைவி தாக்கியதாக அளித்த புகாரின் பேரில் மாற்றுத்திறனாளியை தாக்குதல் என்ற சட்டபிரிவின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறி மாற்றுத்திறனாளிகள் ஆணையத்தை நாடியிருப்பது தெரியவந்தது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu